Tuesday 20 February 2018

தென்னை மரம்

தென்னை மரம்

ஓங்கி ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இங்கே இருக்குது
நீல வானம் தொட்டுவிட தலையை விரித்து துடிக்குது

படிப் படியாய் வடுக்கள் கொண்டு சாய்ந்து தரையில் நிற்குது
குலை குலையாய் காய்கள் காய்த்து மட்டை   நடுவில் தொங்குது

தென்றல் காற்றில் விரித்த தலையை ஆட்டி ஆட்டி மகிழுது
குளிர்ந்த இள நீரை வழங்க காத்து தவமும் கிடக்குது

வேரில் உறிஞ்சும் நீரையெல்லாம் இனிப்பினிப்பாய்  மாத்துது
இவ்வளவு உயர்ந்திருந்தும் நிழலைத் தர மறுக்குது

கீற்றுகளில் ஓலை கொண்டு சலசலத்து அசையுது
புதிய பாளை விரித்து விரித்து பூக்கள் மழை பொழியுது

தரையில் நின்று மேலே பார்த்து இள நீரூக் கேங்கும் எங்களை
முயன்று முயன்று மேல்நோக்கி ஏறி வர அழைக்குது

உச்சி தொட்டு காய் பறித்து உண்ணச் சொல்லி பார்க்குது
ஊர்தோறும் மகிழ்ந்திடவே சாமரமாய் வீசுது 

முயற்சி செய்து உயரம் தொட்டால் உயரம் கூடும் வாழ்க்கையில்
என்றதொரு பாடம் நன்றாய் தென்னை  மரம்   நடத்துது



 

No comments:

Post a Comment