Saturday, 25 October 2014

கனவு

புதிதாய் பூத்த பொன் காலைப் பொழுது ....

கண்விழித்துப் பார்த்தேன் ...

என் ஜன்னலுக்கு வெளியே மழை ....

விடியல் ... கனவிலா ...?

கனவு பலிக்குமா ...?


Sunday, 12 October 2014

கனவுகள்

எத்தனையோபேர் கனவுகளும் 

உழைப்பும் சேமிப்பும் 

அடகுத் தாலியும் 

வங்கிக்கடனும் 

துருப்பிடித்துப்போய் 

கேட்பார் அற்றுக் கிடக்கின்றன

காவல்துறை வளாகத்தில் 

இருசக்கர வாகனங்கள் ...! 


விந்தைதான்

விந்தைதான் 

வேண்டாம்  என்று 

வெறுப்புடன் வீசி எறிகிறபோது 

குப்பையாவதெல்லாம்

வறியவர்கள்

விரும்பிச் சேகரிக்கும்போது 

செல்வமாகின்றனவே ...!

விந்தைதான் ! 

 

 

 

Tuesday, 7 October 2014

அரிவாள் மூக்கு

கடலூர் சிதம்பரம் சாலையில் ...

திருச்சோபுரத்திற்கு அருகே உள்ளது 

அரிவாள் மூக்கு என்ற சிற்றுலாத் தலம் 

(சுற்றுலா அல்ல  -சிற்றுலா -பிக் நிக் ஸ்பாட் ) 

ஒரு குட்டி ஜெய் சல்மீர் பாலைவனத்தை 

நம் கண்முன் காணலாம் ஜெய்ப்பூர் போகாமலேயே ...

ஒருபுறம் பறந்து விரிந்த 

காற்று விளையாடிக்களித்த மணலலை படிந்த 

நிலப்பரப்பு ஒரு சிறு குன்றுபோல்...

மறுபுறம் அழகான வளைந்து 

அரிவாளை நினைவூட்டும் நதி நீரோட்டம் ...

கண்கொள்ளாக் காட்சிதான்  ...

குடும்பத்துடன் சென்று கண்டு விளையாடிக் களிக்க 

அதிகம் செலவு வைக்காத 

மன நிறைவை ...இயற்கையான குளிர்ந்த தென்றலை 

தவழவிடும் தளம்.

மாலை மூன்று மணிக்குமேல் ஆறு மணிவரை

ரம்மியமாக காட்சி அளிக்கும் இடம் 

அதற்குப் பின் அதாவது இருட்டியபின் சற்றே அச்சத்தை தோற்றுவிக்கும் ..

திருச்சோ புர நாதர் கோவிலும் வணங்கி மகிழத்தக்க திருத்தலம் .

அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிவலிங்க மூர்த்தி 

நால்வரால் பாடப்பட்டது .

ஒருமுறை சென்று வரலாமே! 


Add caption











விசாரிப்பு

நிலையறியாது படுக்கையில் நான் ...

சாளரம் வழியே 

தன்  கிரணக் கரம் நுழைத்து 

நலம் விசாரிக்கிறது நிலா !




நேர்மறை

எத்தனைதான் 

எட்டி எட்டி மிதித்தாலும் 

முன்னோக்கி மட்டுமே 

நகரக் கற்றிருக்கிறது 

மிதிவண்டி ....!




பாலபிஷேகம்

ஆலய வாசலில் 

ஏழைக் குழந்தை 

அழுகிறது பாலுக்காய் 

உள்ளே இறைவனுக்குப் 

பாலபிஷேகம்