Sunday 23 April 2017

மிருகங்களைக் காப்போம்



           புதுவையில்  உள்ள ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடத்  தக்கவர் நண்பர் கந்தப்பன் அவர்கள். அவரது செல்லக் குமாரன் செல்வன் யோகேஸ்வரனின் தனிநபர் ஓவியக் கண்காட்சிக்கு அஞ்சல் மூலம் அழைப்பு வந்தது .
           நேற்று ஆரோவில் மாத்ரி  மந்திர் செல்லவும் முன் அனுமதி பெற்றிருந்ததுடன் ஓவிய நண்பர் திரு சுகுமாரன் அவர்களும் திருச்சிற்றம்பலம் பல்மேரா மைதானத்தில் செயல்பட்டுவரும் பல்மேரா ஆர்ட் கேலரியில் நடைபெறும் ஓவியர் சக்திகுருநாதன் என்பவரின் கண்காட்சியையும் காண அழைப்பு விடுத்திருந்தார் ..ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிடும் உத்தேசத்தில் ஓவிய மாணவர்கள் நால்வர் புடைசூழ கிளம்பினேன் புதுவைக்கு .
           முதலில் ஆரோவில். பின்னர் அங்கிருந்து நேராய் பல்மேரா ஆர்ட் கேலரி விஜயம் ...அதன்பின்னர் அருகில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேய பெருமான் அருள்பெற்று நிறைவாக புதுவை மிஷன் தெருவில் இயங்கிவரும் வண்ண அருவி ஆர்ட் கேலரிக்கு சென்றோம்....வளரும் ஓவியக் கலைஞன் செல்வன் யோகேஸ்வரன் கந்தப்பன் அமைத்திருந்த ஓவியக் கண்காட்சியைக் காண.
        ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கே உரிய அமைதியான அப்பாவித்தனமான முகம்.பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்கள் ..தூரிகை பிடித்திருந்த .கையில்  தற்போது டென்னிஸ் பேட் .தந்தையை அணைத்தவாறு நின்றிருந்தான்.அவன் வரைந்திருந்த அனைத்து ஓவியங்களும் ஸ்டெட்லர் காணப்படும் பென்சில் கொண்டு வரைந்தவை ,,கந்தப்பனின் மரபணு ஆயிற்றே ...கேட்கவா வேண்டும்...?எல்லா ஓவியங்களும் அருமை...ஆறாம் வகுப்பிலிருந்து எஜாம் வகுப்பு மாணவன் வரைந்தது என்றால் நம்ப முடியாத அளவுக்கு விரல் வித்தையை காகிதங்களில் காண்பித்திருந்தான்,
            தனது மைந்தனின் ஓவியக்  கலை வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கும்  நண்பரைக் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் .அழைப்பிதழில் அவன் பங்கேற்ற போட்டிகள் ..கண்காட்சிகள் ...விருதுகள் குறித்து ஆவணப்படுத்தி வெளியிட்டு இருந்தது சிறப்பாகவும் அவற்றின் எண்ணிக்கை  சற்றே மலைப்பாகவும் இருந்தது ....!வெல்டன் பையா ...!சிறுவன் யோகேஷ்வரனின் பெயரிலேயே யோகம் இருக்கிறதே ...அவன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தி விடைபெற்றோம்.கூடுதலாக எங்களுக்கு நிறைய ஓவியக் கலைஞர்களின் அறிமுகமும் கிடைத்தது கூடுதல் சிறப்பு...
            உடன் அழைத்துச் சென்றிருந்த மாணவர்கள் எல்லோருக்குமே புதுவை ஓவியக் கண்காட்சி அனுபவங்கள் புதியவை ..அதுவும் தங்களை விட வயதில் இளைய சிறுவனின் ஓவியக்  கண்காட்சி நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

No comments:

Post a Comment