Monday 30 April 2018

என் அம்மா

          மே - 1 , உழைப்பாளர் .தினம்.. எங்கள் தாயார் திருமதி சுந்தரவல்லி அப்பர்சாமி அவர்களின் பிறந்த நாள் இன்று .அம்மா என்ற உறவே எல்லோருக்குமே ரொம்ப ஸ்பெஷல்தானே ...
         எல்லா அம்மாக்களையும்  போல்தான் ...என் அம்மாவும் ..நான் செய்யும் சேவைகள் தொடர்பாக எதுவுமே அவர்களுக்கு பிடிக்காது ..ஸ்வாசிகா சமூகப் பணிகள் ,விழாக்கள்,ஓவியம் சிற்பக்க கலை தேடல்கள் சார்ந்த என் பயணங்கள்,சாரணர் சேவைகள் ,மாணவர்களுடனான சுற்றுலாக்கள் ,எனது நூல் சேகரிப்பு , கவிதை நூல் வெளியீடு ...என்று அனைத்துக்குமே அவர்கள் சற்றே எதிர்ப்புதான் ...
          இப்படியே வெளியில அலைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துக்கற ... புத்தகம் ,செடி அப்படின்னு இப்படி காசை வீணாக்கறியே என்று சதா ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார் .
          ஆனால் என் செயல்கள் அவர்களுக்கு உள்ளூர பெருமைதான் ...எனக்குத் தெரியாமல் ,அனைவரிடமும் இவை குறித்து பெருமையாகப் பேசுவாராம் ...என் கவிதைகளை படித்து என்னிடம் சிலாகித்துப் பேசுவார் ...
          அதுதான் அம்மா ...என் அம்மா ....

          ஆரோக்கியமாக வாழ வாழ்த்துங்கள் முக நூல் சொந்தங்களே !



Wednesday 18 April 2018

அப்பாளு .C .சம்பந்தம்

அப்பாளு .C .சம்பந்தம்
தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .
அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .
அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .
ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,செட்டியார் பொம்மைகள் உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,தசாவதார செட் ,சரஸ்வதி போன்றவையும் புகழ்பெற்றவையே .
இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .
தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் அத்துனைபேர் இல்லங்களிலும் இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் நானும் இவரைப் பற்றியும் இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளாக ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு நமது ஸ்வாசிகா இயக்கம் காகிதக் கூழ் கலைச்   செம்மல் என்ற பெருமை மிகு விருதினை அளித்துப் பாராட்டுகிறது .

நன்றி அண்ணா










Monday 16 April 2018

நிருபர் அவர்கள் ,

ஐயா,
     
       வணக்கம்
       எங்கள் ஸ்வாசிகா இயக்கம் கடந்த 22 ஆண்டுகளாக கோடைக்காலத்தில் ஓவிய ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலன் பெறும்வண்ணம் இலவச ஓவிய பயிற்சி முகாமையும் ,ஓவியப் போட்டி ,ஓவியக் கண்காட்சி ,பிரபல ஓவியர்கள் உடனான சந்திப்பு ஆகியவற்றையும் நிகழ்த்திவருகிறது . இம்முகாம் மூலம் பல மாணவர்கள் கவின்கலைக் கல்லூரிகளில் சேர்ந்து ஓவியக் கலை வித்தகர்கள் ஆகி ஓவியம் சார்ந்த பல்வேறு உயர்   பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.
        இவ்வருடம் எங்கள் இயக்கம் 23 ஆவது ஆண்டு  கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாமை மே -1  முதல் மே-10 வரை   பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்துகிறது .ஆர்வம் கொண்ட  மாணவ மாணவியர் மே மாதம் -1 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு பள்ளி வளாகம் வருகைதந்து தங்கள் பெயரை பதிவு  செய்து அன்றே பயிற்சியில் இணைந்திடலாம் .அது பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தையும் இத்துடன்   இணைத்துள்ளோம் .இச் செய்தியினை தங்கள்  நாளிதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

அன்புடன் ,
முத்துக் குமரன் ,
நிறுவனர் ,
ஸ்வாசிகா ,
புதுப்பேட்டை,பண்ணுருட்டி













 ?


