Thursday 8 January 2015

மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா

 



மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து நேரில்
வாழ்த்தி சிறப்பித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .சந்தர்ப்ப சூழலின் காரணமாக .நேரில் வர இயலாவிட்டாலும் முகநூல் மற்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் .விழாவின் வெற்றிக்கு அடிநாதமாக இருந்த என் அன்பு மாணவச் செல்வங்களுக்கு -குறிப்பாக மகேஷ்,சரவணன், ராஜலிங்கம்,மதன் ,சுந்தர்,கிருஷ்ணன்,ராஜி ,ரூபி,ப்ரியா,யுவநிதி ,நிரஞ்சன் பாலாஜி மற்றும் பல மாணவர்களுக்கு -மூன்றெழுத்தில் நன்றி என்ற ஒற்றைச் சொல் கூறி என் உள்ளத்தின் அத்துணை உணர்வுகளின் நெகிழ்ச்சிக் கலவையை அர்ப்பணிக்கின்றேன்.இன்னொரு செய்தியும் கண்டிப்பாக இங்கே குறிப்பிட்டே ஆக  வேண்டும்.எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு ஆசிரிய சகோதரிக்கு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி கூறிய போது அவர் இவ்வாறு கூறினார்..."விழா மிக சிறப்பாக இருந்தது ...குறிப்பாக உங்கள் நூலை நேற்று இரவே வாசித்தேன்... எல்லா கவிதைகளுமே மிக அருமை ...குறிப்பாக நிறைய கவிதை வரிகள் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் பொருந்திப் போகின்றன ....சில வரிகள் என் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தது போல் உணர்கிறேன் " என்று சொல்லும்போதே அவரது கண்கள் சிவந்து கண்ணீரை எட்டிப் பார்க்கச் செய்தன. அந்தக்  கண்ணீர் துளிகளை நான் என் கவிதை வரிகளுக்கான அன்கீகாரமாய்க் கருதுகிறேன்.....என் 1000 பிரதிகளுக்கான  விலையாகக் கருதுகிறேன்... அந்த 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததாய் உணர்கிறேன்....நன்றி சகோதரி...!அதே போல் அங்கு செட்டிப் பாளையம் ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் சாரதா பள்ளியின் நிர்வாகி நடராஜன் அய்யா போன்றோர் 6 நூல்களை வாங்கி தன நண்பர்களுக்கு பரிசளித்ததாகக் கேள்வியுற்றேன்.மிக்க நன்றிகள் அவர்களுக்கும் .எனது நூல்களை வாசித்த பிற முக நூல் நண்பர்களின் எனது நூல் பற்றிய கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்...!