Friday 28 September 2018

பண்ணுருட்டி அரசுப்பள்ளியில் உலக அமைதிதினவிழா & உலக ஓசோன் தினவிழா

சாரணர் இயக்கம் சார்பில் பண்ணுருட்டி அரசுப்பள்ளியில் உலக அமைதிதினவிழா 



அண்மையில்  பண்ருட்டி அரசுமேல்நிலைப் பள்ளியில்    செப்டம்பர் -16 ,உலக ஓசோன் தினம் மற்றும் செப்டம்பர் -21சர்வ தேச அமைதி தினம் ஆகியவற்றை முன்னிட்டுசாரண இயக்கம் சார்பில்  விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன .
உலக ஓசோன் தினம் & சர்வதேச அமைதி தினம் இரண்டும் ஒருசேர அனுஷ்டிக்கப்பட்டன .இவ்விழா நிகழ்வானது துணை தலைமை ஆசிரியர் திருமதி அமலி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது.சாரண ஆசிரியர்  திரு முத்துக்  அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக KNC மோகனசுந்தரம் அவர்கள் , குரு சுப்ரமணியன் அவர்கள் , , ஆசிரியர் J. பாலச்சந்தர் ,ஆசிரியர் J.ஜெயந்திரன்  ,ஆசிரியர் ஞானசேகரன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வைச்  சிறப்பித்தனர்.
அனைவருக்கும் சாரண வழக்கப்படி ஸ்கார்ப்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள் .
பின்னர் அமைதிக்கான செய்தி அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .
ஓசோன் தினம் குறித்த தகவல்கள் திருமதி அமலி  அவர்களால் கூறப்பட்டன.
பின்னர் அனைத்து சாரணர்களுக்கும் , திரிசாரணர்களுக்கும் அமைதிச் செய்தி அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக அமைதிச் செய்தி அட்டைகளைக் கரங்களில் தாங்கிய சாரணர்கள்மற்றும் திரிசாரணர்கள் குழுவானது பள்ளி வளாகத்திலிருக்கும் அண்ணல் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு முன்னர் நின்று குழுப்படமும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
சாரண மாணவர் தலைவன் ஹரிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment