சென்னை புத்தகத் திருவிழா -2019
சிறப்புப்பதிவு...1நாளொரு நூலறிமுகம்...1
கடலூர் புத்தகத்திருவிழாக்கடலில் நான் ஆழ்ந்தெடுத்த முத்துக்குவியலாம் புத்தகப் புதையல்களுள் சிலவற்றையும் கடந்தவருட சென்னப் புத்தகத் திருவிழாவில் கண்டெடுத்த எனது சேகரிப்பில் உள்ள சொத்துகளில் சிலவற்றையும் பற்றிக் கூறப்போகிறேன் .குறிப்பாக நான் மீண்டும் மீண்டும் வாசித்துச் சிலாகித்தவற்றை புத்தகப் பித்தர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆற்றுப்படுத்தும் நிகழ்வு இது ....!
அடிப்படையில் நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் அனேகமான நூல்கள் கல்வி சார்ந்தும் ,சிறார் நூல்களாகவும் இருக்கக்கூடும்.
இதில் முதல் நூல்
#சூப்பர்சுட்டீஸ்
#ஆயிஷாநடராசன் அவர்களின் படைப்பு .
#பாரதிப்புத்தகாலயம் வெளியீடு
#BOOKSFORCHILDREN வரிசை
₹50.
#ஆயிஷாநடராசன் அவர்களின் படைப்பு .
#பாரதிப்புத்தகாலயம் வெளியீடு
#BOOKSFORCHILDREN வரிசை
₹50.
கடலூர் மாவட்டத்துப் பெருமைகளுள் ஒருவரான ஆயிஷா நடராசன் அவர்கள் தனது நவீன விக்கிரமாதித்தியன் கதைகள் என்ற நூலுக்காக 2014 ஆண்டிற்கான
பால சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்;சிறந்த கல்வியாளர்.
பால சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்;சிறந்த கல்வியாளர்.
அனேகமாக அவரது பல எழுத்துக்களை நான் எனது நூலகத்துள் வைத்துள்ளேன்...
அவற்றுள் ஆயிஷா, நாகா போன்ற கதைகளைத் தொடர்ந்து எனது உள்ளத்தைத் தொட்ட ஒரு நூல் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் .
அவற்றுள் ஆயிஷா, நாகா போன்ற கதைகளைத் தொடர்ந்து எனது உள்ளத்தைத் தொட்ட ஒரு நூல் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் .
ஆயிஷா - ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான நேசங்கலந்த உறவைப் பேசுவது.
நாகா - கடலூரில் நடக்கும் ஒரு சாரண முகாமில் பங்கேற்ற நாகா என்னும் சாரணச் சிறுவனின் வீரதீர சாகசங்களை துடிப்போடு விவரிக்கும் நாவல்.காட்சிகளை கண்முன் விரியவைக்கும் கடித நடை .
சூப்பர் சுட்டீஸ்.
தம் உயிரை துச்சமென மதித்து சாகசச் செயல்கள் மூலம் வரலாற்றில் இடம் பிடித்த சிறுவர் சிறுமியர் கதை .
வீரதீர விருது பெற்று யானைமீதேறி அமர்ந்து தேசியவிழாக்களில் ஒட்டு மொத்த தேச மக்களின் வீர வணக்கத்தைப் பெற்ற
ரியல் ஹீரோ,ஹீரோயின்களின் கதை .
ரியல் ஹீரோ,ஹீரோயின்களின் கதை .
பாரத தேசத்தின் அனைத்து மாநில வீரக் குழந்தைகளின் உத்வேகமூட்டும் கதை .
ஹரீஷ் சந்திரா எனும் சாரண மாணவன்,
சாரு சர்மா எனும் சிறுமி தொடங்கி இப்பி பாசர் எனும் வீரமங்கை ஈறாக மொத்தம்
18 வீரர்களின் கதைகளின் தொகுப்புதான் இந்நூல்.
சாரு சர்மா எனும் சிறுமி தொடங்கி இப்பி பாசர் எனும் வீரமங்கை ஈறாக மொத்தம்
18 வீரர்களின் கதைகளின் தொகுப்புதான் இந்நூல்.
தமிழகத்தின் பெருமை கூறும் கந்தக் குமார் என்னும் சிறுவனின் கதையும் இதில் அடக்கம் .
ஒவ்வொரு கதையும் அதிகப் பட்சம் இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் ..
படத்துடன் சேர்த்து .
படத்துடன் சேர்த்து .
ஆயிஷா நடரசனுக்கே உரித்தான கடித நடை .
அனைத்துமே வாசிப்போர்க்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துபவை .குறிப்பாக ஒவ்வொரு மாணவர்க்கும் ....!
சில கதைகளை வாசிக்கும்போது உள்ளுக்குள் ஒரு பெருமிதம் படர்கிறது ;
கண்களில் நீர் கோர்க்கிறது ; ஆழ்மனதிலிருந்தும் ,அடி வயிற்றிலிருந்தும் ஒரு கேவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கண்களில் நீர் கோர்க்கிறது ; ஆழ்மனதிலிருந்தும் ,அடி வயிற்றிலிருந்தும் ஒரு கேவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நமது பள்ளிகளிலும் கூட ,நமது வீட்டிலும் கூட இப்படிப்பட்ட சாகச நாயகர்கள் கண்டிப்பாக இருக்கக்கூடும்.
வீரத்திற்கு ஒரு மிகச் சரியாக ஒரு முன்னுரை எழுதி வாசிப்பவர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி கதைகளுக்குள் வாசகர்களை வரவேற்கும் ஆயிஷா நடராசன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...!
இளைய தலைமுறையின் சார்பாக;
இனி வரும் காலங்களில் வீரதீர சாகச விருதுகளை பெறுவோர் சார்பாக ...!
பல சாகசங்கள் செய்தும் உலகறியும் வாய்ப்பில்லாது ஊருக்குள் வாழ்ந்துவரும்
விருது பெறாத சிறார் சார்பாக ...!
இளைய தலைமுறையின் சார்பாக;
இனி வரும் காலங்களில் வீரதீர சாகச விருதுகளை பெறுவோர் சார்பாக ...!
பல சாகசங்கள் செய்தும் உலகறியும் வாய்ப்பில்லாது ஊருக்குள் வாழ்ந்துவரும்
விருது பெறாத சிறார் சார்பாக ...!
நிச்சயம் வாங்கிப் படியுங்கள் ...!
Count Down Starts ...
No comments:
Post a Comment