Sunday 14 October 2018

சிந்திக்க வைக்கும் வாதம் .

சொன்னா கேட்டாதானே ?
திணிப்பதுதான் கல்வி ...
அதுவே நடைமுறை ...
உரலுக்குள் தலையை விட்டுவிட்டபின் உலக்கையைப் பற்றிக் கேள்வி என்ன ?
....
.....


யாழ் அறக்கட்டளை
Muthukumaran Suresh:சொன்னா கேட்டாதானே ?
*****கேட்கும் வரை சொல்லிக்கொண்டே இருப்போம் ஐயா.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
(A continuous hard hammering can move even large stones )
*********************************************************************
திணிப்பதுதான் கல்வி ...அதுவே நடைமுறை ...
***இது தான் நடைமுறையா?????.ஏற்று கொள்ள முடியவில்லை ஐயா உங்களின் கருத்தை.
திணிப்பதற்கு கல்வி என்ன குழந்தைக்கு ஊட்டும் உணவா என்ன.இல்லை சர்வாதிகாரமா என்ன.
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடி கறக்கிற மாட்டை பாடிக்கறக்கணும்....இந்த பழமொழி ஐந்தறிவு ஜீவன்களுக்கு மட்டும் அல்ல. ஆறறிவு ஜீவன்களுக்கும் தான்.
FORCEFUL FEEDING DOES NOT GIVE RESULTS.உட்கொள்ளமாட்டார்கள்.துப்பி விடுவார்கள்.
உட்கொள்ள வைப்பது திறமையா... துப்பவைப்பது திறமையா????
எல்லா மாணவர்களுக்கும் அவரவரின் புரிந்து கொள்ளும் மனநிலைக்கு ஏற்றவாறு கவனமெடுத்து சொல்லித்தர வேண்டும். வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் முதல் ரேங்க் எடுக்க வைப்பதென்பது ஆசிரியருக்கு மிகவும் கடினமான செயல். ஆனால் அனைத்து மாணவர்களையும் பாஸ் பண்ண வைப்பது எளிது.
தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்த கோழிப்பண்ணை கல்வி முறைக்கு நீட் எனும் அரக்கன் சிறந்த ஆப்பினை சொருகி விட்டுட்டான்.
கெட்டதிலும்(நீட்) ஒரு நல்லது(கோழிப்பண்ணை கல்வி முறை ஒழிப்பு) நடந்துள்ளதில் மகிழ்ச்சி.
தற்போதைய நம் கிராமப்புற கல்வி நிலைக்கு, நீட் தேர்வின் வருகைக்கு பின் மருத்துவக்கல்வி என்பது நமது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனி என்கிற துயரமான நிலை ஆகிவிட்டது.
பல்லுள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார்கள் என்பது போல் ஆகிவிட்டது மருத்துவ படிப்பு.
உரலுக்குள் தலையை விட்டுவிட்டபின் உலக்கையைப் பற்றிக் கேள்வி என்ன ?
****************************************************************
****கேள்வி கேட்கணும்.கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்.மெளனமாக இருப்பதெல்லாம் சம்மதம் என்று எண்ணிவிடக்கூடாது....
....
....



அடடா...!சிந்திக்க வைக்கும் வாதம் .
இன்று நேற்றல்ல ...பல ஆண்டுகளாக நம் போன்ற எண்ண ஓட்டமுள்ள பலரின் கருத்தும் இதுதான்.
திணிப்பதுதான் கல்வி .
திணிக்கப்படுவதுதான் கல்வி .(ஆசிரியர்களால்)
திணித்துக்கொள்வதுதான் கல்வி .(மாணவர்களால்)
இதுதான் நடைமுறை .
இதுதான் நடைமுறை !
இதுவும் கூட திணிக்கப்பட்டதுதான்
ஆசிரியர்களின் மேல்...
இதைத்தான் நடைமுறையாக்கி
காலம் காலமாகத்
தொடர்ந்து செய்து வருகிறது நமது கல்வித்துறை @ கல்விமுறை .
ஏற்றுக்கொள்ள முடியவில்லை இல்லையா உங்களால் ...?
உங்களால் மட்டுமல்ல ...எங்களைப் போல அல்லது நம்மைப்போல பல ஆசிரியர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான் .
ஆனால் இதுதான் கல்வி ; இப்படித்தான் நடைமுறை ; இதுதான் வினாத்தாள் ; இதுதான் தேர்வு ..இப்படியெல்லாம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒரு பழக்கத்திற்கு கொண்டுவந்தவிட்டு ...
அதை நடைமுறைப்படுத்தவுமே இங்கு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதற்குத்தான் ஊதியமே வழங்கப்படுகிறது .
பெற்றோர் சமுதாயமும் இதற்கு முழுமையான அங்கீகாரம் அளித்து தன் குழந்தைகளை திணிக்கப்படும் கல்விமுறைக்கு அர்ப்பணித்துவிட்டது.
அவர்கள் பெற்று அளிக்கும் கொள்ளையோ கொள்ளையான மதிப்பெண்கள் தரும் போலிப் பெருமையை மட்டுமே கொண்டாடும் ஒரு சமூகத்தை , ஊடகம் சார் வட்டத்தை நன்கு வசதியாக உருவாக்கிக்கொண்டுவிட்டோம் நாமெல்லாம்.
உயர்கல்விகளெல்லாம்கூட
இதனையொட்டியே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன;
வடிவமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாணவர்களை சுயமாகச் சிந்திக்க வைக்கின்ற , பாடத் திட்டம் , பாட நூல்கள் தாண்டி பல உபயோகமான கருத்துக்களை உரையாடல்களாக முன்னெடுக்கின்ற, வினாக்களை எழுப்ப சுதந்திரமான சூழல்களை தனது வகுப்பறைக்குள் ஏற்படுத்தித் தருகின்ற ஆசிரியர்கள் தற்செயலாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றினாலும்கூட, இவர்களெல்லாம் உடனுக்குடன் சக ஆசிரியர்களாலும் ,
தலைமை ஆசிரியாலும் தட்டி அல்லது தலையில் குட்டி , மார்க்க பாரு ,ரிசல்ட்ட காட்டு என்ற ரீதியில் அவர்களையும்கூட தமது வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவதுதே அவர்களின் சாமார்த்தியம்.
...
....
இன்னும் நிறைய இருக்கிறது எழுத ...
இதற்கு முன் நான் எழுதிய கமென்ட் விரக்தியில் எழுதியது .
முதலில் பல பள்ளிகளில் உள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா?
பயன்படுத்த அனுமதிக்கப்
படுகிறார்களா?
ஓவியம் உள்ளிட்ட கலைசார்ந்த திறனுள்ள மாணவர்களை ,நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு நிகராக வைத்துக் கொண்டாடுகிறதா பள்ளிச் சூழலும் சமுதாயச் சூழலும்.?
இதுபோன்ற ஆதங்கமான எண்ணற்ற பல கேள்விகள் எனக்குள்ளும் ,ஏன் பல ஆசிரியர்களுக்குள்ளும் உறைந்துள்ளன ; மறைந்துள்ளன நண்பரே .ஆனால் நானும் தங்களைப்போல்தான்.
ஊதுற சங்கை ஊது ...விடியும்போது விடியட்டும் என்ற சிந்தனை கொண்டவன்..
என் எண்ணங்களை , சிந்தனைகளை மாணவர்கள் மனதிலே கொண்டு போய் சேர்க்கத்
தவறுவதில்லை ,வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.
நன்றி நண்பரே..

No comments:

Post a Comment