Sunday 23 April 2017

ஆரோவில் காட்சி

         நேற்று (23-04-2017 -அன்று  ) காலை ஆரோவில் மாத்ரி மந்திர் சென்றிருந்தோம்.காலை 9 மணிக்கு எனக்கு யுனிவர்சல் குளோப் தரிசிக்க அனுமதி கிடைத்திருந்ததால் ,முதலில் நான் மட்டும் சென்று வந்தேன் பின்னர் உடன்வந்த மாணவர்கள் வியூ பாயிண்ட் சென்று பார்வையிட்டார்கள் .

         எப்போதும் நான் என்னுடன் வரைவதற்கான உபகரணங்களை கொண்டு செல்வது வழக்கம் .செம்மண் பூமியில் பசுமைச் சூழலில் நீல வானப் பின்னணியில் சூரிய ஒளியில் தக தாகத்துக்கு கொண்டிருந்த அந்த தங்க நிற கோளம் என் விரல்களைப் பர பரக்க வைத்தது.பிறகென்ன ...கிடைத்த நிழலில் ஒரு கருங்கல் பலகையில் எடுத்துச் சென்ற காகிதத்தை விரித்தேன்.சுதா -68 என்று ஒரு வண்ணக் கட்டி ரகம் --அதைக் கையில் எடுத்தேன் .என் விரல்கள் காகித மேடையில் நர்த்தனமாடத் தொடங்கின .சரியாக 10 நிமிடத்திற்குள் காட்சி தயாரானது ...உடன் மாணவன் லட்சாராமனும் ஒருபுறம் பென்சில் கொண்டு கருப்பு வெள்ளையில் வரைந்துகொண்டு இருந்தான் ... !

          நல்ல வேளை உடன் வந்த பார்வையாளர்கள் யாரும் சூழ்ந்துகொண்டு சங்கடப் படுத்தாமல் தொலைவில் நின்று ரசித்தது  மகிழ்வைத் தந்தது ...!படம் வரைந்தது மனதிற்கு நிறைவைத் தந்தது .நிறைவுற்ற படம் உங்கள் பார்வைக்கு.







No comments:

Post a Comment