Friday 26 October 2018

கலாஉத்சவ் -2018

                                           கலாஉத்சவ் -2018 பரிசளிப்பு விழா
26-10-2018 ,வெள்ளிக்கிழமை .
மரியாதைக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் கரங்களால்
இவ்வருட மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி மாநில அளவில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களுக்கும்
கடந்தமுறை கோவையில் நடைபெற்ற கலாஉத்சவ் -2017 ல் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும்
சான்றிதழ்களும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன .
வெற்றி பெற்றோர் 30 ,31 தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க 29-10-2018 , திங்களன்று மதியம் உங்கள் ஆசியுடன் பயணமாகின்றனர்.


வாழ்த்துக்கள் நல்ல முயற்சி ஆனால் இந்த அரசாங்கத்திற்கும், அரசு அதிகாாிகளுக்கும், ஆசிாியா்களுக்கும் நான் சொல்ல விழைவது, எந்த ஒரு செயலும் உரிய பயிற்சி வழிகாட்டுதல் இல்லை என்றால் சோபிக்காது. வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் மாணவர்களின் எதிா்காலத்திற்கு போதாது, படிக்கின்ற அனைவருமே 100 க்கு 100 மதிப்பெண் பெறப்போவது இல்லை, இந்த நிதா்சனத்தை உணர்ந்து ஏட்டுக்கல்வியோடு, பலதுறை நுண்கலைகளை மாணவர்களுக்கு போதித்தால் மாணவா்கள் கல்வியிலும் ஆர்வம் செலுத்துவா், படிப்பு கை விட்டாலும் கலைகள் கை விடாது என்பது என் கருத்து, அவா, வேண்டுகோள். மேலும் அரசுப்பள்ளிகளில் இந்த துறை சார்ந்த அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்பதால் பெற்றோா்களும் ஆதரவு அளிப்பா்


இதே கருத்தை நானும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் , மாணவர்களிடமும் ...
இறைவணக்கக் கூட்டத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது பலமுறை கூறியிருக்கிறேன் .
ஆனால் எதவும் எடுபடுவதில்லை.

இது போன்ற போட்டிகள் கூட கலைகளை வளர்ப்பதற்கு அல்லது மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதெற்கெல்லாம் இல்லை .தனக்கு மேல் உள்ள மேலதிகாரிகளின் ஆணைகளை நிறைவேற்றுவதற்காக ,
ஏதோ கடமைக்காக ...இதற்கென ஒதுக்கப்படும்
RMSA fundஐ காலி செய்து கணக்கு காட்டுவதற்காக ஏனோதானோவென்று 
சிறிதும் சிரத்தையின்றி செய்யப்படுகின்றது என்பதே நிதர்சனம்.குறிப்பிட்ட துறையினரின் ஆலோசனைகளைப் பெறாமல், தகுந்த துறை சார்ந்த வல்லுனர்களின் நடுவர்குழு வழிகாட்டல்கள் இல்லாமல்...
மாவட்டப் போட்டிக்கும் ,மாநிலப் போட்டிக்கும் போதிய இடைவெளியின்றி ...
மாநில அளவிலான போட்டியை எதிர்நோக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசத்தை போட்டியாளர்களுக்கு அளிக்காமல் எல்லாமே ஒரு அவசர கதியில் நடைபெறுகின்றன. சீக்கிரம் நடத்தித் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் இதனை நடத்துகிறார்கள். இல்லையெனில் யார் அதிகாரிகளிடத்தில் வாங்கிக் கட்டிக்கொள்வது ?
ஏனெனில் அவர்களது நிலைமை அப்படி .
எங்களைப் போன்ற ஒருசில ஆசிரியர்கள் நம்மிடம் இந்த பணியை ஒப்படைத்துள்ளார்களே ..மாணவர்கள் நம்மை நம்பியுள்ளார்களே என்ற எண்ணத்திலும் .
ஒருவேளை மாணவர்கள் வெற்றி பெற்றால் நமக்கும் பெருமையல்லவா என்ற எண்ணத்தோடும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறார்கள்.
எப்படியோ இது பரவலான ஒரு பயனை அளிக்காவிட்டாலும் ஏதோ ஒருசில மாணவர்களின் கலைத்திறமையாவது வெளிப்படுகிறது;
பட்டை தீட்டப்படுகின்றது;
திறமை மெருகேறுகின்றது .

ஆனால் பள்ளிக் கல்வி முறை (துறை?!) சிறிதும் இரக்கம் அற்றது .கலைகளை ,
தனித் திறமைகளைக் குப்பையில் போடு ...எனக்கு குறைந்த பட்சக் கற்றல் அடைவு ...குறைந்த பட்ச மதிப்பெண் கொண்டு தேர்ச்சி விழுக்காடு இவற்றைக் காட்டு ....என்பதிலேயே குறியாய் இருக்கின்றது ...இந்த கட்டளைக்குக் கட்டுப்படும் ஆசிரியப் பெருமக்களும் சற்றும் ஒத்துழைக்காத மாணவக் கண்மணிகளைக் கட்டிக்கொண்டு எப்படியாவது போர்ஷனை முடித்து தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டியே தீருவது என்ற எண்ணத்தில் மாரடித்து டென்ஷனாகின்றனர்.இதற்கிடையில் கலை வளர்க்கிறேன் ,தனித் திறன் கொணர்கிறேன் என்று உழைக்கும் ஆர்வம் கொண்ட (ஆர்வக்கோளாறு கொண்ட?!)
ஆசிரியர்களும் ,உண்மையிலேயே படிப்பும் நன்றாக வந்து ,கலைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் + படிப்பில் திறன் குறைந்து ,கலைத்திறன் சிறந்துவிளங்கும் மாணவர்களும் போட்டிகள் என்ற பேரில் கூத்தடிப்பதாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிகின்றனர் .என்ன செய்வது சுரேஷ் ...நிறைய முரண்பாடுகள் நிறைந்தது பள்ளிச் சூழல் ...?
நம்மாலான முயற்சிகளை எடுப்போம்.


உண்மை மாஸ்டர் ஆனால் இலங்கையில் சரியான முறையில் கல்வி,கலை இரண்டும் போதிக்கப்படுகிறது

No comments:

Post a Comment