Saturday 13 May 2017

அன்னையர் தினம்

அன்னையர் தினமாம்...!
..............?
அன்னையர்க்கென்று தனியாக ஒரு தினமா?
நாம் பிறந்த வினாடி முதற்கொண்டு 
நாம் இப்புவியில் ஜீவிக்கின்ற எல்லா நாளுமே 
அன்னையர் தினமன்றோ....!
ஒவ்வொரு குழந்தையும் 
தனது தாய் மொழியில் பேசுகின்ற 
முதல் கவிதை 'அம்மா '
தினங்களையும் 
கொண்டாட்டங்களையும் 
வாழ்த்துக்களையும் கடந்தவள்அம்மா ..
அவளுக்காக ஒரு நாளை ஒதுக்குவதை விடுங்கள் ..
அவளை...நமக்கு  உயிர் கொடுத்தவளை 
நம் உயிர்  உள்ளவரையும் கொண்டாடுவோம்....!


No comments:

Post a Comment