Thursday 12 April 2018

ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் -2018

ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் 23 ஆம்  ஆண்டாக நடைபெற இருக்கிறது . 
மே 1 ஸ்வாசிகாவின் பிறந்தாநாளை முன்னிட்டு நாங்கள் 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தும் ஓவியப் பயிற்சி முகாம்.
23 ஆம் ஆண்டில்...மே 1 முதல் மே 10 வரை ....
கோடையிலே கோலாகலக் கொண்டாட்டம் ....
ராஜா ரவிவர்மாவின் திரு உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்படும் .
ஸ்வாசிகாவின் 23 ஆவது பிறந்தநாளை உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்படும் .. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படும் .
அனைவருக்கும் குறிப்பேடுகள்,பேனா,பென்சில் வழங்கப்படும் .
வயது வாரியாக மாணவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன,
ஓவிய அடிப்படைகளுடன் சித்திரப் பயிற்சி இனிதே துவங்கும்

தொடர்ந்து 10 நாட்களும் நானும் இன்னும் பலநல்ல உள்ளம் கொண்ட சிறந்த ஓவியக் கலைஞர்களும் இணைந்து பயிற்சிகள் வழங்குகின்றோம்.
இம்முகாமில் பங்கேற்று தம் திறமையை பட்டை தீட்டி இன்று ஓவியக் கலையில் சிறந்துவிளங்கும் எங்கள் மாணவர்களும் எம்மோடு இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள்.
நிறைவு நாள் அன்று போட்டிகளும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சித்திரக் கண்காட்சியும் நடைபெறுகின்றன .
மேலும் பயிற்சி அளித்த கலைஞர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அனைத்துக்கும் மேலாக நான்கு சாதனையாளர்களுக்கு பெருமைமிகு விருது வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற உள்ளது .
அனைவரும் வருகைதந்து  முகாமை ,விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் & சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் ...!


No comments:

Post a Comment