Sunday 23 July 2017

ஆட்சியரின் பாராட்டு

        










     
 கடந்த மே மாத இறுதியில் புதுவை அரசின் அழைப்பை ஏற்று காரைக்காலில் நடை பெற்ற ஓவிய பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு ஓவிய  பயிற்சி அளித்திருந்தேன்.
     
      பள்ளி முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியை திருமதி சித்ரா அவர்கள் நிகழ்வை அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு கிரிவாசன் அவர்கள் எங்களுக்கு அருகிலிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார்.
        அப்போது நான் மாணவர்களுக்கு சிறப்பான முறையிலும் ஆர்வமூட்டும் வகையிலும் ஓவிய பயிற்சி அளித்தமையை,கண்காட்சி அமைத்தமையைப் பாராட்டி காரைக்கால் ஆட்சியர் எனக்கு அனுப்பிய பாராட்டு மடல்.இதனை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
          ஏதோ பயிற்சி அளித்தார்கள்...நாம் அதற்கான ஊக்கத்தொகை & பயணப்படி வழங்கினோம் என்றில்லாமல் ..தனது பல அலுவல்களுக்கு இடையேயும் எங்கள் பயிற்சியை நினைவில்கொண்டு சற்று தாமதமாக அனுப்பினாலும் கூட மறவாமல் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்து என்னை பெருமைப் படுத்திய காரைக்கால் ஆட்சித் தலைவர்
           உயர்திரு ,   P .பார்த்திபன் I A S    அவர்களுக்கு
  
என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருமதி சித்ரா அவர்களுக்கும் திரு.கிரிவாசன் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடைமைப் பட்டுள்ளேன். இது போன்ற தருணங்களே எங்களை தொடர்ந்து சேவைக் களத்தில்  செயலாற்ற  வைக்கின்றன .

Monday 10 July 2017

கோடைக்கால பல் திறன் பயிற்சி - புதுவை

          கடந்த மே மாதம் புதுவை டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சி மையம் நிகழ்த்திய கோடைக்கால பல் திறன் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓவியத்தின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுத் தந்தேன் .

         பயிற்சியானது அதன் இயக்குனர் உயர்திரு துவாரக்நாத் அவர்களின் சீரிய மேற்பார்வையிலும் ,நண்பர்  சதீஷ்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பாலும் மற்ற பணியாளர்களின் உதவியாலும் சிறந்து மிளிர்ந்தது .மாணவர்கள் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் நிறைவு நாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது.

          இருப்பினும் அதற்கான பாராட்டுச் சான்றிதழை எனக்கு தூதஞ்சல் ( கூரியர் சர்வீஸ்....தமிழாக்கம் சரியா...?) மூலம் அனுப்பியிருந்தார்கள் .சான்றிதழை அனுப்ப ஒரு மாத





இடைவெளி ஏற்பட்டபோதும் (நிச்சயமாக அலுவல் காரணமாகவும் பணிச் சுமை காரணமாகவும் இக் காலதாமதம் நிகழ்ந்திருக்கலாம்...ஏனென்றால் இதுமட்டுமே அவர்களுக்கான பணியில்லையே) மறவாமல் அனுப்பிவைத்த நண்பர் சதீஷ் மற்றும் குழுவினரின்  கடமை உணர்வுக்கும் அன்புக்கும் தலை வணங்குகிறேன்.

            இயக்குனர் துவாரகநாத் அவர்களுக்கும்,நண்பர் சதீஷ் அவர்களுக்கும் இவ்வாய்ப்புக்கு காரணமாய் அமைந்த கவிதை கணேசன் அய்யாவுக்கு நன்றிகள் பல ...!