Monday, 10 July 2017

கோடைக்கால பல் திறன் பயிற்சி - புதுவை

          கடந்த மே மாதம் புதுவை டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சி மையம் நிகழ்த்திய கோடைக்கால பல் திறன் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓவியத்தின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுத் தந்தேன் .

         பயிற்சியானது அதன் இயக்குனர் உயர்திரு துவாரக்நாத் அவர்களின் சீரிய மேற்பார்வையிலும் ,நண்பர்  சதீஷ்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பாலும் மற்ற பணியாளர்களின் உதவியாலும் சிறந்து மிளிர்ந்தது .மாணவர்கள் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் நிறைவு நாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது.

          இருப்பினும் அதற்கான பாராட்டுச் சான்றிதழை எனக்கு தூதஞ்சல் ( கூரியர் சர்வீஸ்....தமிழாக்கம் சரியா...?) மூலம் அனுப்பியிருந்தார்கள் .சான்றிதழை அனுப்ப ஒரு மாத





இடைவெளி ஏற்பட்டபோதும் (நிச்சயமாக அலுவல் காரணமாகவும் பணிச் சுமை காரணமாகவும் இக் காலதாமதம் நிகழ்ந்திருக்கலாம்...ஏனென்றால் இதுமட்டுமே அவர்களுக்கான பணியில்லையே) மறவாமல் அனுப்பிவைத்த நண்பர் சதீஷ் மற்றும் குழுவினரின்  கடமை உணர்வுக்கும் அன்புக்கும் தலை வணங்குகிறேன்.

            இயக்குனர் துவாரகநாத் அவர்களுக்கும்,நண்பர் சதீஷ் அவர்களுக்கும் இவ்வாய்ப்புக்கு காரணமாய் அமைந்த கவிதை கணேசன் அய்யாவுக்கு நன்றிகள் பல ...!

No comments:

Post a Comment