Monday 30 April 2018

என் அம்மா

          மே - 1 , உழைப்பாளர் .தினம்.. எங்கள் தாயார் திருமதி சுந்தரவல்லி அப்பர்சாமி அவர்களின் பிறந்த நாள் இன்று .அம்மா என்ற உறவே எல்லோருக்குமே ரொம்ப ஸ்பெஷல்தானே ...
         எல்லா அம்மாக்களையும்  போல்தான் ...என் அம்மாவும் ..நான் செய்யும் சேவைகள் தொடர்பாக எதுவுமே அவர்களுக்கு பிடிக்காது ..ஸ்வாசிகா சமூகப் பணிகள் ,விழாக்கள்,ஓவியம் சிற்பக்க கலை தேடல்கள் சார்ந்த என் பயணங்கள்,சாரணர் சேவைகள் ,மாணவர்களுடனான சுற்றுலாக்கள் ,எனது நூல் சேகரிப்பு , கவிதை நூல் வெளியீடு ...என்று அனைத்துக்குமே அவர்கள் சற்றே எதிர்ப்புதான் ...
          இப்படியே வெளியில அலைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துக்கற ... புத்தகம் ,செடி அப்படின்னு இப்படி காசை வீணாக்கறியே என்று சதா ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார் .
          ஆனால் என் செயல்கள் அவர்களுக்கு உள்ளூர பெருமைதான் ...எனக்குத் தெரியாமல் ,அனைவரிடமும் இவை குறித்து பெருமையாகப் பேசுவாராம் ...என் கவிதைகளை படித்து என்னிடம் சிலாகித்துப் பேசுவார் ...
          அதுதான் அம்மா ...என் அம்மா ....

          ஆரோக்கியமாக வாழ வாழ்த்துங்கள் முக நூல் சொந்தங்களே !



No comments:

Post a Comment