Monday, 27 July 2015

கனவு கலைந்தது

கனவு கலைந்தது 


கனவு காணச் சொன்ன எங்கள் அறிவியலே ...
நீ பிறப்பால் ஒரு இசுலாமியன் ...
உன்னால் இரும்பூது எய்தியது இசுலாம் மதம் ...!
நீ வளர்ப்பால் ஒரு தமிழன் ....!
தற்பெருமையால் தலை நிமிர்ந்தது தமிழகம் ...!
உன் கல்வி அறிவால்  மேதைமையால் 
                                                                 ஒரு இந்தியன் .....!
இதயமெங்கும் கர்வம் கொண்டது இந்தியா .....!
மதங்களைக் கடந்து மக்களின் நேசிப்பால் 
                             ஒரு சிறந்த மனிதன் ...உன்னதன் ...!
            உற்சாகம் கொண்டது உன்னால் உலகம் ....!
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன 
                                               எங்கள் கனவு மனிதனே ...!
             நீயே இன்று கலைந்துபோனதால் ......
                                               மனம் கனத்தது மனிதம் ...!

No comments:

Post a Comment