Tuesday, 30 September 2014
Monday, 29 September 2014
விளையாட்டு
கோலி
கண்ணாமூச்சி
கில்லி தாண்டா
மாண்டா பம்பரம்
மாஞ்சா நூல் பட்டம்
ஏழாங்காய்
பச்சைக் குதிரை
பல்லாங்குழி
ஒரு குடம் தண்ணி மொண்டு ஒரே பூ பூத்தது ...
முல்லைப் பூவே முல்லைப் பூவே மெல்ல வந்து கிள்ளிட்டுப் போ
என அத்தனையும் ஏப்பம் விட்டு
சுட்டித்தனத்தை கட்டிப் போட்டு
எங்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தோடு
விளையாடிவிட்டது
தொலைக் காட்சி .
தொலைக் காட்சி .
Sunday, 28 September 2014
கலவரம்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்
பிய்ந்து போன காலணிகள்
உடைந்து நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகள்
உறைந்துபோய் திட்டு திட்டாய்
இரத்தக் குளங்கள் ...!
எரிந்து புகைந்துகொண்டிருக்கும்
இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும்
கதறிப் பரிதவித்த
மானிட ஓலங்கள் தொலைத்து
மௌனத்தை மட்டுமே சாட்சியாய்
மிச்சம் வைத்திருக்கிறது
கலவரம் ஒடுக்கப்பட்டு
கலைந்து கிடக்கிற சாலை !
பிய்ந்து போன காலணிகள்
உடைந்து நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகள்
உறைந்துபோய் திட்டு திட்டாய்
இரத்தக் குளங்கள் ...!
எரிந்து புகைந்துகொண்டிருக்கும்
இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும்
கதறிப் பரிதவித்த
மானிட ஓலங்கள் தொலைத்து
மௌனத்தை மட்டுமே சாட்சியாய்
மிச்சம் வைத்திருக்கிறது
கலவரம் ஒடுக்கப்பட்டு
கலைந்து கிடக்கிற சாலை !
Thursday, 25 September 2014
Subscribe to:
Posts (Atom)