Sunday 23 July 2017

ஆட்சியரின் பாராட்டு

        










     
 கடந்த மே மாத இறுதியில் புதுவை அரசின் அழைப்பை ஏற்று காரைக்காலில் நடை பெற்ற ஓவிய பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு ஓவிய  பயிற்சி அளித்திருந்தேன்.
     
      பள்ளி முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியை திருமதி சித்ரா அவர்கள் நிகழ்வை அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு கிரிவாசன் அவர்கள் எங்களுக்கு அருகிலிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார்.
        அப்போது நான் மாணவர்களுக்கு சிறப்பான முறையிலும் ஆர்வமூட்டும் வகையிலும் ஓவிய பயிற்சி அளித்தமையை,கண்காட்சி அமைத்தமையைப் பாராட்டி காரைக்கால் ஆட்சியர் எனக்கு அனுப்பிய பாராட்டு மடல்.இதனை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
          ஏதோ பயிற்சி அளித்தார்கள்...நாம் அதற்கான ஊக்கத்தொகை & பயணப்படி வழங்கினோம் என்றில்லாமல் ..தனது பல அலுவல்களுக்கு இடையேயும் எங்கள் பயிற்சியை நினைவில்கொண்டு சற்று தாமதமாக அனுப்பினாலும் கூட மறவாமல் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்து என்னை பெருமைப் படுத்திய காரைக்கால் ஆட்சித் தலைவர்
           உயர்திரு ,   P .பார்த்திபன் I A S    அவர்களுக்கு
  
என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருமதி சித்ரா அவர்களுக்கும் திரு.கிரிவாசன் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடைமைப் பட்டுள்ளேன். இது போன்ற தருணங்களே எங்களை தொடர்ந்து சேவைக் களத்தில்  செயலாற்ற  வைக்கின்றன .

No comments:

Post a Comment