Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...5

சென்னை புத்தகத் திருவிழா-2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -5



சு.தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் பிறந்தவர்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை வரலாறு பயின்றவர்.
பயண ஆர்வலர்.கலை, வரலாறு பற்றிய பல கட்டுரைகளை தமிழிலும் ,ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். நிறைய திரைப்படம் சார்ந்த நூல்களை, சூழலியல் சார்ந்த நூல்களை தந்துள்ளார்.
கல் மேல் நடந்த காலம் என்னும் இந்நூலின் தலைப்பும் ,முகப்பு அட்டைப் படமும் இதன் கடின அட்டைபோடப்பட்ட பைன்டிங் தரமுமே நம்மை நூலை வாங்கத்தூண்டுவதாக உள்ளன.
இது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பிரபல மாத ஏடுகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும்.
வரலாற்று ஆர்வலர்களுக்கும் தொல்பொருள் ஆர்வலர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்நூல்.
படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் நடை.
புத்தகத்தின் வெளித்தோற்றம் போலவே உள்ளுக்குள்ளும் தரமான ,கருத்தாழம் மிக்க ,வாசித்து இன்புறத்தக்க பல கட்டுரைகளையும் கொண்டுள்ளது.அதனுடன் கூட கண்டு இன்புறும் வகையிலான பல படங்களையும் ,குகைகளில் ,கோவில்களில் கண்ட அக்கால ஓவியங்களின் கோட்டுருவங்களையும் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு .
கருப்பு வெள்ளையாய் இருப்பினும்கூட மிக தெளிவான நிழற்படங்களைக் கொண்டுள்ளது.
இந்நூலை வாசிக்கையிலேயே ஆசிரியரது பயண அனுபவம் நம் கண்ணுள் விரிகிறது.
இந்நூலைப் படித்ததுமே சமணர் படுகைகள் காணப்படும் இடங்களை , பழங்கால தொன்மையான மலைக் குகைகள் காணப்படும் இடங்களையும் ,சோழர், பல்லவர் கால கற்றளிகளையும் காண மனம் பரபரக்கும்;அது சார்ந்ததொரு பயணம் மேற்கொள்ள கால்கள் துடிதுடிக்கும் .
இது மிகைப்படுத்தல் அல்ல .முற்றிலும் உண்மை.
இதோ அருகில் அரையாண்டு விடுமுறை அதற்கான வாய்ப்பை அளிக்க உள்ளது .
கவுன்ட் டவுன் - 18 நாட்கள்

No comments:

Post a Comment