Friday 9 October 2015

கலை விழா போட்டிகள்

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடைபெற்றன .இம்மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் நடக்கவிருந்த இப்போட்டிகள் முன்னதாகவே 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றன .அதற்கான சுற்றறிக்கை 7 ஆம் தேதி மதியம் தலைமையாசிரியரால் வழங்கப்பட்டு ...நன்கு கவனிக்கவும் 7 ஆம் தேதிப் போட்டிக்காக 7 ஆம் தேதி சுற்றறிக்கை ...காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் தேர்வுத் தாட்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கிக் கொண்டிருந்த சக ஆசிரியர்களின் பொருமல்களுக்கிடையே -முனு முனுப்புகளுக்கிடையே மாணவர்களை இனம் கண்டு 2 மணி  நேரத்திற்குள் அரை குறையாக பயிற்சி அளித்து பெற்றோர்களிடம் தொலைபேசி மூலம் அனுமதி வாங்கி -ஒரு வழியாக 8 ஆம் தேதியன்று  கடலூர் மஞ்சக்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் போட்டிகளில் கலந்துகொண்டனர்.அங்கு சென்று போட்டிகள் ஒருங்கிணைப்பாளரிடம் விசாரித்ததில் மேலிடத்திலிருந்து போட்டிகளை விரைந்து முடிக்கச் சொல்லி உத்தரவு என்றார் ,உண்மைதான் மேலிடது உத்தரவுகளை அடுத்தடுத்த தளங்களில் பின் பற்றுவதில் ஏதும் சிக்கலில்லை .கல்வி இயக்குனர்கள் சொன்னால் முதன்மைக் கல்வி அதிகாரிகளும் ,முதன்மைக் கல்வி அதிகாரி சொன்னால் மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அவர்கள் இருவரும் சொன்னால் உடனே தலைமை ஆசிரியர்களும் ...தலைமை ஆசிரியர் சொன்னால் அனைத்து ஆசிரியர்கள் கேட்டு உடனே அதன்படி செயல்படுவதும் ...எல்லாம் இந்த மட்டம் வரை சரியாக போய்க்கொண்டுதான் இருக்கிறது .இதற்குப் பின்தான் சிக்கலே ...ஆசிரியர்கள் சொன்னால் மாணவர்கள் கேட்கிறார்களா?அதற்கான சூழல் இப்போது இருக்கிறதா? போட்டியில் கலந்துகொள்வதற்கான 20 மாணவர்களை அடுத்த நாள் காலை ஆயத்தப் படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது எப்படியோ ...கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த போட்டிகளில் எங்கள் பள்ளியும் கலந்துகொண்டுவிட்டது .வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள முடியவில்லை .தகுந்த பயிற்சியே இல்லாமல் ...ஒத்திகை இல்லாமல் வெற்றியை எதிர்பார்க்க என்ன அருகதை இருக்கிறது .அநேகமாக வந்திருந்த எல்லா பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான் . போட்டிகள் எல்லாமே கடமைக்கு நடைபெறுவதாக தோன்றுகிறது .உண்மையான அர்பணிப்பு உணர்வில்லாமல் கடமைக்கு செய்கின்ற எதுவுமே வீண்தான் .மத்திய அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை மூலம் நடத்தும் இப்போட்டிகள் முதலில் கல்வி மாவட்ட அளவிலும் ,பின்னர் மாவட்ட அளவிலும் அதனைத் தொடர்ந்து மாநில அளவிலும் நிறைவாக தேசிய அளவிலும் நடைபெற உள்ளன .கலைவிழாவின் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 12 ஆம் தேதியன்று கடலூரில் நடைபெற உள்ளன  .அவையாவது நல்லபடியாக நடக்கட்டும் .அதிருக்கட்டும் ...நான் அழைக்கும்போது மாணவர்கள் ஆர்வத்தோடு வரவேண்டுமே ...என் மீது ஒரு பிடிப்பு வேண்டுமே ... முடிந்த பின்னர் அவர்கள் அனைவரையும் கடலூர் தேவனாம்பட்டினக் கடற்கரைக்கு ...சில்வர் பீச் .அழைத்துச் சென்று கடற்கரையில் மகிழ்ச்சியாக அவர்களை விளையாடவிட்டு அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நானும் மகிழ்ந்து அவர்களுடன் மகிழ்ச்சியில் பங்கேற்று
பின்னர் அவர்களை பத்திரமாக பண்ணுருட்டிக்கு அழைத்து வந்தபிறகுதான் மனம் நிம்மதியாயிற்று .



















Monday 27 July 2015

கனவு கலைந்தது

கனவு கலைந்தது 


கனவு காணச் சொன்ன எங்கள் அறிவியலே ...
நீ பிறப்பால் ஒரு இசுலாமியன் ...
உன்னால் இரும்பூது எய்தியது இசுலாம் மதம் ...!
நீ வளர்ப்பால் ஒரு தமிழன் ....!
தற்பெருமையால் தலை நிமிர்ந்தது தமிழகம் ...!
உன் கல்வி அறிவால்  மேதைமையால் 
                                                                 ஒரு இந்தியன் .....!
இதயமெங்கும் கர்வம் கொண்டது இந்தியா .....!
மதங்களைக் கடந்து மக்களின் நேசிப்பால் 
                             ஒரு சிறந்த மனிதன் ...உன்னதன் ...!
            உற்சாகம் கொண்டது உன்னால் உலகம் ....!
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன 
                                               எங்கள் கனவு மனிதனே ...!
             நீயே இன்று கலைந்துபோனதால் ......
                                               மனம் கனத்தது மனிதம் ...!

