Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...7

சென்னை புத்தகத் திருவிழா 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 7



வகுப்பறைக்கு வெளியே என்னும் இந்நூல்
பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் பின்புலங்களை நம் மனசாட்சியின் முன் வினாக்களாக்கி நம் இதயத்தை விடை தேடவைக்கச் செய்யும் முயற்சி .
நூலாசிரியர் பணிநிறைவு பெற்ற ஆசிரியரும் கூட .அதனால் தனது பணிக் காலங்களில் சந்தித்த இடைநிற்றல் மாணவர்களின் பின் புலங்களை ஏழு அத்தியாயங்களாக்கி சிறுகதைகளின் தொகுப்பாகவே தந்துள்ளார்.ஒவ்வொன்றையுமே குறும்படமாக்கலாம்.ஒவ்வொரு மாணவர் கதையுமே மனதை கனக்கச் செய்பவை .
சில கண்களை பனிக்க வைத்துவிடும் .
நல்ல நீரோட்டம் போன்ற எளிய நடை ;அருமையான சம்பவ விவரிப்பு .இந்தச் சம்பவத் தொகுப்பிலே இழையோடித் தெரியும் அவருடைய பணியின் மீதான அர்ப்பணிப்பு,மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறை அவர் மீதான மதிப்பைக் கூடுதலாக்குகிறது.
மாணவர்களின் இடைநிற்றலுக்குக் காரணம் பள்ளிச்சூழலா ,குடும்பச்சூழலா ,அரசின் மதிப்பெண்களை மையப்படுத்திய கல்விக் கொள்கையா என நம் மனதுள் பட்டி மன்றமே நடக்க வைத்துவிடுகிறது இந்நூல்.
அலமேலு ,பரமசிவம்,வினோத்,இருசப்பன்,
தமிழரசன் ,வேலன்,திவ்யா ,ஐய்யப்பன்...
இவர்களெல்லாம் இந்நூலில் வாழ்ந்துவிட்டு பள்ளியில் இடைநின்றவர்கள்.ஆனால் நம் மனதில் குடியேறிவிடுகிறார்கள்.
இவர்கள் வேறு வேறு பெயரில் தமிழகத்தின் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நிச்சயம் இருப்பார்கள். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பின் உங்கள் பள்ளியிலும் இருக்கலாம்;
இடை நின்றிருக்கலாம் .அவர்களைத் தேடி மீண்டும் பள்ளியில் சேர்க்க வைக்கும் முயற்சியே இந்நூலாசிரியர் நம்மை நோக்கி எழுப்பிய வினாக்களுக்கான விடை.
கவுன்ட் பவுன் - 16 நாட்கள் .

No comments:

Post a Comment