Thursday 26 March 2015

பூமி நேரங்கள்-1 -EARTH HOURS-


பூமி நேரங்கள்
அது என்ன பூமி நேரங்கள்?
               நாளுக்கு நாள் நமது ஆற்றல் நுகர்வுகள் அதி பெருக்கத்தின் காரணமாக தனது வாழ் நாளின் இறுதியை நோக்கி வேகமாக பூமியை உந்தித் தள்ளிக்கொண்டு இருக்கின்றோம். இந்த அழகிய பூமி ....அழிய .... அதாவது ,இந்த உலகப் பந்து அழிவதற்கு ....அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான முழுத் தகுதியை இழப்பதற்கு முழுப் பொறுப்பும் யாருக்கு தெரியுமா ?அதன் கடைசி வரவான மனிதனுக்குத்தான் .
               ஆம். பூமியானது மனிதனுக்கு மட்டும் படைக்கப் படவில்லை .அதாவது பூமியில் மனிதன் மட்டும் தோன்றவில்லை .பல்லாயிரக்கணக்கான
உயிர்களும் தோன்றி உள்ளன.எல்லா உயிர்களும் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை இவ்வையகம் தன்னில் கொண்டுள்ளது . அதனை அனைத்து உயிர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இந்த பூமிப் பந்து அளித்துக் கொண்டு வருகிறது .
               ஆனால் ,சிந்திக்கவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே உயிரினமான மனிதனுக்கு இன்னொரு குணமும் அதிகமாகிவிட்டது .
               அதுதான் பேராசை ...!
                தனக்காக மட்டும் இந்த பூமி படைக்கப் பட்டுள்ளதாக எண்ணிய மனிதன் ஆக்க சக்திகளுக்காக பயன் படுத்தவேண்டிய அறிவியலின் வளர்ச்சியை எந்த அளவுக்கு அழிவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கும் விஞ்சி பயன்[படுத்தி பல்லுயிர் பெருக்கத்திற்கான சுற்றுச் சூழலை நஞ்சாக்கிவருகின்றான்.நகரமயமாக்கல் மூலம் வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மழை மேகங்களையும் கேள்விக்குறியாக்கிவிட்டான்  .
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளை நிலமாக்கிய மனிதன் பேராசையின் எல்லைக் கூட்டுக்கே சென்று விளை நிலங்களை விலை நிலங்களாக்கிவிட்டான் ;மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்த  இடத்தை வேகமாக கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான்.
             தொழிற்சாலைகளை பெருக்கி கழிவுகளை நதிகளிலும் கடலிலும் கலக்கவிட்டு நீர்ச் சூழலை நாசமாக்கி நீர் சூழல் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறான் .
             செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லி மருந்துகளையும் இட்டு வேளாண் புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு எஞ்சியுள்ள விளை நிலங்களை
மலடாக்கி வருகின்றான் .
             தூரத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று புற்றீசல் போல நான்கு சக்கர வாகனங்களையும் , இரு சக்கர வாகனங்களையும் பெருக்கியும் , பல்வேறு தொழிற்சாலைகளைக் கட்டி தொழிற்புரட்சி என்ற பெயரில் பூமியையே மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு புகை மண்டலமாக்கி காற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டான் .
           இவ்வாறு எல்லா சூழல் மண்டலங்களையும் மாசு சூழ் உலகமாக்கி பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிய மனிதன் இப்போது அட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தக் கதை என்பார்களே ...அதுபோல் தனக்கான வாழ்வாதாரத்தை தானே சுரண்டிக் கொண்டு இருக்கின்றான் .
          நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கும் பேதைத் தனம் மட்டுமே மனிதனிடம் எஞ்சியுள்ளது. கிளை வெட்டு பட்டதும் வீழப் போவது கிளை மட்டுமல்ல .அதில் அமர்ந்து தன் சாவுக்கு தானே குழிவெட்டுவதுபோல் , கிளையை வெட்டிக்கொண்டு இருந்தானே ...அவனும் அல்லவா...?
            தினமும் தங்க முட்டையிடும் வாத்தை வரமாகப் பெற்றவன் பேராசை மிஞ்சியமையால் ஒட்டுமொத்த வரத்தையும் ஒரே நாளில் பெரும் எண்ணம் கொண்டு வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ...ஒரு மூர்க்கன் ...அந்தக் கதையாகிவிட்டது ..மனிதனின் சூழல் விரோத நடத்தைகள் .
           விளைவு ........?
                                                        நேரம் ....வளரும் .....!




No comments:

Post a Comment