Thursday 26 March 2015

பூமி நேரங்கள் -2

பூமி நேரங்கள் -2
         மனிதனின் சூழல் விரோத நடத்தைகளின் விளைவு ....?
         அமில மழை ,மழியின்மையால் கடும் வறட்சி ஒருபுறம் , அதிக மழையில் சிக்கி ஜல சமாதியாக்கும் வெள்ளக் காடு ஒருபுறம் ,எல் -நினா ,லா நினோ போன்ற காற்றுச் சூறாவளிகளும் கவர்ச்சியான பெண்களின் பெயர்களைத் தாங்கி பூமியையே புரட்டிப் போடும் பேய்க் காற்று -சுழல் காற்று ஒருபுறம் -தாவரங்களின் நண்பர்களாகிய  மண் புழுக்களும் ,நுண் பாக்டீரியாக்களும் கூட வாழத் தகுதியற்று மலடாய்ப் போன விளை நிலங்கள் ஒருபுறம் - காற்று மாசுபாட்டால் குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதல் காரணமாக துருவங்களிலே உருகும் பனியானது கடலில் கலந்து கடல் மட்டத்தை உயர்த்தி மிச்சமிருக்கும் ஒரு பங்கு நிலத்தையும் மூழ்கடிக்கத் துடிக்கும் மூர்க்கத் தனம் ஒருபுறம் -தகவல் தொழில் நுட்பமும் நேனோ தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணைத் தொடும் செல்போன் கோபுரங்களை உண்டாக்கி இலவசமாக கதிர் வீச்சுகளை வழங்கி சிட்டுக் குருவிகளைப் போன்ற அழகுப் பறவைகளையும் இன்ன பிற உயிரினங்களையும் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்துபோகச் செய்தது மட்டுமல்லாமல் தனக்கும் புற்று நோயையும் - பெயரே தெரியாத - மருந்துகளே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது புது நோய்களையும் உண்டாக்கிய அனைத்துப் பெருமையும் நம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் .
            அனல் மின்னாற்றல் ,நீர் மின்னாற்றல் ,சூரிய மின்னாற்றல் ,அலையாற்றல் ,புவி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க வக்கில்லாத மனித இனம் பூமியில் ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி கதிர்வீச்சு அபாயம் என்னும் வலையில் பூமியை சிக்க வைத்து விட்டான் .
               தனக்கான எல்லா ஆற்றல்களும் பூமியிலிருந்தே கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மனிதன் பூமித்தாயின் கர்ப்பப் பையான  நடுபூமி வரை ஊடுருவிச் சென்று நிலக்கரி ,பெட்ரோலியம் ,எரிவாயு என அனைத்தையும் சுரண்டி எடுத்துக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினை நிர் கதியாக்கிய  பெருமையும் நம் காலத்தவர்க்கே நிச்சயம் சேரும் .
             இது போன்று மனிதனின் சூழல் விரோத நவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது எங்கே போய் முடியும்....?
              அது பற்றி நமக்கென்ன அக்கறை ? நமக்கான வாழ்க்கையை நாம் அன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம் . வரும் தலை முறையினரின் வாழ்வைப் பற்றி நாம் என் கவலைப் பட வேடும் என்கிறீர்களா ?
              இந்த உலகம் இப்போது எப்படி உள்ளதோ ,இதை  விட சற்றே உன்னதமாக்கி -வாழும் சூழ்நிலையை மகிழ்ச்சிகரமானதாக்கி நம் சந்ததியருக்கு விட்டு செல்லும் பொறுப்பு நம்கையில் அல்லவா இருக்கிறது ?
              அது மட்டுமல்ல ... ! சூழல் விரோத நடவடிக்கை என்பது - சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது நாம் போட்ட முடிச்சு .அதை நாம்தானே அவிழ்க்க வேண்டும். !
 நம்மால் ஏற்பட்ட சிக்கலை நாம்தானே களைய வேண்டும் !
             அதற்காக இனியேனும் நமது மூளையை சற்றே கசக்கிக் கொள்ளலாமே !முதலில் எடுத்து வைக்கும் ஒருசிலரின் அடிகளால் என்ன மாற்றம் பெரிதாக வந்துவிடப் போகிறது ? என்று சிந்திக்காமல் - எதிர் கேள்விகள் கேட்காமல் --- வாதித்துக் கொண்டிராமல் - வீண் விதண்டா வாதங்களில் ஈடுபடாமல் -நேரடி செயலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது
              சிறுதுளி பெரிதல்லவா?
              அடி மேல் அடித்தால் ... அம்மியும் நகரும்தானே ?
              என்ன செய்யலாம் ......?
                                                                                                           நேரம் வளரும் ....!
                                                                                                   

                         
























No comments:

Post a Comment