Sunday 14 October 2018

மாடித் தோட்டம் அமைப்பு





இன்று விருதாசலம் மண்டல ஆராய்ச்சி மையத்தில் ## தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ## முந்திரி ஆராய்ச்சிப் பண்ணை# மாடித் தோட்டம் அமைப்பு & பராமரிப்பு பற்றிய ஒரு பயிற்சி & கருத்தரங்கு நடைபெற்றது. பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .
சிறந்த ஒருங்கிணைப்பு .உண்மையிலேயே மிகப் பயனுள்ள தகவல்கள்.கூடுதலாக ஒரு தகவல் கையேடு வேறு அளித்தார்கள். இது போன்ற பயிற்சிகள் மிக தொலை தூரத்தில் அமைக்காமல் குறிப்பிட்ட மண்டலங்களில் மையம் அமைத்து பயிற்சி பற்றிய தகவலைப் பரவலாக்கி பெரும்பான்மையான இல்லத்தரசிகள் பங்கேற்கும்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

36 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா கேரக்டர் இதற்கான விழிப்புணர்வை ஓரளவு ஏற்படுத்தியிருந்தாலும்கூட சரியான வழிவகைகள் அவர்களுக்குத் தெரியவில்லை .இது போன்ற பயிற்சிகள் பலர் வீட்டு மொட்டை மாடிகளை பசுமையாக்கும்.அந்தந்த வீடுகளின் ,தரமான இயற்கை உரம் போட்டு ,இயற்கையான பூச்சிக் கொல்லிகள் தெளித்து வளர்க்கப்பட்ட காய்கறிகள் அவர்களது தேவைகளை தன்னிறைவு செய்யும்.காய்கறிக்கான செலவுகளைக் குறைக்கும் .ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதற்கு ஒரு அடி எடுத்து வைத்ததாக இருக்கும் .தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா ?

No comments:

Post a Comment