Thursday 26 March 2015

பூமிப் பந்தைக் காப்போமா தோழர்களே?

பூமிப் பந்தைக் காப்போமா தோழர்களே?

இன்னும் இரு தினங்களே உள்ளன .


28-032015 -சனிக்கிழமை இரவு சரியாக 8-30 மணி முதல் 9-30 மணிவரை மின் விளக்குகள் அனைத்தையும் அனைத்துவைப்போம் .
மின் சாதங்கள் அனைத்தின் இயக்கத்தையும் நிறுத்தி வைப்போம் .
ஆற்றலை சேமிப்போம்
புவி வெப்பமயமாதலை தடுப்போம் .
 நாம் மட்டுமல்ல மின் இயக்கத்தினை நிறுத்தப்போவது ...!
 இவ்வுலகம் முழுக்கத்தான் .
 இப்புவி கொஞ்சம் கொஞ்சமாக உயிர்கள் வாழ்வதற்கான தகுதியை இழந்து வருவதற்கு நாம்தானே காரணம் ....!
இதற்கு நாம்தானே பிராயச் சித்தம் தேடவேண்டும் !
அதற்கான முயற்சியின் சிறு தொடக்கம்தான் இது ...!
நம் ஒருவரின் இல்லத்தில் ஒரு மணிநேரத்திற்கு சேகரமாகும் மின்சாரத்தின் யூனிட் அளவைப் பாருங்கள் .
ஒரு வீட்டில் இவ்வளவு என்றால் ஒரு ஊரில் எவ்வளு மின்சாரம் மிச்சமாகும்...?
ஒரு ஊரில் இவ்வளவு எனில் ஒரு மாநிலம் முழுமைக்கும் எவ்வளவு ...?
ஒரு மாநிலத்தில் இவ்வளவு எனில் ஒரு நாடு முழுக்க ஒரு மணிநேரம் எவ்வளவு ஆற்றல்  சேமிக்கலாம் ? ஒரு நாட்டில் மட்டுமே இவ்வளவு எனில் இவ்வுலகம் முழுமைக்கும் ....?
நினைத்துப் பாருங்கள் .... !இது ஒரு சிறு துவக்கம்தான் ...






No comments:

Post a Comment