Wednesday 19 November 2014

வாழ்க நீ எம்மான் !

      நான் பணியாற்றும் பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் 

வெளி மதில் சுவற்றில் கண்ட கண்ட சுவரொட்டிகளை ஓட்டுவதை 

தடுப்பதற்காக முக நூல் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் 

நிதி உதவியோடு 23 தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் உருவ 

ஓவியங்களை ஓவியர் சண்முகம் மூலமாக தீட்டினோம் . அரசு 

மேல்நிலைப் பள்ளியின் சுவரா இது என்று அவ்வழியே 

செல்வோறேல்லாம் வியந்து பாராட்டினர் .பத்திரிகைகளும் அது குறித்து 

பாராட்டி செய்திகள் வெளியிட்டன .அந்த வழியே செல்லும் பொது 

மக்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் கலை விருந்தளித்த ஓவியங்கலின் 

கதியைத்தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.குறிப்பாக நம் தேசத் தந்தை 

காந்தியடிகளின் திரு உருவத்தின் மேல் சமூக விரோதிகள் சிலர் 

செய்திருக்கும் கிறுக்கல்களைப் பாருங்கள்.செய்தது பொது மக்களா 

அல்லது மாணவர்களா என்று எங்களுக்கு தெரியவில்லை .ஆனால் 

பார்க்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.எப்போதும் 

நடமாட்டமுள்ள சாலை .. எதிர் புறங்களில் கடைகள்... இருந்தும் 

எப்போது இப்படி செய்கிறார்கள்...? ஒருவேளை ஊரெல்லாம் அடங்கிய 

பின் காத்திருந்து இப்படி செய்கிறார்களா?இதை தடுப்பதற்கு எதாவது 

வழி உள்ளதா...? அல்லது திருடனைப் பார்த்து திருந்த வேண்டுமா ... 

தெரியவில்லை ... !நண்பர்களிடம் இதை வேதனையோடு பகிர்கிறேன் .... !

வாழ்க அந்த கயவர்களின் தேச பக்தி ...வந்தே மாதரம் ...ஜெய் ஹிந்த் !




No comments:

Post a Comment