Wednesday 10 December 2014

பாரதி

பாரதி ....
 பாரதத்தின் பெயரையே தன பெயரிலும் கூட சுமந்தவன் 
 பெயரில் மட்டுமா 
 நெஞ்சிலும் கூட அல்லவா ...
 தேடிச் சோறு நிதம் தின்று 
 என்ற பாடலுக்குத் தன்னையே உதாரணமாக்கி 
 வாழ்ந்து மறைந்தவன் பாரதி ...
 மறைந்தது அவன் உடல் மட்டும்தான் ...
 அவன் உணர்வுகள் இன்னும் உலகம் முழுக்க 
 வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன 
 கவிதைகள் வடிவில் ...
 பாட்டுக்கொரு புலவன் ,முண்டாசுக் கவிஞன்,....
 அவன் தனது முறுக்கு மீசையில் மட்டும் 
 தனது இந்த சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான 
 தன் கோபத்தை வைத்திருக்கவில்லை ...
 மாறாக தன்  கண்களிலும் கவிதைகளிலும்கூட வைத்திருக்கின்றான் ...
 அவன் உணர்வுப் பிழம்பு 
 கருத்துக் கனல் ...
 சிந்தனைப் புயல் ....
 செயல் சூறாவளி ...
அவன் ஒரு நல்ல கணவன் இல்லை ...
 நல்ல தகப்பனில்லை ...
 சராசரி மனிதனுமில்லை ....
 ஆனால் அப்படி இல்லாததனால்தான் 
 மிகுந்த  போற்றுதலுக்குரிய இந்தியனாக ...
 மிக நல்ல தமிழனாக 
 மிக உயர்ந்த  மனிதனாக ...வாழமுடிந்தது 
 நாம் ஒவ்வொருவரும் பாரதியைப் போல வாழாவிட்டாலும் அவனைபின்பற்றி வாழ முயலுவோமே ...!






No comments:

Post a Comment