Saturday 6 December 2014

யுவஸ்ரீ கலா பாரதி விருது

யுவஸ்ரீ கலா   பாரதி விருது 

                      எங்கள் பள்ளி மாணவர்களுள் கலை ,விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி  என்ற பெருமை மிகு விருது 06-12-2014-சனிக்கிழமை  அன்று வழங்கப்பட்டது .மதுரை ,கோச்சடை என்னும் ஊரில் இயங்கி வரும் பாரதி யுவக் கேந்திரா என்ற தன்னார்வ அமைப்பு இதனை வழங்கியது .நெல்லை பாலு என்பவர் இதன் நிறுவனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
        காடாம்புலியூரில் நான் பணியாற்றியபோது கூட அங்கிருந்த மாணவர்கள் வினோத் ,சோழவேந்தன்,ஜெயபாலன்,ஜெயரட்சகன் உள்ளிட்டோருக்கு இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்து புதுவையில்  இவ்விருதுகளை பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது .பெரியவர்களாகியபின் சாதனைகள் புரிந்தால்தான் விருதுகள் பெற முடியும் என்ற நிலைமை மாற்றி சிறுவர் சிறுமியரும் அவர்களின் வயதுக்கேற்ற சாதனைகள் புரியும்போது அவற்றை அங்கீகரித்து அவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்துகின்ற நெல்லை பாலு அவர்களின் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த  மாணவ மாணவியர்களுக்கு தன்னபிக்கையும் உற்சாகமும் பெருகி மேலும்  மேலும் சாதனைகள் புரிய உந்து சக்தியை வழங்கும் என்பதில் ஐயமில்லை .இதற்கும் முன்னரே என் அன்புக்குரிய மாணவன் சுந்தர் என்பவருக்கும் இந்த விருதை பெற வைத்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது .
              
           இந்த வருடம் எங்கள் பள்ளியின் மாணவர்கள் முரளி கிருஷ்ணன் (இசை)
சுரேந்திரன் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),ராஜவிக்னேஷ் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்,வினாடி வினா),ராஜி (கட்டுரை),முகம்மது ஆஷிக் அலி (ஓவியம்),சரத்குமார் (அறிவியல் ஆய்வு) ஐயப்பன் (சிலம்பம், ஓவியம்),சபரிநாதன் (சிலம்பம்,),ஜெயவேல் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),,திலீபன்(வினாடி வினா)ஆகிய மாணவர்கள் விருதுகளை பெற்றார்கள்! அந்த விருதுகளைப் பெற்ற மாணாவர்களின் முகங்களிலும், பெற்றோர்களின் முகங்களிலும் அப்படியொரு பெருமிதம் . அத்துடன் எனது தங்கை மகள் தரணீ ஸ்வரி ( ஓவியம் & இசை ) அவ்விருதைப்  பெற்றது எனக்குப் பெருமிதம் அளித்தது .
           விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .!
    











No comments:

Post a Comment