Sunday 30 November 2014

சித்தவடமடம்

          கடலூர் மாவட்டத்தில் பண்ணுருட்டி வட்டத்தில் திருவதிகைக்கு அருகில் அதாவது 7 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ளது புதுப்பேட்டை என்னும் பேரூராட்சி.அங்கு பக்கத்திலேயே கோட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூர். அங்கு உள்ளது சித்தவடமடம் என்னும் திருத்தலம். அதிகம் அறியப்படாத இதன் பெருமை இதோ உங்களுக்காக.
          தேவாரம் பாடிய நால்வருள் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார்.கல்யாண சுந்தரர் என்றும் ஆலால சுந்தரர் என்றும் போற்றப் படுகின்ற இவர் எம்பெருமான் தில்லை நடனமாடும் சிதம்பறேச்வரன்....திருஅதிகை உறையும் வீரட்டானத்துறை அம்மானால் மணம்  தவிழ்ந்த புத்தூர் என்னும் சிற்றூரில் திருமணம் தடுக்கப்பட்டு தடுத்தாட்கொண்ட வரலாறும் பின்னர் இறைவனால் வழிநடத்தப்பட்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தொழுது 'பித்தா பிறை சூடி ..." என்ற பதிகம் பாடி மெய்யுருகி நின்றது பெரிய புராணத்தில் நாம் கண்டதுதான்.செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புத நடிப்பில் திருவருட் செல்வர் என்ற திரைப்படத்திலும் கண்டு ரசித்ததுதான்...பின்னர் நடந்த கதை ...இங்கு நாம் குறிப்பிட்டுள்ள சித்தவட மடத்தில் நடந்ததாக பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.அது என்ன கதை...?
       
           திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தரிசித்து பதிகங்கள் பல பாடி தொழுத நம் சுந்தரர் தம் திருமணக் கோலம் கலையாமல் திருத்துறையூரில் உள்ள சிஷ்ட குருநாதரைத் தொழுது பின் அப்போதைய ரோஜபுரி  என்னும் தற்போதைய புதுப்பேட்டை பகுதி வழியாக சிதம்பரத்திலே...சிற்றம்பலத்திலே ஆடுகின்ற நடராசப் பெருமானை கண்டு சேவிக்க எண்ணி திருவுளம் கொள்கிறார்.ஆனால் திருவதிகை வீரட்டானத்து திருத்தலத்திலே கோயில் கொண்டுள்ள வீரட்டாநேச்வரரை தரிசிக்க நினைத்தாலும் ...அங்கே உழவாரத் திருப்பணி செய்து வந்த திருநாவுக்கரசர் பெருமான் திருவடி பட்ட மண்ணை தம் பாதங்களால் தீண்ட அஞ்சிய காரணத்தால் ரோஜபுரிக்கு அருகில் கேடிலம்பாக்கம் என்னும் பகுதியை அடுத்திருந்த சித்த வட  மடத்தில் இரவு தங்குகிறார்.இரவு போஜனத்தை முடித்த சுந்தரர் வெளியில் இருந்த திண்ணை மேல் தலை வைத்துக் கன்னயர்கிறார்.உறக்கத்தின் நடுவில் தன தலிமேல் ஏதோ தீண்டப் பட்டு கண்விழித்த சுந்தரர் அது ஒரு வயதான வேதியரின் பாதம் என்பதை அறிந்து சற்றே தள்ளிப் படுக்கிறார்.ஆனால் மறுபடியும் கிழவனாரின் கால்கள் தன மேல் பட வேறு திண்ணைக்கு மாறி அங்கு துயில் கொள்கிறார்.ஆனால் அங்கும் தன உறக்கம் கெட வெகுண்டெழுந்த சுந்தரர் ஏய் கிழவா ...யார் நீ? எனக் கோபத்தோடு வினவ ... கிழவனார் ...என்னைத் தெரியவில்லையா ..என்று கேட்டு மறைய சிவபெருமான் அவ்விடத்து ரிஷப வாகனத்தில் அன்னை உமையாளோடு அம்மையப்பனாக காட்சி கொடுத்த இடம்தான் இப்போதைய கருவறை. ஆம்... இதுதான் சுந்தரருக்கு திருவடி சூட்டிய திருத்தலம்.அதைகண்டு பரவசமேய்திய சுந்தரர் ...தம்மானை அறியாத சாதியருளரோ எனத் துவங்கி பத்து பதிகங்களை திருவதிகையில் உள்ள வீரட்டானத்து இறைவனை விளித்து பாடியுள்ளார்..எனவே இது ஓர்  வைப்புத் தளம் .இங்குள்ள இறைவன் அருள்மிகு சிற்றம்பலனாதர்.இறைவி.. சிவகாம சுந்தரி.



                                                                                                           

அருள் மழை பொழியும்...!