Sunday 26 July 2015

மலரும் நினைவுகள்

                  கடந்த மூன்று தினங்களுக்கு முன் குமரன் - என் வகுப்புத் தோழன்- 6 ஆம் வகுப்பு முதல் -10 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தவர்கள் நாங்கள் -காலச் சூழல் ...பல வருடங்களுக்குப் பின் என்னைச் சந்திக்க வந்திருந்தான் ....எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ...எனக்கு ..மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .இரண்டரை மணி நேரச் சந்திப்பு ...பழைய நினைவுகள் ...பழைய நண்பர்கள் ...வகுப்புத் தோழர்கள் ...அப்போதைய ஆசிரியர்கள் ...என எல்லாவற்றையும் பற்றி பேச்சு ...நேரம் போவதே தெரியாமல் ...
     ஆறாம் வகுப்பில் எங்கள் வகுப்பாசிரியருடன் நாங்கள்  எடுத்துக் கொண்ட குழுப்படம் பார்த்து எங்கள் பசுமையான  நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தோம் ..ரவிக்குமார் ,வாசு,M .ஆறுமுகம் ,V .ஆறுமுகம்,P .S .பாஸ்கர் ,சக்தி வேல்,நாராயணன்,அயிலு ,பாலமுருகன்,லோகநாதன் என அனைத்து வகுப்புத் தோழர்களையும் நினைவு கூர்ந்தோம் .ஆப்போதைய ஆசிரியர் -சமூக அறிவியல் -திரு .சக்கரபாணி  சாருடன் நாங்கள் அமர்ந்திருக்கிறோம்...மேலும் எங்களுக்கு வகுப்புகள் எடுத்த ......ஆங்கில ஆசிரியர்கள்  திரு அப்துல்கையூம் சார்  .திரு ஆரோக்கிய ராஜ் சார் ,தமிழ் ஆசிரியர்கள் திரு ராமநாதன் அய்யா ,சாமிநாதன் அய்யா,பொன்னுசாமி சார் ,திருமதி விஜயலட்சுமி மேடம்,திருமதி மலர்கொடி மேடம் ..சீனுவாசன் சார் என அனைத்து ஆசிரியர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து மகிழ்ந்தோம் .நீண்ட வருடங்களுக்குப் பிறகு அப்துல் கையூம் சார் என்னைக் காணும் ஆவலுடன் எங்கள் வீடு தேடி வந்து பேசி மகிழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ...எனது மனவன்னங்கள் நூல் வெளியீட்டு விழாவிலே ஆரோக்கிய ராஜ் சார் கலந்துகொண்டு எனது முதல் பிரதியை பெற்று சிறப்பித்த மகிழ்ச்சியான நிகழ்வு ..முதலியவற்றையும் அவனுடன் பகிர்ந்துகொண்டேன்.மேலும் 10 ஆம் வகுப்பு விடுமுறையின் போது நண்பன் P .S .பாஸ்கர் உடன் சின்னப் பேட்டைக்கு குமரன் வீட்டிற்கு சென்றது ...அவர்களது வயலுக்கு சென்று நுங்கு உண்டு மகிழ்ந்தது ...குமரனின் தாயார் அன்போடு பரிமாற மதிய உணவு அருந்தியது என மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டேன் ....விடை பெரும் தருணத்தில் எனது மனவண்ணங்கள் நூலையும் அளித்து மகிழ்ந்தேன் ...மறுபடியும் தனது பணி நிமித்தம் துபாய் செல்ல உள்ள என் நண்பனை வாழ்த்தி விடை கொடுத்தேன் .நீண்ட வருடங்களுக்குப் பின் வகுப்புத் தோழி சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி முக நூல் சொந்தங்களே...! 

Sunday 19 July 2015

அன்புள்ள அறிவியல் !

 அன்புள்ள அறிவியல் !

அன்பே நீ அருகில் வருகிறாய்! 
அருகில் வர வர 
நான் உறைந்து போகிறேன் 
இன்னும் அருகில் வருகிறாய் 
நான் உருகிப் போகிறேன் 
என்னை நெருங்கிவிட்டாய் 
நான் கொதித்துப் போகிறேன் 
இதோ ...என்னை தொட்டுவிட்டாய் 
நான் வெடித்துப் போகிறேன் 
வெடித்ததிலே சிதறியது  துண்டாய் என்னுள்ளம் 
ஒவ்வொரு சில்லிலும் 
கண்ணாடித் துண்டுகள்  உருவம் காட்டுவதுபோல் 
...இதோ சில்லென்ற உன் விரல் ஸ்பரிசம் 
சிதறிப் போன என் சிந்தனைகள் 
ஒருங்கு கூடுகின்றன 
என் எதிரே நீ !
உன் எதிரே நிற்பது நானா ?
என் நினைவுகளின் இடுக்குகள் எங்கும் 
நீக்கமற நிறைந்திருக்கும் 
நிகழ் கால நிஜமே ... 
நான் வடிவில் நீ ! 
 அன்பே ....!
நான் ஜடப்பொருளா 
எனக்கும் நிலை மாற்றம் உண்டா ?
நீரும் நானும் ஒன்றா ?
நீர்...வெப்பம்  குளிர்ந்து உறையும் ...
 நீர் ...வெப்பம் நெருங்க 
உருகிக் கொதிக்கும் ...!
அன்பே நீ குளிரா வெப்பமா ?
என்னை உறைய வைக்கின்றாய் ஒரு கனம் 
என்னை உருகச் செய்கிறாய் மறு கனம் 
உருகிய நான் கொதிக்கவும் செய்கிறேன் !
நல்ல வேலை ... நான் ஆவியாகவில்லை !
நீ நெருங்க நெருங்க நான் வெப்பநிலை கூடிப்போனேன் 
செல்ஷியஸ் ஏறிப்போனேன் 
கொதித்துப் போன என்னை குளிர வைத்த கிராதகியே !
இன்னும் ஒரு பார்வை 
நீ எனை நோக்கி வீசிவிட்டால் 
உருகாமல் வெடிக்காமல் 
ஆவியாய் பதங்கமாவேன் 
கற்பூர ஆவி போன்றே 
லேசாக மெல்ல மெல்ல மேலேழுவேன் 
உன் நாசித் துவாரத்தின் வழி செல்வேன் 
உல் சென்று நுரையீரல்களில் பரவி 
உதிரத்தில் கலந்தோடி 
உன் அணுக்களில் சென்றமர்ந்து 
உன் ஆவியோடு சங்கமித்து 
தன்மயமாய் ஆகிடுவேன் ..!
தன்யனாய் ஆகிடுவேன் ...!



