Monday 16 April 2018

நிருபர் அவர்கள் ,

ஐயா,
     
       வணக்கம்
       எங்கள் ஸ்வாசிகா இயக்கம் கடந்த 22 ஆண்டுகளாக கோடைக்காலத்தில் ஓவிய ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலன் பெறும்வண்ணம் இலவச ஓவிய பயிற்சி முகாமையும் ,ஓவியப் போட்டி ,ஓவியக் கண்காட்சி ,பிரபல ஓவியர்கள் உடனான சந்திப்பு ஆகியவற்றையும் நிகழ்த்திவருகிறது . இம்முகாம் மூலம் பல மாணவர்கள் கவின்கலைக் கல்லூரிகளில் சேர்ந்து ஓவியக் கலை வித்தகர்கள் ஆகி ஓவியம் சார்ந்த பல்வேறு உயர்   பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.
        இவ்வருடம் எங்கள் இயக்கம் 23 ஆவது ஆண்டு  கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாமை மே -1  முதல் மே-10 வரை   பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்துகிறது .ஆர்வம் கொண்ட  மாணவ மாணவியர் மே மாதம் -1 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு பள்ளி வளாகம் வருகைதந்து தங்கள் பெயரை பதிவு  செய்து அன்றே பயிற்சியில் இணைந்திடலாம் .அது பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தையும் இத்துடன்   இணைத்துள்ளோம் .இச் செய்தியினை தங்கள்  நாளிதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

அன்புடன் ,
முத்துக் குமரன் ,
நிறுவனர் ,
ஸ்வாசிகா ,
புதுப்பேட்டை,பண்ணுருட்டி













 ?


No comments:

Post a Comment