மக்கள் தலைவர்
மக்கள் மனதில் நிற்கின்ற
மாபெரும் தலைவர் நீர்தானே
மாணவர் பசியைத் தீர்த்திடுமோர்
மாபெரும் திட்டம் தந்தவரே
திரைப் படங்களிலே நடித்தவர்
தீராப் புகழைப் பெற்றவரே
மக்கள் திலகம் என்றேதான்
பட்டப் பெயரைக் கொண்டவரே
இலவச சீருடை தந்தவரே
ஈகை குணங்கள் நிறைந்தவரே
தமிழக மக்களின் துயர்நீக்க
தங்கத் திட்டங்கள் தந்தவரே
ரோஜா நிறத்தைக் கொண்டவரே
குழந்தையைப் போல சிரிப்பவரே
எளிமை குணங்கள் நிறைந்தவரே
தாய்மை உள்ளம் கொண்டவரே
எம்ஜியார் என்றே அன்போடு
எம்மக்கள் உம்மை அழைக்கின்றார்
தமிழகம் உள்ள வரையிலுமே
உம்புகழ் என்றும் வாழ்ந்திடுமே .
No comments:
Post a Comment