Sunday 14 October 2018

சிற்பி ஜெயராமன் ஐயா

சிற்பி ஜெயராமன் ஐயா!
சித்திரச் சாதனையாளர்
விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.
பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வர்
இசை ஞானமும் ,கவிதை புனையும் ஆற்றலும் ஒருங்கே கொண்ட கோட்டோவிய மேதை !
புதுவை  ஓவிய ஆளுமைகளில் மிக முக்கியானவர்களுள் ஒருவர்.
இசை ,நடனம்,ஓவியம் என மூன்று கலைகளை ஒரு புள்ளியில் இணைத்தவர்.
மனுஷன் பாரதியான இவர்
மகாகவி பாரதியாரை
இசையின் ஜதி லயத்தோடு
தன் கரங்களை அதி வேகத்தோடு அபிநயிக்கச்செய்து
சித்திர ரூபமாய்தீட்டி
பார்வையாளரை அசரச் செய்தவர்.
எனது மானசீக குருமார்களுள் ஒருவர்.
நேற்றைய தினம் எனது குடும்பத்தின் உறவு ஒன்று விடைபெற்றுச் சென்றது .ஆம் எங்கள் பாசத்திற்குரிய , சென்னையில் வசித்து வரும் சிறிய தந்தையார் சிவப்பிரகாசம் ( எ)எங்களை விட்டுப் பிரிந்தார். அத்துயரில் இருந்து மீளுமுன் எனது கலைக்குடும்பத்தின் ஒரு தூண் சரிந்த செய்தி பேரிடியாய் தலையில்.
ஆம் சிற்பி ஐயா மறைந்தார் என்னும்
வலி மிகுஞ்செய்தி .
தாளவில்லை மனம் .
உம்முடனான எனது இனிய தருணங்களை அசை போடுகிறேன்.
எங்கள் ஸ்வாசிகாவின் ஓவியப் பயிற்சி முகாமில் தங்கள் கண்காட்சி ..
உரைவீச்சு நடந்த இனிய தருணங்கள் ..
எனது சித்திரங்களைக் கண்ணுற்று வாழ்த்தி மகிழ்ந்த தருணங்கள்...
இனி எப்போது மீண்டும் வாய்க்கும் என ஏக்கத்துடன் நாங்கள்...
நீங்கள் வாழ்ந்த்காலத்தில் நாங்களும் வாழ்ந்த இனிய ,பெருமை மிகு தருணங்கள்....
நான் பணி புரியும் பள்ளியில் தங்கள் பாதம் பட்ட புனித மிகு தருணங்கள் ...
இவை மூலம் எம் நெஞ்சில் என்றும் தூரிகை வாசமாய் நீடு வாழ்வீர் நீர்...
போய்வாருங்கள் ...
ஐயா !

No comments:

Post a Comment