Friday 20 February 2015

MESSENGER OF PEACE STAR -2014

     MESSENGER OF PEACE STAR -2014 ........என்ற பெருமை மிகு சர்வ தேச விருது கிடைத்துள்ளது ,இதனை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு .ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார் .சாரண இயக்கம் ஒரு சர்வதேச இயக்கமாகும்.இதில் உலகமெங்கும் உள்ள சாரணர்கள் உறுப்பினர்களாக இணைந்து சாரணர் சேவை ஆற்றி வருகின்றனர்.நமது பள்ளியின் சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களும் இதில் இணைந்து தம் பள்ளி சாரணர்களின் சேவைகளை SCOUT.ORG என்னும்   இணைய தளத்தில் பதிவேற்றி  வந்துகொண்டிருக்கிறார் .பல்வேறு நாடுகளை சேர்ந்த சாரணர்களும் உலக அமைதிக்காகவும் ,நல வாழ்வுக்காகவும் ,தம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமது பங்களிப்பைத் தந்து அது பற்றிய விபரங்களை   ...........என்ற இந்த இணைய தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் திரு முத்துக் குமரன் அவர்களுக்கு  உலக அளவிலான
        இதில் சாரணர் சேவையில் தொண்டு நேரக் கணக்கில் பிலிப்பைன்ஸ் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை பதிவு செய்து பங்களித்திருக்கிறார் .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை,43 வகையான சேவை நிகழ்வுகளை  பதிவு செய்து பங்களித்திருக்கிறார் . அந்த வகையில் உலகமெங்கும் மிகச் உள்ள சிறந்த சாரணர்களை -சிறந்த சேவைக்காக தேர்வு செய்து அவர்களுக்கு MESSENGER OF PEACE STAR என்ற உயரிய விருதினை உலகளாவிய சாரண இயக்கம் வழங்கி அவர்களை பெருமைப் படுத்தி வருகிறது .அதற்காக இந்த வருடம் இவ்விருது வழங்கும் விழாவானது , இந்தியாவில் ,கொல்கத்தா மாநிலத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள மத்தியம்கிராம் என்னும் ஊரில் இயங்கி வரும் மாவட்ட சாரண பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற்றது .நாடெங்கும் இருந்து 22 சாரண சாரணியர் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டனர் .அதில் கலந்துகொள்வதற்காக நமது சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் தனது மனைவி த்திருமதி புவனேஸ்வரியுடன் சென்றார்.அங்கு நடைபெற்ற அந்த சரவதேச பெருமை மிகு விழாவில் உலக சாரண இயக்கத்தின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் உயர் திரு R .ரிசால் பெங்கினைன் அவர்கள் முன்னிலையில் நமது நாட்டின் தேசிய முதன்மை சாரண ஆணையர் உயர்திரு I .B . நாகரலே அவர்கள் கரங்களால் MoP ஸ்டார் 2014  விருதும் ,சான்றிதழும் ,சிறப்பு ஸ்கார்ப்பும் வழங்கப்பட்டன . இதற்காக இவரை நமது MESSENGER OF PEACE -இந்தியக் குழுமத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் உயர்திரு கிருஷ்ணசாமி ராமமூர்த்தி அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.அந்த விருதை பெற்றுள்ள ஒரே தமிழர்,அதுவும் நமது கடலூர் மாவட்டத்தை சார்ந்த பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும் என்று தலைமை ஆசிரியர் பாராட்டினார்.
        இந்நிகழ்வின்போது பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் திரு மோகன் ராஜ்,NCC அலுவலர் திரு பாலச்சந்தர் ,NSS அலுவலர் திரு மோகன் குமார் ,முதுகலை  தமிழாசிரியர் திரு ஞான சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக சாரண ஆசிரியர் மாவட்ட செயலர் திரு செல்வநாதன் அவர்களுடன் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்ட சாரண முதன்மை ஆணையருமான திரு பாலமுரளி அவர்களையும் ,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சுரேஷ் குமார் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் .விருது பெற்ற சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் கூறுகையில் சாரண இயக்கத்தில் தன்னை வழி நடத்திய மூத்த சாரனாளர்கள் திரு ராமலிங்கம், திரு ராம மூர்த்தி ,திரு இளைய குமார், திரு வேலாயுதம் ,திரு செந்தில் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு தனது தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் ,சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் இவ்விருதினை தனது அத்துணை சாரண மாணவர்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் .மேலும் சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் 80 க்கும் மேற்பட்ட ராஜ்யபுரஸ்கார் (ஆளுநர் விருது ) சாரணர்களையும் ,2 ராஷ்டிரபதி (  குடியரசுத்   தலைவர் விருது  ) சாரனர்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.