உயிரும் உணர்வும் தமிழே
பேசும் மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழே
நேசம் வைத்திடுவோம் எங்கள் தாய்மொழி தமிழே
தமிழ் தமிழ் என்னும் போதினிலே ..
அமிழ்தம் பாயுது காதினிலே ...
நாம் அலாதி இன்பம் காண்பது
தமிழ்மொழி பேசும் வேளையிலே ..! (பேசும்)
கல் தோன்றும் முன்னே மண் தோன்றும் முன்னே
முன் தோன்றி வளர் மொழி தமிழே .!
காலத்தை வென்றும் தேசத்தை வென்றும்
வாசம்தான் வீசும் மொழி தமிழே !
நம் ஊனோடும் உயிரோடும் உணர்வோடும் கலந்து
ஒன்றாக நிற்கும் மொழி தமிழே !
வானோங்கி வளரும் தமிழர்தம் புகழை
மென்மேலும் வளர்ப்பது தமிழே !
தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் அன்னைதான் எங்கள் வாழ்வே ...!
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
என நாளும் பாடி
தமிழுக்காய்ப் போகும் எங்கள் உயிரே ...! (பேசும்)
இது கவிதை ...பாடல் ...கவிதை பாடல் ...இசையோடு பாடவும் நன்று !
கவிஞர் - அ .முத்துக் குமரன்
பேசும் மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழே
நேசம் வைத்திடுவோம் எங்கள் தாய்மொழி தமிழே
தமிழ் தமிழ் என்னும் போதினிலே ..
அமிழ்தம் பாயுது காதினிலே ...
நாம் அலாதி இன்பம் காண்பது
தமிழ்மொழி பேசும் வேளையிலே ..! (பேசும்)
கல் தோன்றும் முன்னே மண் தோன்றும் முன்னே
முன் தோன்றி வளர் மொழி தமிழே .!
காலத்தை வென்றும் தேசத்தை வென்றும்
வாசம்தான் வீசும் மொழி தமிழே !
நம் ஊனோடும் உயிரோடும் உணர்வோடும் கலந்து
ஒன்றாக நிற்கும் மொழி தமிழே !
வானோங்கி வளரும் தமிழர்தம் புகழை
மென்மேலும் வளர்ப்பது தமிழே !
தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் அன்னைதான் எங்கள் வாழ்வே ...!
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
என நாளும் பாடி
தமிழுக்காய்ப் போகும் எங்கள் உயிரே ...! (பேசும்)
இது கவிதை ...பாடல் ...கவிதை பாடல் ...இசையோடு பாடவும் நன்று !
கவிஞர் - அ .முத்துக் குமரன்
Muthu Kumaran .A
Drawing Master ,GHSS,PANRUTI,
13,2ND CROSS STREET, PATTU SAMY NAGAR ,
KOTTALAAMPAAKKAM,
PUTHUPET (PO)
607108
PANRUTI TK
CUDDALORE DT
9842618876
8608097188
மிக அருமையான தமிழுணர்வூட்டும் பாடல்.எந்த ராகத்தில் பாடலாம் ஐயா.
ReplyDeleteகவி.சுசிமணாளன்
சுக்காம்பட்டி
621217
9791334346