Wednesday 18 April 2018

அப்பாளு .C .சம்பந்தம்

அப்பாளு .C .சம்பந்தம்
தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .
அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .
அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .
ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,செட்டியார் பொம்மைகள் உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,தசாவதார செட் ,சரஸ்வதி போன்றவையும் புகழ்பெற்றவையே .
இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .
தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் அத்துனைபேர் இல்லங்களிலும் இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் நானும் இவரைப் பற்றியும் இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளாக ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு நமது ஸ்வாசிகா இயக்கம் காகிதக் கூழ் கலைச்   செம்மல் என்ற பெருமை மிகு விருதினை அளித்துப் பாராட்டுகிறது .

நன்றி அண்ணா










No comments:

Post a Comment