Thursday 26 March 2015

பூமி நேரங்கள் - EARTH HOURS

பூமி நேரங்கள் 
அது என்ன பூமி நேரங்கள்?
               நாளுக்கு நாள் நமது ஆற்றல் நுகர்வுகள் அதி பெருக்கத்தின் காரணமாக தனது வாழ் நாளின் இறுதியை நோக்கி வேகமாக பூமியை உந்தித் தள்ளிக்கொண்டு இருக்கின்றோம். இந்த அழகிய பூமி ....அழிய .... அதாவது ,இந்த உலகப் பந்து அழிவதற்கு ....அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான முழுத் தகுதியை இழப்பதற்கு முழுப் பொறுப்பும் யாருக்கு தெரியுமா ?அதன் கடைசி வரவான மனிதனுக்குத்தான் .
               ஆம். பூமியானது மனிதனுக்கு மட்டும் படைக்கப் படவில்லை .அதாவது பூமியில் மனிதன் மட்டும் தோன்றவில்லை .பல்லாயிரக்கணக்கான
உயிர்களும் தோன்றி உள்ளன.எல்லா உயிர்களும் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை இவ்வையகம் தன்னில் கொண்டுள்ளது . அதனை அனைத்து உயிர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இந்த பூமிப் பந்து அளித்துக் கொண்டு வருகிறது .
               ஆனால் ,சிந்திக்கவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே உயிரினமான மனிதனுக்கு இன்னொரு குணமும் அதிகமாகிவிட்டது .
               அதுதான் பேராசை ...!
                தனக்காக மட்டும் இந்த பூமி படைக்கப் பட்டுள்ளதாக எண்ணிய மனிதன் ஆக்க சக்திகளுக்காக பயன் படுத்தவேண்டிய அறிவியலின் வளர்ச்சியை எந்த அளவுக்கு அழிவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கும் விஞ்சி பயன்[படுத்தி பல்லுயிர் பெருக்கத்திற்கான சுற்றுச் சூழலை நஞ்சாக்கிவருகின்றான்.நகரமயமாக்கல் மூலம் வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மழை மேகங்களையும் கேள்விக்குறியாக்கிவிட்டான்  .
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளை நிலமாக்கிய மனிதன் பேராசையின் எல்லைக் கூட்டுக்கே சென்று விளை நிலங்களை விலை நிலங்களாக்கிவிட்டான் ;மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்த  இடத்தை வேகமாக கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான்.
             தொழிற்சாலைகளை பெருக்கி கழிவுகளை நதிகளிலும் கடலிலும் கலக்கவிட்டு நீர்ச் சூழலை நாசமாக்கி நீர் சூழல் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறான் .
             செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லி மருந்துகளையும் இட்டு வேளாண் புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு எஞ்சியுள்ள விளை நிலங்களை
மலடாக்கி வருகின்றான் .
             தூரத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று புற்றீசல் போல நான்கு சக்கர வாகனங்களையும் , இரு சக்கர வாகனங்களையும் பெருக்கியும் , பல்வேறு தொழிற்சாலைகளைக் கட்டி தொழிற்புரட்சி என்ற பெயரில் பூமியையே மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு புகை மண்டலமாக்கி காற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டான் .
           இவ்வாறு எல்லா சூழல் மண்டலங்களையும் மாசு சூழ் உலகமாக்கி பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிய மனிதன் இப்போது அட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தக் கதை என்பார்களே ...அதுபோல் தனக்கான வாழ்வாதாரத்தை தானே சுரண்டிக் கொண்டு இருக்கின்றான் .
          நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கும் பேதைத் தனம் மட்டுமே மனிதனிடம் எஞ்சியுள்ளது. கிளை வெட்டு பட்டதும் வீழப் போவது கிளை மட்டுமல்ல .அதில் அமர்ந்து தன் சாவுக்கு தானே குழிவெட்டுவதுபோல் , கிளையை வெட்டிக்கொண்டு இருந்தானே ...அவனும் அல்லவா...?
            தினமும் தங்க முட்டையிடும் வாத்தை வரமாகப் பெற்றவன் பேராசை மிஞ்சியமையால் ஒட்டுமொத்த வரத்தையும் ஒரே நாளில் பெரும் எண்ணம் கொண்டு வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ...ஒரு மூர்க்கன் ...அந்தக் கதையாகிவிட்டது ..மனிதனின் சூழல் விரோத நடத்தைகள் .
           விளைவு ........? மனிதனின் சூழல் விரோத நடத்தைகளின் விளைவு ....?
         அமில மழை ,மழியின்மையால் கடும் வறட்சி ஒருபுறம் , அதிக மழையில் சிக்கி ஜல சமாதியாக்கும் வெள்ளக் காடு ஒருபுறம் ,எல் -நினா ,லா நினோ போன்ற காற்றுச் சூறாவளிகளும் கவர்ச்சியான பெண்களின் பெயர்களைத் தாங்கி பூமியையே புரட்டிப் போடும் பேய்க் காற்று -சுழல் காற்று ஒருபுறம் -தாவரங்களின் நண்பர்களாகிய  மண் புழுக்களும் ,நுண் பாக்டீரியாக்களும் கூட வாழத் தகுதியற்று மலடாய்ப் போன விளை நிலங்கள் ஒருபுறம் - காற்று மாசுபாட்டால் குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதல் காரணமாக துருவங்களிலே உருகும் பனியானது கடலில் கலந்து கடல் மட்டத்தை உயர்த்தி மிச்சமிருக்கும் ஒரு பங்கு நிலத்தையும் மூழ்கடிக்கத் துடிக்கும் மூர்க்கத் தனம் ஒருபுறம் -தகவல் தொழில் நுட்பமும் நேனோ தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணைத் தொடும் செல்போன் கோபுரங்களை உண்டாக்கி இலவசமாக கதிர் வீச்சுகளை வழங்கி சிட்டுக் குருவிகளைப் போன்ற அழகுப் பறவைகளையும் இன்ன பிற உயிரினங்களையும் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்துபோகச் செய்தது மட்டுமல்லாமல் தனக்கும் புற்று நோயையும் - பெயரே தெரியாத - மருந்துகளே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது புது நோய்களையும் உண்டாக்கிய அனைத்துப் பெருமையும் நம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் .
            அனல் மின்னாற்றல் ,நீர் மின்னாற்றல் ,சூரிய மின்னாற்றல் ,அலையாற்றல் ,புவி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க வக்கில்லாத மனித இனம் பூமியில் ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி கதிர்வீச்சு அபாயம் என்னும் வலையில் பூமியை சிக்க வைத்து விட்டான் .
               தனக்கான எல்லா ஆற்றல்களும் பூமியிலிருந்தே கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மனிதன் பூமித்தாயின் கர்ப்பப் பையான  நடுபூமி வரை ஊடுருவிச் சென்று நிலக்கரி ,பெட்ரோலியம் ,எரிவாயு என அனைத்தையும் சுரண்டி எடுத்துக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினை நிர் கதியாக்கிய  பெருமையும் நம் காலத்தவர்க்கே நிச்சயம் சேரும் .
             இது போன்று மனிதனின் சூழல் விரோத நவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது எங்கே போய் முடியும்....?
              அது பற்றி நமக்கென்ன அக்கறை ? நமக்கான வாழ்க்கையை நாம் அன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம் . வரும் தலை முறையினரின் வாழ்வைப் பற்றி நாம் என் கவலைப் பட வேடும் என்கிறீர்களா ?
              இந்த உலகம் இப்போது எப்படி உள்ளதோ ,இதை  விட சற்றே உன்னதமாக்கி -வாழும் சூழ்நிலையை மகிழ்ச்சிகரமானதாக்கி நம் சந்ததியருக்கு விட்டு செல்லும் பொறுப்பு நம்கையில் அல்லவா இருக்கிறது ?
              அது மட்டுமல்ல ... ! சூழல் விரோத நடவடிக்கை என்பது - சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது நாம் போட்ட முடிச்சு .அதை நாம்தானே அவிழ்க்க வேண்டும். !
 நம்மால் ஏற்பட்ட சிக்கலை நாம்தானே களைய வேண்டும் !
             அதற்காக இனியேனும் நமது மூளையை சற்றே கசக்கிக் கொள்ளலாமே !முதலில் எடுத்து வைக்கும் ஒருசிலரின் அடிகளால் என்ன மாற்றம் பெரிதாக வந்துவிடப் போகிறது ? என்று சிந்திக்காமல் - எதிர் கேள்விகள் கேட்காமல் --- வாதித்துக் கொண்டிராமல் - வீண் விதண்டா வாதங்களில் ஈடுபடாமல் -நேரடி செயலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது
              சிறுதுளி பெரிதல்லவா?
              அடி மேல் அடித்தால் ... அம்மியும் நகரும்தானே ?
              என்ன செய்யலாம் ......?
              சூழலின் சீர்கேடு மேலும் மேலும் மோசமாவதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
               முதலில் எல்லோரும் 'கால நிலை மாற்றம் ' என்பதகான மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று மனதார எண்ண வேண்டும்.
               ஆற்றல் நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்போம்.அதற்கான குறியீடுதான் மார்ச்-28 -The Earth  மார்ச்-28 -The Earth  Hour - இரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை அனைத்து மின் உபயோகங்களை நிறுத்தம் செய்தல் .
                  குண்டு விளக்கிலிருந்து (இப்போது இவை அரிதாகவே பயன் படுத்துகின்றார்கள் -அநேகம் பேர் சூழல் விளக்கிற்கு -CFL அல்லது LED -க்கு மாறிவிட்டார்கள் )குழல் விளக்கு வரை அனைத்து ஒளி ஆற்றல்களையும் நிறுத்துவோம்.மின் விசிறிகள்  ,தொலைகாட்சிகள்  ,குளிரூட்டிகள் என உள்ள அத்துணை மின் நுகர்வுப் பொருட்களின் இயக்கங்களையும் கூட இந்த ஒரு மணிநேரம் நிறுத்திவைப்போம் .இது வீடுகளில் வசிப்பவர்களுக்கான குடும்பஸ்தர்களுக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம் ,வியாபாரிகள் ,வர்த்தக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதில் மனமுவந்து பெருந்தன்மையுடன் பங்கேற்க முன்வரவேண்டும் .  உயிர்  காக்கும் அத்தியாவசிய பொருட்கள் -நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு பெறட்டும். ஏனைய பொழுதுபோக்கு தளங்களான திரையரங்குகள் ,உணவகங்கள் , தங்கும் விடுதிகள் ,ஷாப்பிங் மால்கள் போன்றவை ஈறாக அனைத்து தரப்பினரும் தாமாகவே முன்வந்து மின்சார இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.தாவர எண்ணெய் விளக்குகள் ,மெழுகு வர்த்திகள் ஆகியவற்றின் ஒளியிலும் அந்த ஒரு மணி நேரத்தை -60 நிமிடங்களை -3600 விநாடிகளை -நமது குடும்ப உறுப்பினர்களுடன் -நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசிக் களிப்போம் .
                 சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ஒருமணி நேரம் நம் வீட்டில் அனைத்து மின் நுகர்வும் நிறுத்தப் பட்டால் மிச்சமாகும் அல்லது சேகரமாகும் மின் அழகு எவ்வளவு ? நம் வீட்டில் மட்டும் இவ்வளவு மிச்சம் என்றால் ,நம் ஊர் மொத்தமும் எவ்வளவு யூனிட்  மின்சாரம் மிச்சமாகும்?நம் ஊரில் மட்டுமே இவ்வளவு மின்சார சக்தி மிச்சப்பட்டால் மாவட்டம் முழுவதும் ...மாநிலம் முழுவதும் ,,,நாடு முழுமைக்கும் ...? நாட்டிற்கே இவ்வளவு மின்சாரம் மிச்சமெனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் ....?  
                  கற்பனை செய்து பாருங்கள் ! நம் தமிழகத்தில் மட்டுமோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ,பண்ருட்டியிலோ  மட்டும் இப்படி செய்யப் போவது இல்லை .!தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக மனித இனம் செயல் பட வேண்டிய நேரம் இது  அல்லவா?
                 அதனால் மனித இனம் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் - கண்டங்களிலும் -ஏன் ...உலகம் முழுவதுமே  அந்த ஒரு மணிநேரம் இயற்கை ஆர்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மின்சாரத்தினை நிறுத்தி இந்த இருள் சூழ் உலகை ஒருமணி நேரம் முழுமைக்கும் இயற்கை ஒளியில் மட்டுமே மூழ்கவைக்க தயாராகிறார்கள்  .
                 இதனை உலகில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான WWF.COM  ,SCOUT.ORG உள்ளிட்டவை ஒரு இயக்கமாகவே மாற்றி கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன .விருப்பம் கொண்டு நீங்களும் இணையலாமே இந்த இயக்கத்தில்...                                                                                                       EARTH HOUR - என்ற இணைய தளத்திலும் ,முக நூல் (FACE BOOK ),டுவிட்டர் (TWITTER) பக்கங்களிலும் ,யூ டியூப் (YOU TUBE)தளத்திலும் மேலும் இதனைப் பற்றி விபரங்களை அறியலாம் .
               ஆற்றலை சேமிப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே உதாரணத்திற்காக மின்சார இயக்க நிறுத்தம் பற்றி இங்கு கூறப் பட்டுள்ளது .
  இதுபோல் ,போக்குவரத்து துறையை  எடுத்துக் கொண்டால் நான்கு சக்கர ,இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் திரவ எரிபொருளான பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் அளவுகளை நினைத்துப் பாருங்கள் .எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சேமகலங்களில் இயங்கும் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன .ஆனால் அவை மிக சொற்பமே .தனிப்  போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன் படுத்தும் மனநிலைக்கு நாம் அனைவரும் ,மாறவேண்டும் .நமக்கு உடற் பயிற்சியை அளிக்கும் -சூழலுக்கு ஊறு  விளைவிக்காத மிதிவண்டிப் பயன்பாட்டை மனதார ஏற்கவேண்டும்.அதற்கு அரசும் தன்  பங்கிற்கு மிதிவண்டியை பயன்படுத்துபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சில சலுகைகளை அறிவிக்கலாம் .இது போல எந்த இடங்களில் -எந்த வகைகளில் -எந்த முறைகளில்  ஆற்றலை சேமிக்க இயலுமோ அந்த வழிகளில் முயல வேண்டும்.மக்களை முயலச் செய்ய வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீதான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் . மரக் கன்றுகள் நடுவதை மிக மிக  .அதிகப் படுத்தவேண்டும் .குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் ---சாலை விரிவாக்கத்திற்காக நாம் வெட்டி வீழ்த்திய மரங்களின்  எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும், அதற்கான பதில் மரங்களை நட்டுப் பராமரிக்கின்றோமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் .
            எனவே மனிதன் இனிமேலாவது சுய நலத்தை தொலைத்து-ஆடம்பர வாழ்க்கையை -வசதியான வாழ்க்கையை மட்டுமே மோகிக்காமல் , சூழல் நலத்தையும் எண்ணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான் என்பதுதான் நிஜம் .
             
               வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
               வைத்தூறு போலக் கெடும் .
   
என்றான் வள்ளுவப் பெருந்தகை.
               இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும் என்பதை உணர்ந்து சூழல் விரோத நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வோம்.
                இயற்கையைப் பாதுகாப்போம் .எங்கும் மரங்களை நட்டு வைப்போம் .
 பூமி நேரங்கள் (EARTH HOUR )-இயக்கத்தில் நாமும் கலந்துகொள்வோம்.நாம் அறிந்ததைப் பிறருக்கும் பகிர்வோம் .அதற்கு முக நூல் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்துவோம் .பூமிப் பந்தைக் காப்போம் .
                  குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கான அறைகூவல் இது . வாருங்கள் !
               உலகம் உங்கள் கைகளில் ...
               இல்லை.... இல்லை ....நமது கைகளில்

          

  







பூமி நேரங்கள் -3

  பூமி நேரங்கள் -3


               சூழலின் சீர்கேடு மேலும் மேலும் மோசமாவதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
               முதலில் எல்லோரும் 'கால நிலை மாற்றம் ' என்பதகான மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று மனதார எண்ண வேண்டும்.
               ஆற்றல் நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்போம்.அதற்கான குறியீடுதான் மார்ச்-28 -The Earth Hourஇரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை அனைத்து மின் உபயோகங்களை நிறுத்தம் செய்தல் .
                  குண்டு விளக்கிலிருந்து (இப்போது இவை அரிதாகவே பயன் படுத்துகின்றார்கள் -அநேகம் பேர் சூழல் விளக்கிற்கு -CFL அல்லது LED -க்கு மாறிவிட்டார்கள் )குழல் விளக்கு வரை அனைத்து ஒளி ஆற்றல்களையும் நிறுத்துவோம்.மின் விசிறிகள்  ,தொலைகாட்சிகள்  ,குளிரூட்டிகள் என உள்ள அத்துணை மின் நுகர்வுப் பொருட்களின் இயக்கங்களையும் கூட இந்த ஒரு மணிநேரம் நிறுத்திவைப்போம் .இது வீடுகளில் வசிப்பவர்களுக்கான குடும்பஸ்தர்களுக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம் ,வியாபாரிகள் ,வர்த்தக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதில் மனமுவந்து பெருந்தன்மையுடன் பங்கேற்க முன்வரவேண்டும் .  உயிர்  காக்கும் அத்தியாவசிய பொருட்கள் -நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு பெறட்டும். ஏனைய பொழுதுபோக்கு தளங்களான திரையரங்குகள் ,உணவகங்கள் , தங்கும் விடுதிகள் ,ஷாப்பிங் மால்கள் போன்றவை ஈறாக அனைத்து தரப்பினரும் தாமாகவே முன்வந்து மின்சார இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.தாவர எண்ணெய் விளக்குகள் ,மெழுகு வர்த்திகள் ஆகியவற்றின் ஒளியிலும் அந்த ஒரு மணி நேரத்தை -60 நிமிடங்களை -3600 விநாடிகளை -நமது குடும்ப உறுப்பினர்களுடன் -நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசிக் களிப்போம் .
                 சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ஒருமணி நேரம் நம் வீட்டில் அனைத்து மின் நுகர்வும் நிறுத்தப் பட்டால் மிச்சமாகும் அல்லது சேகரமாகும் மின் அழகு எவ்வளவு ? நம் வீட்டில் மட்டும் இவ்வளவு மிச்சம் என்றால் ,நம் ஊர் மொத்தமும் எவ்வளவு யூனிட்  மின்சாரம் மிச்சமாகும்?நம் ஊரில் மட்டுமே இவ்வளவு மின்சார சக்தி மிச்சப்பட்டால் மாவட்டம் முழுவதும் ...மாநிலம் முழுவதும் ,,,நாடு முழுமைக்கும் ...? நாட்டிற்கே இவ்வளவு மின்சாரம் மிச்சமெனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் ....?  
                  கற்பனை செய்து பாருங்கள் ! நம் தமிழகத்தில் மட்டுமோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ,பண்ருட்டியிலோ  மட்டும் இப்படி செய்யப் போவது இல்லை .!தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக மனித இனம் செயல் பட வேண்டிய நேரம் இது  அல்லவா?
                 அதனால் மனித இனம் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் - கண்டங்களிலும் -ஏன் ...உலகம் முழுவதுமே  அந்த ஒரு மணிநேரம் இயற்கை ஆர்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மின்சாரத்தினை நிறுத்தி இந்த இருள் சூழ் உலகை ஒருமணி நேரம் முழுமைக்கும் இயற்கை ஒளியில் மட்டுமே மூழ்கவைக்க தயாராகிறார்கள்  .
                 இதனை உலகில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான WWF.COM  ,SCOUT.ORG உள்ளிட்டவை ஒரு இயக்கமாகவே மாற்றி கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன .விருப்பம் கொண்டு நீங்களும் இணையலாமே இந்த இயக்கத்தில்...                                                                                                       EARTH HOUR - என்ற இணைய தளத்திலும் ,முக நூல் (FACE BOOK ),டுவிட்டர் (TWITTER) பக்கங்களிலும் ,யூ டியூப் (YOU TUBE)தளத்திலும் மேலும் இதனைப் பற்றி விபரங்களை அறியலாம் .
               ஆற்றலை சேமிப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே உதாரணத்திற்காக மின்சார இயக்க நிறுத்தம் பற்றி இங்கு கூறப் பட்டுள்ளது .
  இதுபோல் ,போக்குவரத்து துறையை  எடுத்துக் கொண்டால் நான்கு சக்கர ,இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் திரவ எரிபொருளான பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் அளவுகளை நினைத்துப் பாருங்கள் .எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சேமகலங்களில் இயங்கும் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன .ஆனால் அவை மிக சொற்பமே .தனிப்  போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன் படுத்தும் மனநிலைக்கு நாம் அனைவரும் ,மாறவேண்டும் .நமக்கு உடற் பயிற்சியை அளிக்கும் -சூழலுக்கு ஊறு  விளைவிக்காத மிதிவண்டிப் பயன்பாட்டை மனதார ஏற்கவேண்டும்.அதற்கு அரசும் தன்  பங்கிற்கு மிதிவண்டியை பயன்படுத்துபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சில சலுகைகளை அறிவிக்கலாம் .இது போல எந்த இடங்களில் -எந்த வகைகளில் -எந்த முறைகளில்  ஆற்றலை சேமிக்க இயலுமோ அந்த வழிகளில் முயல வேண்டும்.மக்களை முயலச் செய்ய வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீதான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் . மரக் கன்றுகள் நடுவதை மிக மிக  .அதிகப் படுத்தவேண்டும் .குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் ---சாலை விரிவாக்கத்திற்காக நாம் வெட்டி வீழ்த்திய மரங்களின்  எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும், அதற்கான பதில் மரங்களை நட்டுப் பராமரிக்கின்றோமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் .
            எனவே மனிதன் இனிமேலாவது சுய நலத்தை தொலைத்து-ஆடம்பர வாழ்க்கையை -வசதியான வாழ்க்கையை மட்டுமே மோகிக்காமல் , சூழல் நலத்தையும் எண்ணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான் என்பதுதான் நிஜம் .
             
               வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
               வைத்தூறு போலக் கெடும் .
 
என்றான் வள்ளுவப் பெருந்தகை.இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும் என்பதை உணர்ந்து சூழல் விரோத நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வோம்.
                இயற்கையைப் பாதுகாப்போம் .எங்கும் மரங்களை நட்டு வைப்போம் .
 பூமி நேரங்கள் (EARTH HOUR )-இயக்கத்தில் நாமும் கலந்துகொள்வோம்.நாம் அறிந்ததைப் பிறருக்கும் பகிர்வோம் .அதற்கு முக நூல் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்துவோம் .பூமிப் பந்தைக் காப்போம் .
                  குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கான அறைகூவல் இது . வாருங்கள் !
               உலகம் உங்கள் கைகளில் ...
               இல்லை.... இல்லை ....நமது கைகளில்


             




 .


