Sunday 30 November 2014

சித்தவடமடம்

          கடலூர் மாவட்டத்தில் பண்ணுருட்டி வட்டத்தில் திருவதிகைக்கு அருகில் அதாவது 7 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ளது புதுப்பேட்டை என்னும் பேரூராட்சி.அங்கு பக்கத்திலேயே கோட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூர். அங்கு உள்ளது சித்தவடமடம் என்னும் திருத்தலம். அதிகம் அறியப்படாத இதன் பெருமை இதோ உங்களுக்காக.
          தேவாரம் பாடிய நால்வருள் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார்.கல்யாண சுந்தரர் என்றும் ஆலால சுந்தரர் என்றும் போற்றப் படுகின்ற இவர் எம்பெருமான் தில்லை நடனமாடும் சிதம்பறேச்வரன்....திருஅதிகை உறையும் வீரட்டானத்துறை அம்மானால் மணம்  தவிழ்ந்த புத்தூர் என்னும் சிற்றூரில் திருமணம் தடுக்கப்பட்டு தடுத்தாட்கொண்ட வரலாறும் பின்னர் இறைவனால் வழிநடத்தப்பட்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தொழுது 'பித்தா பிறை சூடி ..." என்ற பதிகம் பாடி மெய்யுருகி நின்றது பெரிய புராணத்தில் நாம் கண்டதுதான்.செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புத நடிப்பில் திருவருட் செல்வர் என்ற திரைப்படத்திலும் கண்டு ரசித்ததுதான்...பின்னர் நடந்த கதை ...இங்கு நாம் குறிப்பிட்டுள்ள சித்தவட மடத்தில் நடந்ததாக பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.அது என்ன கதை...?
       
           திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தரிசித்து பதிகங்கள் பல பாடி தொழுத நம் சுந்தரர் தம் திருமணக் கோலம் கலையாமல் திருத்துறையூரில் உள்ள சிஷ்ட குருநாதரைத் தொழுது பின் அப்போதைய ரோஜபுரி  என்னும் தற்போதைய புதுப்பேட்டை பகுதி வழியாக சிதம்பரத்திலே...சிற்றம்பலத்திலே ஆடுகின்ற நடராசப் பெருமானை கண்டு சேவிக்க எண்ணி திருவுளம் கொள்கிறார்.ஆனால் திருவதிகை வீரட்டானத்து திருத்தலத்திலே கோயில் கொண்டுள்ள வீரட்டாநேச்வரரை தரிசிக்க நினைத்தாலும் ...அங்கே உழவாரத் திருப்பணி செய்து வந்த திருநாவுக்கரசர் பெருமான் திருவடி பட்ட மண்ணை தம் பாதங்களால் தீண்ட அஞ்சிய காரணத்தால் ரோஜபுரிக்கு அருகில் கேடிலம்பாக்கம் என்னும் பகுதியை அடுத்திருந்த சித்த வட  மடத்தில் இரவு தங்குகிறார்.இரவு போஜனத்தை முடித்த சுந்தரர் வெளியில் இருந்த திண்ணை மேல் தலை வைத்துக் கன்னயர்கிறார்.உறக்கத்தின் நடுவில் தன தலிமேல் ஏதோ தீண்டப் பட்டு கண்விழித்த சுந்தரர் அது ஒரு வயதான வேதியரின் பாதம் என்பதை அறிந்து சற்றே தள்ளிப் படுக்கிறார்.ஆனால் மறுபடியும் கிழவனாரின் கால்கள் தன மேல் பட வேறு திண்ணைக்கு மாறி அங்கு துயில் கொள்கிறார்.ஆனால் அங்கும் தன உறக்கம் கெட வெகுண்டெழுந்த சுந்தரர் ஏய் கிழவா ...யார் நீ? எனக் கோபத்தோடு வினவ ... கிழவனார் ...என்னைத் தெரியவில்லையா ..என்று கேட்டு மறைய சிவபெருமான் அவ்விடத்து ரிஷப வாகனத்தில் அன்னை உமையாளோடு அம்மையப்பனாக காட்சி கொடுத்த இடம்தான் இப்போதைய கருவறை. ஆம்... இதுதான் சுந்தரருக்கு திருவடி சூட்டிய திருத்தலம்.அதைகண்டு பரவசமேய்திய சுந்தரர் ...தம்மானை அறியாத சாதியருளரோ எனத் துவங்கி பத்து பதிகங்களை திருவதிகையில் உள்ள வீரட்டானத்து இறைவனை விளித்து பாடியுள்ளார்..எனவே இது ஓர்  வைப்புத் தளம் .இங்குள்ள இறைவன் அருள்மிகு சிற்றம்பலனாதர்.இறைவி.. சிவகாம சுந்தரி.



                                                                                                           

அருள் மழை பொழியும்...!

No comments:

Post a Comment