Sunday 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...6

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 6



ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யோகா கலையின் ஒட்டுமொத்த தென்னிந்திய அடையாளமாக அறியப்படுபவர்.தென்கயிலாய அடிவாரத்தை உலகறியச் செய்தவர்.எத்தனையோ கோடிக்கணக்கான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களின் மானசீக குருவாக , உள்மனத் தேடலின் வழிகாட்டியாகத் திகழ்பவர்.
அதேநேரம் இறை ஞானத்தோடு விஞ்ஞானம் ,நவீன நாகரீகம் ,வித்தியாசமான ஆடைக் குறியீடுகள் ,குளிர் கண்ணாடி ,
புல்லட் பயணம் ,
குழு விளையாட்டுக்கள் ,
கோடிக்கணக்கில் மரக்கன்றுகள் நடுதல் ,
சிவராத்திரி மகோற்சவக் கொண்டாட்டம் ,
கிராமப் புத்துணர்வு இயக்கம் ,
ஹைடெக் இமயமலை ,கைலாய யாத்திரை என்பது போன்ற செயல்பாடுகளால் இலட்சக்கணக்கான இளைஞர்களையும் ஈர்த்து தனது நிறுவனத்தையும் ஏன் தன்னையுமே கார்ப்பரேட் என்ற இடையாளத்துக்குள் கொண்டுவந்தவர்.
உலகப் புகழ்பெற்ற ஆதியோகி என்ற பிரம்மாண்டத்தை நிறுவி சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கண்டனத்திற்கு உள்ளானவர் .
இவரது எழுத்துக்களை வாசிப்பவர்கள் தனது ஆழ்மனம் எழுப்பும் வினாக்களுக்கு விடையறிந்துவிடுவார்கள்.இந்நூலும் அத்தகைய வரிசையைச் சேர்ந்ததே .
ஆசையே அழிவிற்குக் காரணம் என்ற துறவி புத்த மகானின் கருத்தை அப்படியே மறுதளித்து ' அத்தனைக்கும் ஆசைப்படு '
என்ற புதியதொரு உற்சாக சொற்றொடரை உருவாக்கி அனைவரின் உள்ளங்களையும் திரும்பிப் பார்க்க வைத்த அவரது புதிய யுக்தி ,சிந்தனை இந்நூலிலும் விரவிக்கிடக்கின்றது .
நீங்கள் யாராக இருந்தாலும் ,எந்த வயதினராக இருந்தாலும் ,
உங்களுக்கு எது வேண்டும் ? என்று வினவி அந்த விஷயத்தில் தெளிவு பெற உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குகிறார்
சத்குரு.
வெவ்வேறு தருணங்களில் ,வெவ்வேறு தலைப்புகளில் சத்குரு ஆற்றிய உரைகள் ,நேர்காணல்களின் எழுத்து வடிவத் தொகுப்பே இந்நூல்.
உங்கள் மனம் விரும்பும் ,தேடும் பல செய்திகள் ,வழிகாட்டல்கள் உள்ளே உங்களுக்காகக் கொட்டிக் கிடக்கின்றன.
கவுன்ட் டவுன் - 17 நாட்கள்

No comments:

Post a Comment