             
               
                 

பூமிப் பந்தைக் காப்போமா தோழர்களே?

பூமிப் பந்தைக் காப்போமா தோழர்களே?

இன்னும் இரு தினங்களே உள்ளன .


28-032015 -சனிக்கிழமை இரவு சரியாக 8-30 மணி முதல் 9-30 மணிவரை மின் விளக்குகள் அனைத்தையும் அனைத்துவைப்போம் .
மின் சாதங்கள் அனைத்தின் இயக்கத்தையும் நிறுத்தி வைப்போம் .
ஆற்றலை சேமிப்போம்
புவி வெப்பமயமாதலை தடுப்போம் .
 நாம் மட்டுமல்ல மின் இயக்கத்தினை நிறுத்தப்போவது ...!
 இவ்வுலகம் முழுக்கத்தான் .
 இப்புவி கொஞ்சம் கொஞ்சமாக உயிர்கள் வாழ்வதற்கான தகுதியை இழந்து வருவதற்கு நாம்தானே காரணம் ....!
இதற்கு நாம்தானே பிராயச் சித்தம் தேடவேண்டும் !
அதற்கான முயற்சியின் சிறு தொடக்கம்தான் இது ...!
நம் ஒருவரின் இல்லத்தில் ஒரு மணிநேரத்திற்கு சேகரமாகும் மின்சாரத்தின் யூனிட் அளவைப் பாருங்கள் .
ஒரு வீட்டில் இவ்வளவு என்றால் ஒரு ஊரில் எவ்வளு மின்சாரம் மிச்சமாகும்...?
ஒரு ஊரில் இவ்வளவு எனில் ஒரு மாநிலம் முழுமைக்கும் எவ்வளவு ...?
ஒரு மாநிலத்தில் இவ்வளவு எனில் ஒரு நாடு முழுக்க ஒரு மணிநேரம் எவ்வளவு ஆற்றல்  சேமிக்கலாம் ? ஒரு நாட்டில் மட்டுமே இவ்வளவு எனில் இவ்வுலகம் முழுமைக்கும் ....?
நினைத்துப் பாருங்கள் .... !இது ஒரு சிறு துவக்கம்தான் ...






பூமி நேரங்கள் -2

பூமி நேரங்கள் -2
         மனிதனின் சூழல் விரோத நடத்தைகளின் விளைவு ....?
         அமில மழை ,மழியின்மையால் கடும் வறட்சி ஒருபுறம் , அதிக மழையில் சிக்கி ஜல சமாதியாக்கும் வெள்ளக் காடு ஒருபுறம் ,எல் -நினா ,லா நினோ போன்ற காற்றுச் சூறாவளிகளும் கவர்ச்சியான பெண்களின் பெயர்களைத் தாங்கி பூமியையே புரட்டிப் போடும் பேய்க் காற்று -சுழல் காற்று ஒருபுறம் -தாவரங்களின் நண்பர்களாகிய  மண் புழுக்களும் ,நுண் பாக்டீரியாக்களும் கூட வாழத் தகுதியற்று மலடாய்ப் போன விளை நிலங்கள் ஒருபுறம் - காற்று மாசுபாட்டால் குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதல் காரணமாக துருவங்களிலே உருகும் பனியானது கடலில் கலந்து கடல் மட்டத்தை உயர்த்தி மிச்சமிருக்கும் ஒரு பங்கு நிலத்தையும் மூழ்கடிக்கத் துடிக்கும் மூர்க்கத் தனம் ஒருபுறம் -தகவல் தொழில் நுட்பமும் நேனோ தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணைத் தொடும் செல்போன் கோபுரங்களை உண்டாக்கி இலவசமாக கதிர் வீச்சுகளை வழங்கி சிட்டுக் குருவிகளைப் போன்ற அழகுப் பறவைகளையும் இன்ன பிற உயிரினங்களையும் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்துபோகச் செய்தது மட்டுமல்லாமல் தனக்கும் புற்று நோயையும் - பெயரே தெரியாத - மருந்துகளே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது புது நோய்களையும் உண்டாக்கிய அனைத்துப் பெருமையும் நம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் .
            அனல் மின்னாற்றல் ,நீர் மின்னாற்றல் ,சூரிய மின்னாற்றல் ,அலையாற்றல் ,புவி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க வக்கில்லாத மனித இனம் பூமியில் ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி கதிர்வீச்சு அபாயம் என்னும் வலையில் பூமியை சிக்க வைத்து விட்டான் .
               தனக்கான எல்லா ஆற்றல்களும் பூமியிலிருந்தே கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மனிதன் பூமித்தாயின் கர்ப்பப் பையான  நடுபூமி வரை ஊடுருவிச் சென்று நிலக்கரி ,பெட்ரோலியம் ,எரிவாயு என அனைத்தையும் சுரண்டி எடுத்துக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினை நிர் கதியாக்கிய  பெருமையும் நம் காலத்தவர்க்கே நிச்சயம் சேரும் .
             இது போன்று மனிதனின் சூழல் விரோத நவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது எங்கே போய் முடியும்....?
              அது பற்றி நமக்கென்ன அக்கறை ? நமக்கான வாழ்க்கையை நாம் அன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம் . வரும் தலை முறையினரின் வாழ்வைப் பற்றி நாம் என் கவலைப் பட வேடும் என்கிறீர்களா ?
              இந்த உலகம் இப்போது எப்படி உள்ளதோ ,இதை  விட சற்றே உன்னதமாக்கி -வாழும் சூழ்நிலையை மகிழ்ச்சிகரமானதாக்கி நம் சந்ததியருக்கு விட்டு செல்லும் பொறுப்பு நம்கையில் அல்லவா இருக்கிறது ?
              அது மட்டுமல்ல ... ! சூழல் விரோத நடவடிக்கை என்பது - சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது நாம் போட்ட முடிச்சு .அதை நாம்தானே அவிழ்க்க வேண்டும். !
 நம்மால் ஏற்பட்ட சிக்கலை நாம்தானே களைய வேண்டும் !
             அதற்காக இனியேனும் நமது மூளையை சற்றே கசக்கிக் கொள்ளலாமே !முதலில் எடுத்து வைக்கும் ஒருசிலரின் அடிகளால் என்ன மாற்றம் பெரிதாக வந்துவிடப் போகிறது ? என்று சிந்திக்காமல் - எதிர் கேள்விகள் கேட்காமல் --- வாதித்துக் கொண்டிராமல் - வீண் விதண்டா வாதங்களில் ஈடுபடாமல் -நேரடி செயலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது
              சிறுதுளி பெரிதல்லவா?
              அடி மேல் அடித்தால் ... அம்மியும் நகரும்தானே ?
              என்ன செய்யலாம் ......?
                                                                                                           நேரம் வளரும் ....!
                                                                                                   

