Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...3


#சென்னை புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -3
வகுப்பறைகளில் பாடம் நடத்தி பாடப்பகுதி முடித்தல், வீட்டுப்பாடம் கொடுத்தல்,தேர்வுகள் வைத்தல் என்பதைத் தாண்டி , மாணவர்களை நூலகப் பயன்பாட்டை நுகரச் செய்தல்...
நல்ல நூல்களை வாசிக்கச் செய்தல்...அவை குறித்து வகுப்பறையில் உரையாடலை அரட்டையாய் நிகழ்த்தி மாணவர்கள் அனைவரையும் அவர்களறியமலேயே பங்கேற்கச் செய்யல் பற்றிக் கூறும் நூல் .
யானை ,பறவைகள், எறும்பு,கழுகு ஆகியவை பற்றிய பல தெரிந்த செய்திகளையும் ,
இதுவரை கேட்டறியா புதிய தகவல்களையும்
மாணவர் உரையாடல் வழியாகத் தருகிறார் ஆசிரியரும் நூலாசிரியருமான திரு.வே.சங்கர் அவர்கள்.
பொதுவாகவே 'ம்..பேசாத ...வாய மூடு ..'
என்று சொல்லி மாணவர்களின் வகுப்பறை உரையாடலுக்குப் பூட்டு போடும்
ஆசிரியர்கள் இந்த நூலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் .ஒருவேளை அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் .
வாழ்த்துகள் வே. சங்கர் !
sankarhirithik@gmail.com
9842580424
கவுன்ட் டவுன் -20 நாட்கள் ...

No comments:

Post a Comment