Saturday 29 December 2018

திருநூலாற்றுப்படை - 16

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 16



இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களுக்கு முன்னுரை தேவையில்லை. அதிலும் உலகின் மிக நீண்ட காப்பியமான மகாபாரதம் நம் வாழ்வோடும் ,இந்திய வாழ்வியலோடும் பிண்ணிப்பிணைந்த ஒரு காப்பியம் .பல்லாயிரக்கணக்கான கிளைக்கதைகள் கொண்டது .பல்வேறு எழுத்தாளர்களால் பல்வேறு காலகட்டங்களில்
பல்வேறு கோணங்களி்ல் பார்க்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற நூல் ...
தமிழிலும்
ராஜாஜின் வியாசர் விருந்து
சோ வின் மகாபாரதம் பேசுகிறது ...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
குர்சரண் தாஸ் அவர்கள் THE DIFFICULTY IN BEING GOOD என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலின் தமிழாக்கமே இந்நூல்.
அதனை சாருகேசி அவர்கள்
#நல்லவராக_இருப்பதென்றால்_சும்மாவா ?
என்ற தலைப்பில் மிக எளிய நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.
மகாபாரத கால வாழ்க்கையினை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அதில் தனக்கற்பட்ட அனுபவங்களையும் பிணைந்து தந்துள்ளார் ஆசிரியர்.
துரியோமனின் பொறாமை தொடங்கி
திரௌபதியின் தீரம்,
யுதிஷ்டிரனின் கடமை
அர்ஜூனனின் அவதி
தன்னலமற்ற பீஷ்மர்
கர்ணனின் கவலை
கிருஷ்ணரின் சூழ்ச்சி
அசுவத்தாமனின் பழிக்குப் பழி
யுதிஷ்டிரனின் மன வருத்தம்
மகாபாரதத்தின் தர்மம்
...
...
என பத்துத் தலைப்புகளின்கீழ் மகாபாரத காவியத்தின் முக்கிய பாத்திரங்களை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
ஒவ்வொரு பாத்திரத் தலைப்பின்கீழ் அந்தப் பாத்திரங்களோடு தொடர்புடைய மிக முக்கியமான - இன்றைய வாழ்நாளுக்குப் பொருந்தும் ஒரு கூற்று ..
நிச்சயமாக இதுவரை மகாபாரதத்தை இப்படியோர் கோணத்தில் யாரும் அணுகியிருந்ததில்லை.எழுதியதுமில்லை ..
இன்னமும் சில தவிர்க்க இயலா மாந்தர்களை ஏன் விட்டுவைத்தார் என்பது புரியாத புதிர்.
ஒருவேளை இன்னொரு பாகம் வெளிவரப்போகிறதோ ....?
அல்லது இவரது பாணியைப் பின்பற்றி வேறு யாரேனும் எழுதட்டும் என வழிவிட்டாரோ ..?
தெரியவில்லை.....!
அவர்கள்....
விதுரர்...
குந்தி...
அபிமன்யு ...
நகுலன்...
சகாதேவன்...
திருதராஷ்டிரன்...
காந்தாரி...
துரோணர்...
சகுனி...
துருபதன்...
சிகன்டி...
உத்தரன்...
உத்தரை...
கடோத்கஜன் ....
துச்சாதனன் ....
இவர்களின் பாத்திரங்களும் தவிர்க்க இயலாதவையே...
சமகாலத்திலும் இவர்களை பிரதிபலிப்போரும் நமது வாழ்வின் அங்கங்களே ...
நம் வாழ்வுப்பாதையில் நம்மைக் கடந்து செல்வோரே ...
இந்நூலை வாசியுங்கள் ...
பின்னர் மேற்கூறியவர்களைப் பற்றியும் சற்றே ஆசிரியரின் பாணியில் ஒப்பிட்டு அசை போடத் துவங்கிவிடும் உமது எண்ணம்...
முத்துக்குமரன்  சுரேஷ்

No comments:

Post a Comment