                         
























பூமி நேரங்கள்-1 -EARTH HOURS-


பூமி நேரங்கள்
அது என்ன பூமி நேரங்கள்?
               நாளுக்கு நாள் நமது ஆற்றல் நுகர்வுகள் அதி பெருக்கத்தின் காரணமாக தனது வாழ் நாளின் இறுதியை நோக்கி வேகமாக பூமியை உந்தித் தள்ளிக்கொண்டு இருக்கின்றோம். இந்த அழகிய பூமி ....அழிய .... அதாவது ,இந்த உலகப் பந்து அழிவதற்கு ....அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான முழுத் தகுதியை இழப்பதற்கு முழுப் பொறுப்பும் யாருக்கு தெரியுமா ?அதன் கடைசி வரவான மனிதனுக்குத்தான் .
               ஆம். பூமியானது மனிதனுக்கு மட்டும் படைக்கப் படவில்லை .அதாவது பூமியில் மனிதன் மட்டும் தோன்றவில்லை .பல்லாயிரக்கணக்கான
உயிர்களும் தோன்றி உள்ளன.எல்லா உயிர்களும் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை இவ்வையகம் தன்னில் கொண்டுள்ளது . அதனை அனைத்து உயிர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இந்த பூமிப் பந்து அளித்துக் கொண்டு வருகிறது .
               ஆனால் ,சிந்திக்கவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே உயிரினமான மனிதனுக்கு இன்னொரு குணமும் அதிகமாகிவிட்டது .
               அதுதான் பேராசை ...!
                தனக்காக மட்டும் இந்த பூமி படைக்கப் பட்டுள்ளதாக எண்ணிய மனிதன் ஆக்க சக்திகளுக்காக பயன் படுத்தவேண்டிய அறிவியலின் வளர்ச்சியை எந்த அளவுக்கு அழிவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கும் விஞ்சி பயன்[படுத்தி பல்லுயிர் பெருக்கத்திற்கான சுற்றுச் சூழலை நஞ்சாக்கிவருகின்றான்.நகரமயமாக்கல் மூலம் வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மழை மேகங்களையும் கேள்விக்குறியாக்கிவிட்டான்  .
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளை நிலமாக்கிய மனிதன் பேராசையின் எல்லைக் கூட்டுக்கே சென்று விளை நிலங்களை விலை நிலங்களாக்கிவிட்டான் ;மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்த  இடத்தை வேகமாக கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான்.
             தொழிற்சாலைகளை பெருக்கி கழிவுகளை நதிகளிலும் கடலிலும் கலக்கவிட்டு நீர்ச் சூழலை நாசமாக்கி நீர் சூழல் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறான் .
             செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லி மருந்துகளையும் இட்டு வேளாண் புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு எஞ்சியுள்ள விளை நிலங்களை
மலடாக்கி வருகின்றான் .
             தூரத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று புற்றீசல் போல நான்கு சக்கர வாகனங்களையும் , இரு சக்கர வாகனங்களையும் பெருக்கியும் , பல்வேறு தொழிற்சாலைகளைக் கட்டி தொழிற்புரட்சி என்ற பெயரில் பூமியையே மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு புகை மண்டலமாக்கி காற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டான் .
           இவ்வாறு எல்லா சூழல் மண்டலங்களையும் மாசு சூழ் உலகமாக்கி பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிய மனிதன் இப்போது அட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தக் கதை என்பார்களே ...அதுபோல் தனக்கான வாழ்வாதாரத்தை தானே சுரண்டிக் கொண்டு இருக்கின்றான் .
          நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கும் பேதைத் தனம் மட்டுமே மனிதனிடம் எஞ்சியுள்ளது. கிளை வெட்டு பட்டதும் வீழப் போவது கிளை மட்டுமல்ல .அதில் அமர்ந்து தன் சாவுக்கு தானே குழிவெட்டுவதுபோல் , கிளையை வெட்டிக்கொண்டு இருந்தானே ...அவனும் அல்லவா...?
            தினமும் தங்க முட்டையிடும் வாத்தை வரமாகப் பெற்றவன் பேராசை மிஞ்சியமையால் ஒட்டுமொத்த வரத்தையும் ஒரே நாளில் பெரும் எண்ணம் கொண்டு வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ...ஒரு மூர்க்கன் ...அந்தக் கதையாகிவிட்டது ..மனிதனின் சூழல் விரோத நடத்தைகள் .
           விளைவு ........?
                                                        நேரம் ....வளரும் .....!




Earth Hour 2015 Official Video

Sunday 1 March 2015

தேசிய அறிவியல் தினவிழா

பண்ருட்டியில் தேசிய அறிவியல் தினவிழா
         28 -02-2015 ,ஸ்வாசிகா இயக்கம் பண்ருட்டியில் தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடியது .பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக்  பள்ளியில் நடைபெற்ற இந்த அறிவியல் திருவிழாவில் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த அறிவியல் திரு விழாவிற்கு திருவள்ளுவர் பள்ளியின் தாளாளர் திரு சேரன் அவர்கள் தலைமை தாங்கினார் . மீனாட்சி மெடிகல்ஸ் உரிமையாளர் திரு சந்திர குப்தா  அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார்.ஸ்வாசிகா நிறுவனர் முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார்,செயலர் சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.அறிவியல் கண்காட்சி, வினாடி வினா ,கவிதை ,பேச்சு .கலைப் பொருள் உருவாக்கம் ,ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடை பெற்றன.பண்ருட்டி வட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.விழாவின் துவக்கத்தில் கடந்த கல்வியாண்டில் 10, 12 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பேரரசர் விருது, கல்விக்கரசர் விருது ,பள்ளி முதல்வர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன .விநாடி வினா போட்டியில் திருவள்ளூர் பள்ளியும், அறிவியல் கண்காட்சியில் ஜான்டூயி பள்ளியும் முதல் பரிசுக் கோப்பையை வென்றன . அதிக கண்காட்சிப் பொருட்களை இடம் பெற செய்து அதற்கான கோப்பையை செயின்ட் ஆன்ஸ் பள்ளி தட்டிச் சென்றது .ரங்கப்பன் செட்டியார், s v  ஜுவல்லர்ஸ் அருள் ,வாசவி கிளப் தலைவர் சத்திய நாராயணன் ,யாமினி புட்ஸ் உரிமையாளர் ,திருவள்ளுவர் பள்ளியின் முதல்வர் சரவணன் ,புலவர் பொன்வேந்தன், பாலூர் ஆசிரியர் முத்துக்குமரன்,வேல் சிஸ்டம்ஸ் வெற்றி வேலன் ஆகியோர் கலந்துகொண்டனர் ஸ்வாசிகா தலைவர் ராஜலிங்கம் நன்றி கூறினார் .ஸ்வாசிகாவின் பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் .

