Sunday 1 March 2015

தேசிய அறிவியல் தினவிழா

பண்ருட்டியில் தேசிய அறிவியல் தினவிழா
         28 -02-2015 ,ஸ்வாசிகா இயக்கம் பண்ருட்டியில் தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடியது .பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக்  பள்ளியில் நடைபெற்ற இந்த அறிவியல் திருவிழாவில் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த அறிவியல் திரு விழாவிற்கு திருவள்ளுவர் பள்ளியின் தாளாளர் திரு சேரன் அவர்கள் தலைமை தாங்கினார் . மீனாட்சி மெடிகல்ஸ் உரிமையாளர் திரு சந்திர குப்தா  அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார்.ஸ்வாசிகா நிறுவனர் முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார்,செயலர் சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.அறிவியல் கண்காட்சி, வினாடி வினா ,கவிதை ,பேச்சு .கலைப் பொருள் உருவாக்கம் ,ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடை பெற்றன.பண்ருட்டி வட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.விழாவின் துவக்கத்தில் கடந்த கல்வியாண்டில் 10, 12 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பேரரசர் விருது, கல்விக்கரசர் விருது ,பள்ளி முதல்வர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன .விநாடி வினா போட்டியில் திருவள்ளூர் பள்ளியும், அறிவியல் கண்காட்சியில் ஜான்டூயி பள்ளியும் முதல் பரிசுக் கோப்பையை வென்றன . அதிக கண்காட்சிப் பொருட்களை இடம் பெற செய்து அதற்கான கோப்பையை செயின்ட் ஆன்ஸ் பள்ளி தட்டிச் சென்றது .ரங்கப்பன் செட்டியார், s v  ஜுவல்லர்ஸ் அருள் ,வாசவி கிளப் தலைவர் சத்திய நாராயணன் ,யாமினி புட்ஸ் உரிமையாளர் ,திருவள்ளுவர் பள்ளியின் முதல்வர் சரவணன் ,புலவர் பொன்வேந்தன், பாலூர் ஆசிரியர் முத்துக்குமரன்,வேல் சிஸ்டம்ஸ் வெற்றி வேலன் ஆகியோர் கலந்துகொண்டனர் ஸ்வாசிகா தலைவர் ராஜலிங்கம் நன்றி கூறினார் .ஸ்வாசிகாவின் பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் .

No comments:

Post a Comment