Friday 28 November 2014

இந்தி திணிப்பு

     





 இந்தி எதிர்ப்பு ,சமஸ்கிருதம் எதிர்ப்பு ...இப்படி நம்மாட்களுக்கு எதையாவது எதிர்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்பதே ஒரு பெரிய மன வியாதியாகப் பார்க்கிறேன் நான் ...!இந்தி திணிப்பு என்பதை திணிப்பு என்று
என் எடுத்துக் கொள்கிறீர்கள்?இன்னும் ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு என்று எடுத்துக்கொள்வோமே...!அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்கள் பக்கம் போய் வந்தவர்களுக்கு தெரியும் ... இந்தி மொழியின் அருமையும் ... அதனை  தாம் கற்றுக் கொள்ளாமையால் பட்ட பாடுகளும்...!
     அப்படி நாம் ஒரு வேலை இந்தியை கற்றுக்கொண்டால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது. நம் தமிழ் மொழி காலங்களையும் விஞ்சி வாழும் மொழி .தமிழ்(தாய் ) மொழிமேல் பற்று வை ... பிற மொழிகளையும் கற்று வை ...என்பது மூத்தோர்கள் மொழி...!நம்மை இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லி ...தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்று சொன்ன அரசியல்வாதிகளின் வாரிசுகள் ...வாரிசுகளின் வாரிசுகள் எல்லாரும் நவோதயா பள்ளிகளிலும் C B S E பள்ளிகளிலும் சேர்ந்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்று தமிழ் மொழியில் தகராறாகி நாகரீக வளம் வருவதை நடைமுறையில் பார்த்தாலும் நமக்கெல்லாம் புத்தி வராது ...!உண்மையில் நம் அரசியல் வாதிகள் ஒன்றும் தமிழ் சேவையாற்ற அவதரிக்கவில்லை ...இந்தி திணிப்பு ...இலங்கைத் தமிழர் பிரச்சினை ,காவிரிப் பிரச்சினை ,முல்லைப் பெரியாறு பிரச்சினை ...இன்னபிற பிரசினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய்ந்து ...அறிக்கைகள் விடுத்தது அரசியல் நடத்தி காய்கள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழும் இருக்கும்.அதுபோலவே கடைசி அரசியல்வாதி இருக்கும்வரை மேற்கண்ட பிரச்சினைகளும் இருந்தே தீரும். பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்துவது ,,....கடைசிவரையில் பிரச்சினைகளை தீரவிடாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வர் நம் அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி ....! 
       நாம் இக் கூத்துகளை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவைக் காட்சிகளாய் எடுத்துக்கொண்டு சிரித்துத் தொலைத்துவிட்டு ...நடைமுறை வாழ்வை மனதில் கொண்டு...தமிழ் மொழின்மேல் தீராத காதல் கொண்டு ...இந்தி மொழி மட்டுமல்லாமல் முடிந்தால் இன்னும் சில மொழிகளையும் கற்றுக் கொண்டு...தமிழை ...தமிழன்னையை வாழ வைப்போம் ...!
      அது சரி ... மத்திய அமைச்சர் தருண் விஜெய் அவர்கள் இந்திமொழிமேல் மட்டும் பற்று (வெறி )வைத்து தமிழ் மொழிமேல் வெறுப்பு வைத்திருந்தால் அவையில் திருக்குறளை தன் குரலால் ஒலிக்கவைதிருப்பாரா ...தமிழ் மொழியின் சிறப்பை, திருக்குறளின் சிறப்பை ,பாரதியின் புகழை ...காசியில் அவர் வாழ்ந்த வீட்டின் சிறப்பை அவர் எவ்வளு சிலாகித்து பேசியிருக்கிறார்...பாரதி கூட யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான்...அப்படியென்றால் அவன் பிறமொழிகளை கற்றதால் தானே அவற்றோடு நம் தமிழை ஒப்பிட முடிந்தது ...?
         அண்ணாவின் மொழிப் பற்று வாழ்க...!அவரது வாதத் திறமையை நிச்சயம் மெச்சுவோம் ....தமிழ் மொழி வாழ்க ...!ஹிந்தியையும் கற்றுக்கொண்டு பாரதமெங்கும் வளம் வருவோம் ...ஜெய் ஹிந்த் !


No comments:

Post a Comment