Thursday 12 April 2018

உயிரும் உணர்வும் தமிழே

உயிரும் உணர்வும் தமிழே

பேசும் மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழே
நேசம் வைத்திடுவோம் எங்கள் தாய்மொழி தமிழே
தமிழ் தமிழ் என்னும் போதினிலே ..
அமிழ்தம் பாயுது காதினிலே ...
நாம் அலாதி இன்பம் காண்பது
தமிழ்மொழி பேசும் வேளையிலே ..! (பேசும்)

கல் தோன்றும்  முன்னே  மண் தோன்றும் முன்னே
முன் தோன்றி வளர் மொழி தமிழே .!
காலத்தை வென்றும் தேசத்தை வென்றும்
வாசம்தான் வீசும் மொழி தமிழே !

நம் ஊனோடும்  உயிரோடும்  உணர்வோடும் கலந்து
ஒன்றாக நிற்கும் மொழி தமிழே !
வானோங்கி வளரும் தமிழர்தம் புகழை
மென்மேலும் வளர்ப்பது தமிழே !

தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் அன்னைதான் எங்கள் வாழ்வே ...!

தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
என நாளும் பாடி
தமிழுக்காய்ப் போகும் எங்கள் உயிரே ...!  (பேசும்)

இது கவிதை ...பாடல் ...கவிதை பாடல் ...இசையோடு பாடவும் நன்று !

கவிஞர் - அ .முத்துக் குமரன்


Muthu Kumaran .A
Drawing Master ,GHSS,PANRUTI,
13,2ND CROSS STREET, PATTU SAMY NAGAR ,
KOTTALAAMPAAKKAM,
PUTHUPET (PO)
607108
PANRUTI TK
CUDDALORE DT 

9842618876
8608097188













ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் -2018

ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் 23 ஆம்  ஆண்டாக நடைபெற இருக்கிறது . 
மே 1 ஸ்வாசிகாவின் பிறந்தாநாளை முன்னிட்டு நாங்கள் 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தும் ஓவியப் பயிற்சி முகாம்.
23 ஆம் ஆண்டில்...மே 1 முதல் மே 10 வரை ....
கோடையிலே கோலாகலக் கொண்டாட்டம் ....
ராஜா ரவிவர்மாவின் திரு உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்படும் .
ஸ்வாசிகாவின் 23 ஆவது பிறந்தநாளை உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்படும் .. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படும் .
அனைவருக்கும் குறிப்பேடுகள்,பேனா,பென்சில் வழங்கப்படும் .
வயது வாரியாக மாணவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன,
ஓவிய அடிப்படைகளுடன் சித்திரப் பயிற்சி இனிதே துவங்கும்

தொடர்ந்து 10 நாட்களும் நானும் இன்னும் பலநல்ல உள்ளம் கொண்ட சிறந்த ஓவியக் கலைஞர்களும் இணைந்து பயிற்சிகள் வழங்குகின்றோம்.
இம்முகாமில் பங்கேற்று தம் திறமையை பட்டை தீட்டி இன்று ஓவியக் கலையில் சிறந்துவிளங்கும் எங்கள் மாணவர்களும் எம்மோடு இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள்.
நிறைவு நாள் அன்று போட்டிகளும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சித்திரக் கண்காட்சியும் நடைபெறுகின்றன .
மேலும் பயிற்சி அளித்த கலைஞர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அனைத்துக்கும் மேலாக நான்கு சாதனையாளர்களுக்கு பெருமைமிகு விருது வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற உள்ளது .
அனைவரும் வருகைதந்து  முகாமை ,விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் & சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் ...!