Sunday 26 February 2017

தேசிய அறிவியல் தினவிழா

      பண்ணுருட்டி, புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஸ்வாசிகா மாணவ இளைஞர் அமைப்பு பிப்ரவரி 28-ஐ முன்னிட்டு தேசிய அறிவியல் தினவிழாவை திருவள்ளுவர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தியது.
           பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 800க் கும் அதிகமான மாணவர்களும் ,65 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
     
வினாடி வினா ஓவியம்,கவிதை,பேச்சு,ஸ்பெல் பீ போட்டி, கலைப் பொருட்கள் தயாரித்தல்உள்ளிட்ட பலபோட்டிகள்நடைபெற்றன,

        திருவள்ளுவர் பள்ளியின் தாளாளர் தாய்மை தாங்கினார்.அரசூர் V R S பொறியியல் கல்லூரி முதல்வர் திரு N .அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .சக்தி ஐ .டி .ஐ  தாளாளரின் பல்வேறு வகையான கல்விச் சேவைகளை பாராட்டி அவர் ஸ்வாசிகாவின்  கல்விக் சேவா ரத்னா என்ற பெருமை மிகு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
          .S .V ,ஜூவல்லர்ஸ் உரிமையாளர் திரு.வைரக்கண்ணு  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கினார்.ஸ்வாசிகாவின் தலைவர் ராஜலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.நிறுவனர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
          V R S பொறியியல் கல்லூரி முதல்வர் திரு N .அன்பழகன் அவர்கள் சர் .சி .வி ராமன் படத்துக்கு மாலை அணிவித்தார்.பணி நிறைவு பெற்ற ஆசிரியர் K .மாசிலாமணி அவர்கள் மாணவர் எழுச்சியுரை ஆற்றினார்.
         ஸ்வாசிகா இயக்குனர் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.போட்டிகளில் சிறப்பிடம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் ,கேடயங்கள் ,சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.புதுப்பேட்டை திரு ரங்கப்பன்,அருணாசலம், கிருஷ்ணமூர்த்தி ,திருவள்ளுவர் பள்ளி முதல்வர் சரவணன் ,பாலாஜி சின்னவர்கடை தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற  மாணவர்களை வாழ்த்தினர் .
    துணை தலைவர் மதன் நன்றி கூறினார்.ஸ்வாசிகாவின் பொறுப்பாளர்கள் விமல் ,சரவணன்,பிரபு,முருகானந்தம்,
அருள்குமார்,கோபிராஜா,சுரேந்தர்,நிவாஸ்,தியாகராஜன், அரவிந்தன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

