Thursday 6 February 2014

கவிதைப் போட்டி

            சுவாசிகா இயக்கம் தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான அஞ்சல் வழிக் கவிதைப் போட்டியை நடத்துகின்றது ,கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும்  மாணவர்கள் ,மாணவியர்கள் கலந்துகொள்ளலாம். 
            17-02-2014 அன்றைய தினத்திற்குள் கவிதையை அனுப்பிட வேண்டும்.15 வரிகளுக்குக் குறையாமலும் 25 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.A4 தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவோ அல்லது தட்டச்சு செய்யப் பட்டோ இருக்கலாம்.தான் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் என்பதற்கான ஆதாரமாக தமது கல்லூரியின் அடையாள அட்டையின் நகல் ஒன்றை அத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
            ஒரு முதல் பரிசு ,ஒரு இரண்டாம் பரிசு, ஒரு மூன்றாம் பரிசு மற்றும் 10 சிறப்புப் பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்படும்.சிறந்த கவிதை நூல்கள் மற்றும் முதல் மூன்று கவிதைகளுக்கு கேடயங்கள் வழங்கப்படும். 
       பரிசுகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் கவிதைகள் சுவாசிக்காவின் முகநூல் பக்கத்தில் பகிரப்படும். தனது முழு முகவரியுடன் தொலைபேசி எண்ணையும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
            கவிதைகளை 
                    அ.முத்துக் குமரன்,           
                     நிறுவனர்,  
                      சுவாசிகா ,
                       81,மெயின் ரோடு 
                        புதுப்பேட்டை, 607108 ,
                           பண்ருட்டி வட்டம் ,
                             கடலூர் மாவட்டம் 
என்ற முகவரிக்கு அனுப்பிவிடவேண்டும்.
        bhuvanaamkn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கவிதைகளை அனுப்பலாம் .
       பரிசுகள் 23-02-2014 அன்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழா அன்று வழங்கப்படும்.பரிசு பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விலாசத்திற்கு தனியாக தகவல் அனுப்பப்படும்.
       வேறு ஐயங்களுக்கு 9842618876 மற்றும் 8608097188 என்ற என்னிலும் தொடர்பு கொள்ளலாம் .