Friday 28 November 2014

இந்தி திணிப்பு

     





 இந்தி எதிர்ப்பு ,சமஸ்கிருதம் எதிர்ப்பு ...இப்படி நம்மாட்களுக்கு எதையாவது எதிர்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்பதே ஒரு பெரிய மன வியாதியாகப் பார்க்கிறேன் நான் ...!இந்தி திணிப்பு என்பதை திணிப்பு என்று
என் எடுத்துக் கொள்கிறீர்கள்?இன்னும் ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு என்று எடுத்துக்கொள்வோமே...!அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்கள் பக்கம் போய் வந்தவர்களுக்கு தெரியும் ... இந்தி மொழியின் அருமையும் ... அதனை  தாம் கற்றுக் கொள்ளாமையால் பட்ட பாடுகளும்...!
     அப்படி நாம் ஒரு வேலை இந்தியை கற்றுக்கொண்டால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது. நம் தமிழ் மொழி காலங்களையும் விஞ்சி வாழும் மொழி .தமிழ்(தாய் ) மொழிமேல் பற்று வை ... பிற மொழிகளையும் கற்று வை ...என்பது மூத்தோர்கள் மொழி...!நம்மை இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லி ...தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்று சொன்ன அரசியல்வாதிகளின் வாரிசுகள் ...வாரிசுகளின் வாரிசுகள் எல்லாரும் நவோதயா பள்ளிகளிலும் C B S E பள்ளிகளிலும் சேர்ந்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்று தமிழ் மொழியில் தகராறாகி நாகரீக வளம் வருவதை நடைமுறையில் பார்த்தாலும் நமக்கெல்லாம் புத்தி வராது ...!உண்மையில் நம் அரசியல் வாதிகள் ஒன்றும் தமிழ் சேவையாற்ற அவதரிக்கவில்லை ...இந்தி திணிப்பு ...இலங்கைத் தமிழர் பிரச்சினை ,காவிரிப் பிரச்சினை ,முல்லைப் பெரியாறு பிரச்சினை ...இன்னபிற பிரசினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய்ந்து ...அறிக்கைகள் விடுத்தது அரசியல் நடத்தி காய்கள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழும் இருக்கும்.அதுபோலவே கடைசி அரசியல்வாதி இருக்கும்வரை மேற்கண்ட பிரச்சினைகளும் இருந்தே தீரும். பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்துவது ,,....கடைசிவரையில் பிரச்சினைகளை தீரவிடாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வர் நம் அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி ....! 
       நாம் இக் கூத்துகளை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவைக் காட்சிகளாய் எடுத்துக்கொண்டு சிரித்துத் தொலைத்துவிட்டு ...நடைமுறை வாழ்வை மனதில் கொண்டு...தமிழ் மொழின்மேல் தீராத காதல் கொண்டு ...இந்தி மொழி மட்டுமல்லாமல் முடிந்தால் இன்னும் சில மொழிகளையும் கற்றுக் கொண்டு...தமிழை ...தமிழன்னையை வாழ வைப்போம் ...!
      அது சரி ... மத்திய அமைச்சர் தருண் விஜெய் அவர்கள் இந்திமொழிமேல் மட்டும் பற்று (வெறி )வைத்து தமிழ் மொழிமேல் வெறுப்பு வைத்திருந்தால் அவையில் திருக்குறளை தன் குரலால் ஒலிக்கவைதிருப்பாரா ...தமிழ் மொழியின் சிறப்பை, திருக்குறளின் சிறப்பை ,பாரதியின் புகழை ...காசியில் அவர் வாழ்ந்த வீட்டின் சிறப்பை அவர் எவ்வளு சிலாகித்து பேசியிருக்கிறார்...பாரதி கூட யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான்...அப்படியென்றால் அவன் பிறமொழிகளை கற்றதால் தானே அவற்றோடு நம் தமிழை ஒப்பிட முடிந்தது ...?
         அண்ணாவின் மொழிப் பற்று வாழ்க...!அவரது வாதத் திறமையை நிச்சயம் மெச்சுவோம் ....தமிழ் மொழி வாழ்க ...!ஹிந்தியையும் கற்றுக்கொண்டு பாரதமெங்கும் வளம் வருவோம் ...ஜெய் ஹிந்த் !


Wednesday 19 November 2014

வாழ்க நீ எம்மான் !

      நான் பணியாற்றும் பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் 

வெளி மதில் சுவற்றில் கண்ட கண்ட சுவரொட்டிகளை ஓட்டுவதை 

தடுப்பதற்காக முக நூல் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் 

நிதி உதவியோடு 23 தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் உருவ 

ஓவியங்களை ஓவியர் சண்முகம் மூலமாக தீட்டினோம் . அரசு 

மேல்நிலைப் பள்ளியின் சுவரா இது என்று அவ்வழியே 

செல்வோறேல்லாம் வியந்து பாராட்டினர் .பத்திரிகைகளும் அது குறித்து 

பாராட்டி செய்திகள் வெளியிட்டன .அந்த வழியே செல்லும் பொது 

மக்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் கலை விருந்தளித்த ஓவியங்கலின் 

கதியைத்தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.குறிப்பாக நம் தேசத் தந்தை 

காந்தியடிகளின் திரு உருவத்தின் மேல் சமூக விரோதிகள் சிலர் 

செய்திருக்கும் கிறுக்கல்களைப் பாருங்கள்.செய்தது பொது மக்களா 

அல்லது மாணவர்களா என்று எங்களுக்கு தெரியவில்லை .ஆனால் 

பார்க்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.எப்போதும் 

நடமாட்டமுள்ள சாலை .. எதிர் புறங்களில் கடைகள்... இருந்தும் 

எப்போது இப்படி செய்கிறார்கள்...? ஒருவேளை ஊரெல்லாம் அடங்கிய 

பின் காத்திருந்து இப்படி செய்கிறார்களா?இதை தடுப்பதற்கு எதாவது 

வழி உள்ளதா...? அல்லது திருடனைப் பார்த்து திருந்த வேண்டுமா ... 

தெரியவில்லை ... !நண்பர்களிடம் இதை வேதனையோடு பகிர்கிறேன் .... !

வாழ்க அந்த கயவர்களின் தேச பக்தி ...வந்தே மாதரம் ...ஜெய் ஹிந்த் !