Tuesday 18 April 2017

கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் -2017

 முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் ..!

             எங்கள் இயக்கம் கடந்த இருபத்து ஒரு ஆண்டுகளாக கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.
           இவ்வருடமும்  ஓவிய பயிற்சி முகாமை வரும் மே மாதம் முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரையிலும் நடத்த உள்ளோம் .
           எங்களிடம் பயிற்சிபெற்று தற்போது கவின்கலைக்  கல்லூரிகளில் ஓவியம் பயின்று பல்வேறு இடங்களில் பணியாற்றுகின்ற முன்னாள் மாணவர்களும் ,தற்போது ஓவியக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களும் ,புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களும் எங்களோடு இணைந்து மாணவர்களுக்கு ஓவியப்  பயிற்சியை அளிக்க உள்ளார்கள்.
           மேலும் எங்கள் ஸ்வாசிகா இயக்கம் தனது 22 ஆவது வயதில் அடி எடுத்து வைப்பதினை குறிக்கும் வகையில் பயிற்சி முகாம் வளாகத்தில் 22 மீட்டர் நீளமுள்ள ஒரே துணியில் 22 ஓவியர்களைக் கொண்டு 22 மணி நேரத்தில் 22 ஓவியங்களை பண்ணுருட்டியில் முதன் முறையாக சாதனை முயற்சியாகவும் நிகழ்த்த உள்ளோம் .சாதனை நிகழ்வு அரங்கேறும் வேளையில் இச் செய்தியைக் காணும்  அனைவரும் திரளாக வருகைதந்து எங்களை ஊக்கப் படுத்துமாறும் வேண்டுகின்றோம் .நன்றி !
          மேலும் பயிற்சி முகாமின் நிறைவு நாள் அன்று பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற  மாணவர்களின் படைப்புகள்  கண்காட்சியும் ,எனது ஓவியங்கள் மற்றும் சக ஓவியர்களின் கண்காட்சியும், புகைப் படக் கண்காட்சியும் ,பண்ணுருட்டி கவிதை கணேசன் அய்யா அவர்களின் அரிய ,தொல் பொருட்கள்,நாணயங்கள் 250 வகையான நெல் வகைகளின் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.
         எனவே அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறும் இச் செய்தி அனைவரையும் சென்று அடையும் வகையில் இதனை தங்கள் பக்கங்களில் பகிருமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் -2017



No comments:

Post a Comment