Sunday 14 October 2018

ஐ .ஏ.எஸ் அகடமி சங்கர் அவர்களின் தற்கொலை

ஐ .ஏ.எஸ் அகடமி சங்கர் அவர்களின் தற்கொலை நிகழ்வு ...!
அன்றாடம் செய்தி ஊடகங்களில் சர்வ சாதாரணமாகக் கடந்து போகும் ஏதோ ஒரு நிகழ்வல்ல .
நாம் இனிமேலும் வாளாவிராது இதிலிருந்து புதியதாய் பாடம் கற்றே ஆக வேண்டிய ஒரு முக்கிய துர்நிகழ்வு .
நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு நமக்கு ஒன்றை நன்கு புலப்படுத்தியுள்ளது .
ஏட்டுச் சுரைக்காய் கல்விமுறையின் படுதோல்வியை உலகுக்கு பறை சாற்றியது மீண்டுமொரு முறை !
எத்துனை பெரிய
கல்வியாளராய் இருப்பினும் ,
பல்லாயிரக்கணக்கான
திறமைசாலிகளை உருவாக்கியிருப்பினும் ...வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ,
பிரச்சனைகளை சந்திக்க,அவற்றோடு
போராடி வென்று வாழ அல்லது தோற்றுப்போய் இயைந்து வாழும் மனோதிடத்தைக் கற்றுத் தாராத கல்விமுறை எதற்கிங்கு ?
விட்டுக்கொடுத்து வாழும் பேரன்பை போதிக்காத ...
இவ்வுலகில் வாழ்வின் பாதையில் நம்முடன் சமநடை பயிலும் உறவு & நட்பின் குறைகளை சகித்து வாழும் ,அந்தக் குறைகளோடு அவர்களை அரவணைத்து வாழும் மனப்பக்குவத்தை முதிர்விக்காத ..
ஈகோ எனும் ஈட்டியை தன் கால்களின் கீழாக போட்டு நசுக்கி சக துணைக்கு அனபுடன் கலந்த மரியாதையைத் தந்து பழகும் செப்படி வித்தையைக்
கற்றுத் தராத ...
கல்வி முறை எதற்குத்தான் ?
வெற்றுப் பணம்காய்ச்சி மரமாய் நம்மை வார்த்து
எடுத்துக்கொள்ளவா ?
பல்லாயிரக்கணக்கான ஆளுமைகளை உருவாக்கிய ஓர் ஆளுமை
சாதாரண ஒரு குடும்பபச் சிக்கலில் சிக்கி உயிர் மாய்த்துக் கொண்டதே!
அந்தோ ..!
ஆழ்ந்த இரங்கல்கள்.!
இனியேனும் பள்ளிகளில்
அறிவியல் ,கணிதவியல்,வரலாறு & புவியியல் .....இதெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக , வாழ்வியல் என்று ஏதேனும் ஒன்றிருந்தால் அதைக் கற்றுக் கொடுப்போம் !
மதிப்பெண்கள் எடுக்க முனைப்பு காண்பிக்க மாணவர்களை தயார்படுத்துவதை விடுத்து ,தமது விலைமதிப்பில்லா உயிரை ,தமது வாழ்வை நேசிப்பதற்கு ,
கற்றுக்கொடுப்போம்!
தோல்விகளுக்குத் துவண்டு போகும் மனநிலையை விடுத்து ,தோல்விகளை வெறும் அனுபவங்களாக எண்ணி சர்வ சாதாரணமாகக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இயல்பான மன உறுதியைக் கற்பிப்போம்.
ஆகையால் எம் கல்வித்துறை கணவான்களே ...
பேரறிவு வித்தகர்களே ..
இதற்கு ஏதாவது புதிதாய் ஒரு பாடத்திட்டம் தயாரிப்பீர்களாக !

No comments:

Post a Comment