Thursday 8 September 2022

சாதனை மாணவர் விக்னேஷ்




இன்றைய பதிவின் கதாநாயகன் இவர்தான்.இவர் பெயர் P. விக்னேஷ். தற்பொழுது எங்கள் பள்ளியில் 12. ஆம் வகுப்பு படித்து வருகிறார். போர்ட்ரெய்ட், பென்சில் ஷேடிங் , கலர் பென்சில் ஷேடிங் என வெளுத்துக் கட்டுவார். குறிப்பாக  சுவரோவியங்களில் அதிக பங்களிப்பு உண்டு.

கடந்த வாரம் கூட புதுவையில் வெங்கட்டா நகர் பூங்காவில் சுவரோவியங்கள் வரைந்த குழுவில் இடம் பெற்றமைக்காக புதுச்சேரி அரசின் சபாநாயகர் கைகளால் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

மேலும் இவர் ஒரு சாரணரும் கூட .காந்திஜி சாரணர் படையின் படைத்தலைவராக இருந்து தன் படையை சிறப்பாக வழி நடத்தியவர். அத்துடன் சென்னையில் நடைபெற்ற கேம்ப்போரி 
எனும் பெருந்திரளணியில் கடலூர் மாவட்டத்தின் சார்பில்  பங்கேற்றபோது, என் வழிகாட்டலில், தன் திறமையின் காரணமாக கடலூர் மாவட்ட அணியானது மாநில அளவில் இரு முதல்  பரிசுகள் பெறக் காரணமாக இருந்தவர். மேலும் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான ராஜ்ய புரஸ்கார் விருது என்னும் பெருமை மிகு விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற Hues of Blue என்ற மூன்று நாள் ஓவியத்திருவிழாவில் பங்கேற்று பல்வேறு ஓவியப் பயிலரங்குகளில் கலந்துகொண்டதோடு, தன்னார்வலராகத் தொண்டு செய்து பாராட்டும், பரிசும் பெற்றவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற இவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகிறீர்களா? இதோ அவரது தொடர்பு எண்:


6382 371 573

No comments:

Post a Comment