Sunday 26 February 2017

தேசிய அறிவியல் தினவிழா

      பண்ணுருட்டி, புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஸ்வாசிகா மாணவ இளைஞர் அமைப்பு பிப்ரவரி 28-ஐ முன்னிட்டு தேசிய அறிவியல் தினவிழாவை திருவள்ளுவர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தியது.
           பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 800க் கும் அதிகமான மாணவர்களும் ,65 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
     
வினாடி வினா ஓவியம்,கவிதை,பேச்சு,ஸ்பெல் பீ போட்டி, கலைப் பொருட்கள் தயாரித்தல்உள்ளிட்ட பலபோட்டிகள்நடைபெற்றன,

        திருவள்ளுவர் பள்ளியின் தாளாளர் தாய்மை தாங்கினார்.அரசூர் V R S பொறியியல் கல்லூரி முதல்வர் திரு N .அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .சக்தி ஐ .டி .ஐ  தாளாளரின் பல்வேறு வகையான கல்விச் சேவைகளை பாராட்டி அவர் ஸ்வாசிகாவின்  கல்விக் சேவா ரத்னா என்ற பெருமை மிகு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
          .S .V ,ஜூவல்லர்ஸ் உரிமையாளர் திரு.வைரக்கண்ணு  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கினார்.ஸ்வாசிகாவின் தலைவர் ராஜலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.நிறுவனர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
          V R S பொறியியல் கல்லூரி முதல்வர் திரு N .அன்பழகன் அவர்கள் சர் .சி .வி ராமன் படத்துக்கு மாலை அணிவித்தார்.பணி நிறைவு பெற்ற ஆசிரியர் K .மாசிலாமணி அவர்கள் மாணவர் எழுச்சியுரை ஆற்றினார்.
         ஸ்வாசிகா இயக்குனர் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.போட்டிகளில் சிறப்பிடம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் ,கேடயங்கள் ,சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.புதுப்பேட்டை திரு ரங்கப்பன்,அருணாசலம், கிருஷ்ணமூர்த்தி ,திருவள்ளுவர் பள்ளி முதல்வர் சரவணன் ,பாலாஜி சின்னவர்கடை தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற  மாணவர்களை வாழ்த்தினர் .
    துணை தலைவர் மதன் நன்றி கூறினார்.ஸ்வாசிகாவின் பொறுப்பாளர்கள் விமல் ,சரவணன்,பிரபு,முருகானந்தம்,
அருள்குமார்,கோபிராஜா,சுரேந்தர்,நிவாஸ்,தியாகராஜன், அரவிந்தன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment