நான் புதிதாக துவங்கியிருக்கும் இந்த வலைப் பூ ...
என் மனதில் உருவாகிச் சிதறும் எண்ணங்களை
வண்ணங்களாய்க் குழைத்து வாசம் வீசப் போகும் மலர் ...!
அனுபவங்களின் கிளைகளில் ...
எண்ண ஓட்டங்களின் வேர்களில் பூக்கும் பூ ...!
தொடர்ந்து பூக்கும் நித்ய மல்லியாய் இல்லாமல்
அவ்வப்போது மலரும் செண்பகமாய் மனம் வீசும் ...!
நுகரக் காத்திருங்கள் ...!
No comments:
Post a Comment