Friday 20 February 2015

MESSENGER OF PEACE STAR -2014

     MESSENGER OF PEACE STAR -2014 ........என்ற பெருமை மிகு சர்வ தேச விருது கிடைத்துள்ளது ,இதனை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு .ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார் .சாரண இயக்கம் ஒரு சர்வதேச இயக்கமாகும்.இதில் உலகமெங்கும் உள்ள சாரணர்கள் உறுப்பினர்களாக இணைந்து சாரணர் சேவை ஆற்றி வருகின்றனர்.நமது பள்ளியின் சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களும் இதில் இணைந்து தம் பள்ளி சாரணர்களின் சேவைகளை SCOUT.ORG என்னும்   இணைய தளத்தில் பதிவேற்றி  வந்துகொண்டிருக்கிறார் .பல்வேறு நாடுகளை சேர்ந்த சாரணர்களும் உலக அமைதிக்காகவும் ,நல வாழ்வுக்காகவும் ,தம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமது பங்களிப்பைத் தந்து அது பற்றிய விபரங்களை   ...........என்ற இந்த இணைய தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் திரு முத்துக் குமரன் அவர்களுக்கு  உலக அளவிலான
        இதில் சாரணர் சேவையில் தொண்டு நேரக் கணக்கில் பிலிப்பைன்ஸ் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை பதிவு செய்து பங்களித்திருக்கிறார் .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை,43 வகையான சேவை நிகழ்வுகளை  பதிவு செய்து பங்களித்திருக்கிறார் . அந்த வகையில் உலகமெங்கும் மிகச் உள்ள சிறந்த சாரணர்களை -சிறந்த சேவைக்காக தேர்வு செய்து அவர்களுக்கு MESSENGER OF PEACE STAR என்ற உயரிய விருதினை உலகளாவிய சாரண இயக்கம் வழங்கி அவர்களை பெருமைப் படுத்தி வருகிறது .அதற்காக இந்த வருடம் இவ்விருது வழங்கும் விழாவானது , இந்தியாவில் ,கொல்கத்தா மாநிலத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள மத்தியம்கிராம் என்னும் ஊரில் இயங்கி வரும் மாவட்ட சாரண பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற்றது .நாடெங்கும் இருந்து 22 சாரண சாரணியர் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டனர் .அதில் கலந்துகொள்வதற்காக நமது சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் தனது மனைவி த்திருமதி புவனேஸ்வரியுடன் சென்றார்.அங்கு நடைபெற்ற அந்த சரவதேச பெருமை மிகு விழாவில் உலக சாரண இயக்கத்தின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் உயர் திரு R .ரிசால் பெங்கினைன் அவர்கள் முன்னிலையில் நமது நாட்டின் தேசிய முதன்மை சாரண ஆணையர் உயர்திரு I .B . நாகரலே அவர்கள் கரங்களால் MoP ஸ்டார் 2014  விருதும் ,சான்றிதழும் ,சிறப்பு ஸ்கார்ப்பும் வழங்கப்பட்டன . இதற்காக இவரை நமது MESSENGER OF PEACE -இந்தியக் குழுமத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் உயர்திரு கிருஷ்ணசாமி ராமமூர்த்தி அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.அந்த விருதை பெற்றுள்ள ஒரே தமிழர்,அதுவும் நமது கடலூர் மாவட்டத்தை சார்ந்த பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும் என்று தலைமை ஆசிரியர் பாராட்டினார்.
        இந்நிகழ்வின்போது பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் திரு மோகன் ராஜ்,NCC அலுவலர் திரு பாலச்சந்தர் ,NSS அலுவலர் திரு மோகன் குமார் ,முதுகலை  தமிழாசிரியர் திரு ஞான சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக சாரண ஆசிரியர் மாவட்ட செயலர் திரு செல்வநாதன் அவர்களுடன் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்ட சாரண முதன்மை ஆணையருமான திரு பாலமுரளி அவர்களையும் ,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சுரேஷ் குமார் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் .விருது பெற்ற சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் கூறுகையில் சாரண இயக்கத்தில் தன்னை வழி நடத்திய மூத்த சாரனாளர்கள் திரு ராமலிங்கம், திரு ராம மூர்த்தி ,திரு இளைய குமார், திரு வேலாயுதம் ,திரு செந்தில் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு தனது தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் ,சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் இவ்விருதினை தனது அத்துணை சாரண மாணவர்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் .மேலும் சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் 80 க்கும் மேற்பட்ட ராஜ்யபுரஸ்கார் (ஆளுநர் விருது ) சாரணர்களையும் ,2 ராஷ்டிரபதி (  குடியரசுத்   தலைவர் விருது  ) சாரனர்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
   
       

Thursday 8 January 2015

மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா

 



மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து நேரில்
வாழ்த்தி சிறப்பித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .சந்தர்ப்ப சூழலின் காரணமாக .நேரில் வர இயலாவிட்டாலும் முகநூல் மற்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் .விழாவின் வெற்றிக்கு அடிநாதமாக இருந்த என் அன்பு மாணவச் செல்வங்களுக்கு -குறிப்பாக மகேஷ்,சரவணன், ராஜலிங்கம்,மதன் ,சுந்தர்,கிருஷ்ணன்,ராஜி ,ரூபி,ப்ரியா,யுவநிதி ,நிரஞ்சன் பாலாஜி மற்றும் பல மாணவர்களுக்கு -மூன்றெழுத்தில் நன்றி என்ற ஒற்றைச் சொல் கூறி என் உள்ளத்தின் அத்துணை உணர்வுகளின் நெகிழ்ச்சிக் கலவையை அர்ப்பணிக்கின்றேன்.இன்னொரு செய்தியும் கண்டிப்பாக இங்கே குறிப்பிட்டே ஆக  வேண்டும்.எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு ஆசிரிய சகோதரிக்கு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி கூறிய போது அவர் இவ்வாறு கூறினார்..."விழா மிக சிறப்பாக இருந்தது ...குறிப்பாக உங்கள் நூலை நேற்று இரவே வாசித்தேன்... எல்லா கவிதைகளுமே மிக அருமை ...குறிப்பாக நிறைய கவிதை வரிகள் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் பொருந்திப் போகின்றன ....சில வரிகள் என் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தது போல் உணர்கிறேன் " என்று சொல்லும்போதே அவரது கண்கள் சிவந்து கண்ணீரை எட்டிப் பார்க்கச் செய்தன. அந்தக்  கண்ணீர் துளிகளை நான் என் கவிதை வரிகளுக்கான அன்கீகாரமாய்க் கருதுகிறேன்.....என் 1000 பிரதிகளுக்கான  விலையாகக் கருதுகிறேன்... அந்த 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததாய் உணர்கிறேன்....நன்றி சகோதரி...!அதே போல் அங்கு செட்டிப் பாளையம் ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் சாரதா பள்ளியின் நிர்வாகி நடராஜன் அய்யா போன்றோர் 6 நூல்களை வாங்கி தன நண்பர்களுக்கு பரிசளித்ததாகக் கேள்வியுற்றேன்.மிக்க நன்றிகள் அவர்களுக்கும் .எனது நூல்களை வாசித்த பிற முக நூல் நண்பர்களின் எனது நூல் பற்றிய கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்...!