Sunday 22 October 2017

நுண்கலைத் திலகம்

கடந்த 14-10-2017 சனிக்கிழமை அன்று புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு பல்வேறு திறமையாளர்களை அங்கீகரித்து விருதுகளை வழங்கிப் பாராட்டியது.அவ்வகையில் எனது ஓவிய திறமையை அங்கீகரிக்கும் வகையிலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவிய பயிற்சியில் மாணவர்களை  ஈடுபடுத்தி அக்கலையினை தனது வாழ்க்கைக்கான வழியாக தேர்ந்தெடுக்கச்செய்து அக்கலையில் உயர்கல்வி கற்பதற்கும் வழிகாட்டியாக விளங்குவதை பாராட்டியும் நுண்கலைத் திலகம் என்ற விருதுக்கு என்னை தேர்வு செய்து இருந்தனர்.புதுவையின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் திருமிகு கணேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் மாண்புமிகு முதல்வரின் பாராளு மன்றச்  செயலர் திருமிகு க.லட்சுமி நாராயணன் அவர்களின் கரங்களால் விருது மட்டும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.ஒரு கலைஞனுக்குத் தேவை அங்கீகாரமும் பாராட்டும்தான் .அவைதான்  எம் போன்ற கலைஞர்களை தமது துறையில் தொய்வின்றியும் மேலும் ஆற்றலோடு செயல்பட வைத்து அடுத்தடுத்த தலங்களுக்கு கொண்டுசெல்லும் வல்லமை பெற்றவை.அவ்வகையில் இந்த அங்கீகாரம் எனக்கு மகிழ்வையும் இன்னும் எனது துறையில் ஆழ்ந்து செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கின்றது.என்னை இவ்விருதுக்காக தேர்வு செய்த கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களுக்கும் புதுவை கவிதை வானில் அமைப்பின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள் பல.

No comments:

Post a Comment