அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !
புத்தாண்டு என்றதும் நினைவுக்கு வருவது கேக் ,வாழ்த்துக்கள் ,
பார்ட்டி ,உற்சாக பானங்கள் ,கோவில் அர்ச்சனை ...இப்படி பல ...
இவற்றோடு இன்னொன்றும் வரிசையில் .இணைந்துகொள்ளும்
அது என்ன தெரியுமா?
புத்தாண்டு சபதம் .ஆம் ...!
புத்தாண்டு பிறக்கிறதோ இல்லையோ ...சபதம் எடுக்க தவறுவதில்லை
ஒவ்வொருவரும் .
ஆனால் சபதங்கள் அதனையும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள்
போல காற்றிலே பறந்துவிடும் .
குடிகாரன் பேச்சு மட்டுமல்ல ...விடிஞ்சா போவது ...!
புத்தாண்டு சபதங்களும்கூட இரண்டாம் நாள் விடிந்தவுடனே போய்
விடுவதுதான் சோகம் .
சபதம் எடுப்பதில் காட்டும் வேகத்தை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை.
அதனால் நான் என்ன சொல்கிறேனென்றால் .....
இனிமேலாவது புத்தாண்டு அன்று எந்த சபதமும் எடுக்காமல்
நாமாகவே நல்ல விஷயங்களை நடைமுறைப் படுத்துவோம்
அல்லது செயல்படுவோம் என்று ஒரு சபதம் எடுத்துவிடுவோமா?
.
..ஐயோ ...ஐயோ ...யாரோ தொரத்திக்கிட்டு வராங்களே ... !
happy new year !