Tuesday 21 February 2017

கவிதைகணேசன் கருத்துக்கள்

பண்ருட்டி ரெயில்வே பாலம் சென்னைசாலை. நான் 1962 ல் 5 வயது பையனாக இருக்கும்போது எனது அம்மா ,இப்பாலத்திற்கு மண் பரிசோதனைக்காக மனிதர்கள் கைகளால் சுழற்றி போர்போட்டதை காண்பித்தார்கள். அதுதான் நான் பார்த்த முதல் போர்போட்ட காட்சி. அதன்பிறகு congress,DMK,ADMK,DMK, ADMK என்று மாறி மாறி ஆட்சிகள் வந்த போதெல்லாம் இப்பாலம் வந்தால் யார் பாதிப்பார்களோ அந்த வியாபாரிகள் பணம் கொடுத்து இதைக்கட்டாமல் பார்த்துக்கொண்டார்கள். கடைசியாக DMK ஆட்சியில் வேல்முருகன் MLA சட்ட சபையில் காரசாரமாகபேசி கலைஞர் பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் திட்டவரையரை கொடுத்தார். ஆட்சி மாறியபின் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் கோப்பு தூசு தட்டப்பட்டது. ஒருவழியாக நான் ரிட்டயர் ஆகி சீனியர்சிட்டிசன் ஆன பின் கட்ட ADMK காலத்தில் ஆரம்பித்தார்கள்.3 கலெக்டர் மாறிவிட்டார். நான்கு முதல்வர்கள் மாறி விட்டார்கள். வேலை ஒருவழியாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை கலெக்டர். முதல்வர் மாறு வார்கள்என்று தெரியாது.என்னுடைய ஆசையெல்லாம் நான் சிறுவனாக இரயில்வே லைனில் இந்த இடத்தில் இருந்து கிழக்கே பார்த்தால் திருவதிகை கோவில் தெரியும் . நேரே தெற்கே பார்த்தால் பனிக்கன்குப்பம் மேரிமாதா சர்ச் கோபுர விளக்கும் மேற்கே நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா கோபுரமும் தெரியும். இப்போது கட்டிடங்கள் மறைத்துவிட்டன. இப்பாலத்தில் போக்கு வரத்து ஆரம்பித்தபின் பாலத்தின் மீதேறி மீண்டும் ஒரே இடத்தில் இரயில்வே லைன் மீதிருந்து கிழக்கே திருவதிகை கோவில் கோபுரத்தையும் ,தெற்கே மாதாக்கோவில் கோபுரத்தையும், மேற்கே தர்க்கா கோபுரத்தையும் பார்க்கவேண்டும்..3 வருடமாக நாங்கள் படும் வேதனை ,பள்ளிப்பிள்ளைகள் படும் துயரம்.மார்க்கட்கடை வீதிக்கு மகளிர் செல்ல முடியாத சிரமம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இதில் லாரியில் மண் கூழ் ஏற்றிசெல்லும் போது ஆடி ஆடி. போகிறவரை அபிஷேகம் செய்யும். மாட்டினவர்களில் நானும் ஒருவன். காண்ட்ராக்ட் காரன் சாமார்த்தியமாக சர்வீஸ் ரோடு போடாமல் தப்பித்துக்கொண்டான் எங்கள் இருசக்கர வாகனம் ஆட்டோ கார்கள்சேற்றில் மாட்டி அழிந்தது ஒருபக்கம்.விடிவு???. விரைவில்.😂!?!?கவிதைகணேசன். செல் 92 45 10 34 71


அரசுத் திட்டங்களின் மறுபெயர் ஆமை வேகத்த திட்டம் என்பது தாங்கள் அறிந்ததுதான் ....ஒன்று அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் ...இன்றைய அரசியல் சூழலில் போராட்டம் என்பது விரைவில் நீர்த்துப் போக வைக்கப்படும்.நம்மால் முடிந்தது அனைத்தையும் சகித்துக்கொண்டு ....நடைமுறை வாழ்க்கைக்கு நம்மை பழக்கப் படுத்திக்க கொண்டு (அதற்குத்தான் இந்த நாட்டில் நல்ல பயிற்சி அளிக்கப் படுகிறதே...!) இப்படியெல்லாம் முக நூல்,ட்விட்டர் ,வாட்ஸ் அப் போன்றவற்றில்  புலம்புவது மூலம் மனதை தேற்றிக்கொண்டு இருக்கலாம்....!


நடப்பதெல்லாம் நன்மைக்கே.... !
இதுவும் கடந்து போகும்....!
போலாம் ...ரைட்...!

Thursday 16 February 2017

.காலம் மாறும்

         எந்த ஒரு துன்பம் அல்லது இக்கட்டான தருணங்களிலும்  அவற்றை எதிர்கொள்வதற்கான இரு தாரக மந்திர வார்த்தைகளை ...நம் முன்னோர்கள் தமிழர்களாகிய நமக்கு வழங்கியுள்ளார்கள்....

 1.எல்லாம் நன்மைக்கே....!

 2.இதுவும் கடந்து போகும்.....!

காலம் அனைத்தையும் மாற்றும்...ஆற்றும்  அரு  மருந்து ....!காத்திருப்பு நமக்கு பழகிய ஒன்றுதானே ....காத்திருப்போம் ....!
சூரியனை கிரகணம் மறைந்துள்ளது .....
விரைவில் கிரகணம் நீங்கும்....இருள் விலகி ஓடும்....
உலகம் ஒளி வெள்ளத்தில் நீந்தும்.....!

"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ....
தருமம் மறுபடியும் வெல்லும்....!
இன்று கட்டுண்டோம் ...பொறுத்திருப்போம் ...காலம் மாறும் ..தருமத்தை அப்போது வெல்லக்  காண்போம் ....."

                                                                           - தீர்க்க தரிசி....மகா கவி பாரதி....!